search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியட்நாமில் அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் உயிரிழப்பு - கோமாவில் 5 பேர்
    X

    வியட்நாமில் அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் உயிரிழப்பு - கோமாவில் 5 பேர்

    வியட்நாமில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட 7 பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் கோமாவில் உள்ளனர். #Vietnam
    ஹனோய்:

    வியட்நாம் தலைநகர் ஹனோயில் தொடர் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று, இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திடீரென மயங்கி விழ அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகளவில் போதை மருந்து உட்கொண்டதன் காரணமாக அவர்கள் மயங்கியதாக கூறப்பட்டது.

    சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சுயநினைவு இன்றி கோமாவில் உள்ளனர். இதனை அடுத்து, இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×