search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் 4 வழிச்சாலைக்காக பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
    X

    பாலம் கட்டும் பணிகளை படத்தில் காணலாம்.

    உடுமலையில் 4 வழிச்சாலைக்காக பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

    • உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 2 ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.

    உடுமலை :

    மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பழநி, சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலங்கள், 2 ெரயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது உடுமலை-செஞ்சேரிமலை ரோடு மற்றும் உடுமலை-பல்லடம் மாநில நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில், குறுக்கிடும் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.இதில் செஞ்சேரிமலை ரோட்டில் பாலம் கட்டுமான பணிகளின் போது, போக்குவரத்து பாதிக்காமல் இருக்க தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ஒரு பகுதியில், பாலம் கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது. மறு பகுதியில் பணிகள் இன்னும் துவங்கவில்லை.முக்கிய ரோடுகளின் குறுக்கிடும் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற பிறகு ஆறுகளின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.

    Next Story
    ×