search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் திடீர் சந்திப்பு
    X

    இலங்கை பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் திடீர் சந்திப்பு

    வியட்நாமில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், எதிர்பாராத சந்திப்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார்.

    இங்கு இரண்டு நாட்கள் இருந்து ஆலோசனை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, 29-ம் தேதி கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.



    இந்நிலையில், வியட்நாமில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் எதிர்பாராத விதமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பை அடுத்து, இருவரும் இருநாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    Next Story
    ×