search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடத்துக்குளம்"

    • மதுரை ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
    • பெரும்பாலான ரெயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.

    மடத்துக்குளம் :

    திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில், மதுரை ெரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அகல ெரயில்பாதை பணிகள் துவங்கும் முன், இந்த நிலையம் முழுமையாக இயங்கி வந்தது.அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று ெரயில் சேவை துவங்கிய பிறகு, இந்த ெரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ெரயில்கள் மடத்துக்குளம் நிலையத்தில் நிற்பதில்லை.இதனால் அப்பகுதியை சேர்ந்த பயணிகள் உடுமலை அல்லது பழநிக்குச்சென்று ெரயில் ஏற வேண்டியுள்ளது.

    இவ்வாறு பயன்பாடு இல்லாததால், மடத்துக்குளம் ரெயில் நிலையம் தற்போது பரிதாப நிலையில் உள்ளது.டிக்கெட் கவுன்டரை உள்ளடக்கிய கட்டடம் சிதிலமடைந்து மேற்கூரையில் செடிகள் முளைத்து வருகிறது.பயணிகள் காத்திருக்கும் பிளாட்பார்ம் பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு பயணிகள் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.கழிப்பிடமும் நிரந்தரமாக பூட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரெயில் நிலையம் என்பதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு அவ்விடம் படுமோசமான நிலையில் உள்ளது.

    மடத்துக்குளம் புதிதாக தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், கோர்ட்டு என தாலுகாவுக்குரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதே போல் அமராவதி பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், கரும்பு விளைகிறது. திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் நூற்பாலைகள், காகித ஆலைகள், தீவன உற்பத்தி தொழிற்சாலைகள் என 25க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இப்பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, இயற்கை மற்றும் தொழில் வளம் மிக்க பகுதியில், ெரயில் சேவை கிடைக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ெரயில்பாதையில் இயக்கப்படும் அனைத்து ெரயில்களையும், மடத்துக்குளத்தில் நிறுத்த வேண்டும். மேலும், டிக்கட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    • துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
    • 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் வட்டாரம் துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2021- 2022-ம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட துங்காவி கிராமத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    துங்காவியில் 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 தென் னங்கன்றுகள், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், 22 சிறு,குறு விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், 33 எண்ணிக் கையில் தார்ப்பாய்கள், 5 தெளிப்பான்கள், மின்கலத்தெளிப்பான் கள் ஆகியவை வழங்கப்ப ட்டுள்ளது. மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் வரப்புப் பயிரில் உளுந்து சாகுபடி செய்வதற்கும், பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் 8ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈயைக்கட்டு ப்பாட்டுக்கு ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு ஒட்டுண்ணி, உயிர் உரங்கள், உளுந்து மற்றும் பிற விதைகள் வினியோகம் என மொத்தம் 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகள் விவர ங்களைக்கே ட்டறிந்தார். அத்துடன் விவசாயிகளின் திட்டங்கள், எந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், மாவட்ட கலெக்டரின் (வேளாண்துறை) நேரடி உதவியாளர் மகாதேவன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரத்தில், மானிய திட்டத்தின் கீழ் 255 ஹெக்டருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    பிரதமரின் நுண்ணீர்பாசனத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு நீர் சிக்கனம், களைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் அதிக விளைச்சலுக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்த முறையாகும்.நீண்ட கால வயதுடைய பயிர்களுக்கும், காய்கறி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். சொட்டுநீர் பாசனம் வாயிலாக, திரவ உரங்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்களை, வெஞ்சுரி மற்றும் நீரேற்றம் கருவிகளின் உதவியுடன் பாசன நீரில் கலந்து உரங்களை பயிரின் வேர்பாகத்தில் நேரடியாக கொடுக்கலாம். பயிரின் தேவைகேற்ப உரத்தை பலமுறை பிரித்து இடவும் சாத்தியமாகிறது. பாசன நீரும் உரமும் தொடர்ந்து வேர்ப்பகுதியில் பயிருக்கு கிடைப்பதால், நடவு முதல் அறுவடை வரை, பயிர் வளர்ச்சி நன்கு அமைந்து, விளைச்சல் அதிகரிக்கிறது.

