search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udumalai"

    • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
    • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.

    • உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
    • 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 1098 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் உதவி மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பிறகு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அது ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி மாணவியின் தாயார் வக்கீல் உதவியுடன் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உடுமலை குட்டைத்திடலில் தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன
    • பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது

    உடுமலை :

    உடுமலை போலீஸ் சார்பில் மது போதை, விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை போலீசார் பறிமுதல் வைத்துள்ளனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டும். வழக்கு முடிந்ததும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கு முடிந்தது மற்றும் உரிமை கோரப்படாத வாகனங்களை, உரிய உத்தரவு அடிப்படையில், பொது ஏலம் விட வேண்டும் .

    இந்தநிலையில் உடுமலை குட்டைத்திடலில் மேம்பாலத்தின் கீழ், தனியார் வீட்டுமனை அமைந்துள்ள பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு இல்லாமலும், வெயிலிலும், மழையிலும் நனைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் வீணாகி வருகிறது. புதர் மண்டியும், பழைய இரும்புக்குக்கூட பயன்படாத அளவிற்கு வீணாகின்றன. எனவே நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்களை உரிய முறையில் பாதுகாக்கவும், உரிமை கோரப்படாத வாகனங்களை, வழிமுறைகள் அடிப்படையில் ஏலம் விட்டு, அரசுக்கு நிதி வருவாயை ஏற்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது.
    • குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது.

     உடுமலை :

    உடுமலை போலீஸ் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவை பராமரிக்கப்படாமல் உடைந்து உள்ளது.

    மேலும் பூங்கா பராமரிப்பின்றியும், குடியிருப்பை சுற்றிலும் புதர் மண்டியும் காணப்படுகிறது இதனால் இங்கு சிறுவர்கள் விளையாட அச்சமடைகின்றனர். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.எனவே போலீஸ் குடியிருப்பில் உள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

    உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், 2 ெரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில் செஞ்சேரிமலை ரோட்டில் பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில் பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

    • 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
    • மாணவர்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் உடுமலை தனியார் அரங்கில் நடந்தது.

    முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார்.பலரும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற வீராசாமியை அனைவரும் வாழ்த்தினர். துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை :

    உடுமலை புத்தகாலயம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் தளி ரோடு தேஜஸ் அரங்கில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுகதை, கவிதை, மாணவர்களுக்கான பொது அறிவு, தமிழ், ஆங்கில நாவல்கள், வண்ண கோலங்கள், மருத்துவம், திரைப்படம் என ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தேவையான புத்தகங்களை வாங்கியும் செல்கின்றனர்.

    இந்நிலையில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கண்ணகி தலைமையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டனர். பின் தேவையான புத்தகங்களை வாங்கினர். இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அலுவலர் சரவணன் செய்திருந்தார். தொடர்ந்து வலசுபாளையம் சக்தி பவளக்கொடி குழுவினரின் வள்ளி, கும்மியாட்டம் கலைநிகழ்ச்சி நடந்தது.

    • முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இ. டி. என். பொது மேலாளர் மோகன்ராஜ் ,அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி ,உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், சமூக ஆர்வலர்கள் ராமராஜ் , செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.முடிவில்உதவி பயிற்சி அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    • புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது.
    • பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல், ஆணையாளர் எஸ்.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) மு.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், மேற்கூரை பழுதான நிலையில் உள்ளதாலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது. தேவனூர்புதூர், கொடிங்கியம், பூலாங்கிணர், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டி சமத்துவபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள சமையல் கூடம், கழிப்பறை, சத்துணவு மையக்கட்டிடம் ஆகியவற்றை, கலெக்டரின் அனுமதி பெற்று இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள சங்கராமநல்லூர், சமத்துவபுரம் ,பாலப்பம்பட்டி, சமத்துவபுரம் ,கோட்டமங்கலம் ,சமத்துவபுரம் பகுதிகளில் உள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முபாரக் அலி, கதிரேசன், ராஜமாணிக்கம், சாமி ,அருண், மகாலிங்கம், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி, குடிமங்கலம் முன்னாள் பொறுப்பாளர் கிரி, சியாம் மற்றும் காரத்தொழவு சிவக்குமார், சங்கராமநல்லூர் பேரூர் செயலாளர் சாதிக் அலி, மடத்துக்குளம் பேரூர் செயலாளர் பாலகிருஷ்ணன், குமரலிங்கம் பேரூர் செயலாளர் ஆச்சிமுத்து, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காவியா ஐயப்பன், உடுமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மல்லிகா கருப்புசாமி, ஷர்மிளா ஜாகிர் உசேன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரகுபதி கருப்பம்மாள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
    • வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை போலீஸ் நிலையத்துக்குள் கையில் பளபளக்கும் கத்தியுடன் வாலிபர் ஒருவர் நுழைந்தார்.உடனடியாக அவரிடமிருந்த கத்தியை பறித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் உடுமலை நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.உடனடியாக பொள்ளாச்சி சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த மத்தீனை தொடர்பு கொண்டு வழியில் எங்கும் வாகனத்தை நிறுத்தாமல் பாதுகாப்பாக திரும்புமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.அத்துடன் அந்தியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தவரை போலீசார் சென்று பாதுகாப்புடன் உடுமலை அழைத்து வந்துள்ளனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தி.மு.க.வினர் உடுமலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.சம்பவம் குறித்து தி.மு.க.வினர் கூறியதாவது:-நகராட்சித் தலைவர் மத்தீனை கொலை செய்யும் நோக்கத்தில் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர்.அவர்கள் சரணடைந்துள்ள ஷேக் தாவூத் என்ற இந்த நபரிடம் நகராட்சித் தலைவரின் புகைப்படத்தைக் காட்டியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்துள்ளார்.எனவே அந்த மர்ம நபர்கள் யார்? அவர்களை ஏவியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்'என்று கூறினர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-சரணடைந்த நபர் பெயர் ஷேக் தாவூத்(வயது 21).தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் உடுமலை வந்துள்ளனர்.இவருக்குத் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்றுள்ளார். பிறந்த குழந்தை இறந்து விட்டதால் பாதிக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சுற்றி வந்துள்ளார்.மேலும் உடுமலையிலேயே டீ மாஸ்டர்,பூ வியாபாரம் என பல வேலைகளை செய்துள்ளார்.தற்போது போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்த இவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.அவர் கூறிய தகவல்கள் உண்மையா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.அவரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று போலீசார் கூறினர்.கூலிப்படையை ஏவி உடுமலை நகராட்சித் தலைவரைக் கொல்ல சதி நடந்துள்ளதாக தகவல் பரவியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
    • 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

    மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் மாற்றம் இல்லை. உடுமலை தொகுதியில் 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    ×