    மணற்பாங்கான பூமி மழை குறைவான பகுதிகள், சரிவான பகுதி மற்றும் பாசன முறைகளில் பயிர் சாகுபடி மேற்கொள்ள இயலாத பகுதி போன்ற நிலங்களுக்கு சொட்டு நீர் பாசனம் சிறந்த முறையாகும்.பயிர் சாகுபடி பரப்பில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே ஈரமாக்கபடுவதால் களை வளர்ச்சி பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.மேலும் 75 சதவீதம் வரை மனித உழைப்பு சேமிக்கப்படுகிறது. பூச்சி, பூஞ்சாணங்களின் தாக்குதல் மிகவும் குறைகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 855 ரூபாய் வரையும், மற்ற விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 530 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.மேலும் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தோட்டகலைத்துறை வாயிலாக டீசல் பம்ப்செட், மின் மோட்டார் பம்ப் செட் நிறுவ 50 சதவீதம் மானியம், ரூ.15 ஆயிரமும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம், 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.அதோடு, பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க 50 சதவீதம் என ஒரு கன மீட்டருக்கு ரூ.350 வீதம், ஒரு பயனாளிக்கு ரூ. 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மடத்துக்குளம் உள் வட்டத்தைச் சார்ந்த கிராமங்களுக்கு மட்டும் போர்வெல் அமைக்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார், வங்கி புத்தக நகல், புகைப்படம்- 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி, துங்காவி, தாந்தோணி, மைவாடி, கடத்தூர், கணியூர், மெட்ராத்தியை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன்- 96598 38787 என்ற எண்ணிலும்,கொமரலிங்கம், சங்கராமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அ.கண்ணாடிபுத்தூர், பாப்பான்குளம், ச. கண்ணாடிபுத்தூர் விவசாயிகள் உதவி தோட்டகலை அலுவலர் நித்யராஜ் - 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற இணையதளத்தில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பித்தும், சொட்டு நீர் பாசன விபரங்கள் மற்றும் மானிய விபரங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஒன்றிய தலைவர் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஏற்பாட்டில் நடந்தது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்ச்சி தாந்தோணியில் ஒன்றிய தலைவர் மணியன் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் அகிலேஷ் ஏற்பாட்டில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் மங்களம் ரவி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாநில மேலாண்மை பிரிவு செயலாளர் சாய் பூர்ணிமா, மாவட்ட ஓபிசி. அணி தலைவர் சிவலிங்கம், மாவட்ட ஐடி., பிரிவு தலைவர் குணசேகர், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கதிரவன், உடுமலை வடக்கு ஒன்றிய தலைவர் நாகமாணிக்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் கௌதமன், பொருளாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புத்தாடை வழங்கப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
    • 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

    மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் மாற்றம் இல்லை. உடுமலை தொகுதியில் 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    உடுமலை பகுதியில் (காலை 9 மணி முதல் பகல் 2 மணி) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போடிபட்டி, அண்ணா நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம், இராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டப்பட்டி, ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, ராமசாமி நகா், யுகேசி நகா், தீயணைப்பு நிலையம் பகுதி. மடத்துக்குளம் பகுதியில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளைய நல்லூா்.

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஜி.ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் தடை ஏற்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

    • சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும்.
    • மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில் முதல் கட்டமாக துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமுல்படுத்த பட்டு உள்ளது. இத்திட்டத்தை அம்மா உணவகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மடத்துக்குளம் வட்டார கிளை தலைவர் அபிராமி ,செயலாளர் பூங்கோதை, பொருளாளர் தனலட்சுமி ,மாவட்ட இணைச்செயலாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டு கால வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் வரும் 30ந் தேதி தர்ணா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல உடுமலை ஒன்றிய அலுவலகம் முன்பும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 1,200 வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, 2022--23 நிதியாண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2022 -23 ம் நிதியாண்டில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி, கத்திரி, மிளகாய், பாகல், பீர்க்கன், சுரைக்காய் மற்றும் தர்பூசணி புதிதாக பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.வெங்காயம் பயிரிட, வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்கள், ஒரு விவசாயிக்கு, 2 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.கொய்யா, பப்பாளி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து நாற்றுக்கள் வழங்கப்படும். ஒரு விவசாயி 4 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.

    தோட்டங்களில் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் அளவில் கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் 300 மைக்ரான் அளவில் தார்ப்பாய் அமைத்து நீரை சேமித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம். இது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தேனீப்பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக, ஒரு யூனிட்டிற்கு ரூ.24 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.பவர் ஸ்பிரேயர் வாங்க 2,500 ரூபாயும், 8 எச்.பி., க்கு மேல் குதிரைத்திறன் கொண்ட பவர் டில்லர் மானியத்தில் பெற ஒன்றுக்கு 60,000 வழங்கப்படுகிறது.விவசாயிகள் 600 சதுர அடி அளவில் சிப்பம் கட்டும் அறை தோட்டங்களில் அமைத்து கொள்ள ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    சின்ன வெங்காயம் இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் ஒரு யூனிட் வெங்காய பட்டறை அமைக்க பின்னேற்பு மானியமாக ரூ.87,500 மானியம் வழங்கப்படுகிறது.நீர் அதிகம் ஆவியாகாமல் தடுக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் நிலப்போர்வை பயன்படுகிறது. தக்காளி, மிளகாய், கத்திரி, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் நகரும் காய்கறி வண்டிகள் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஏழை வியாபாரிகளும் பயன்பெறலாம்.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அல்லது ஏற்கனவே செய்து வரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியமும், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு, ரூ. 1,200 ரூபாயும் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-, 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மைவாடி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், பாப்பான்குளம், கண்ணாடிப்புதூர், கடத்தூர், வேடபட்டி, கணியூர் விவசாயிகள் விமல்குமார் 99438 38146, சங்கராமநல்லூர், கொழுமம், கொமரலிங்கம், சோழமாதேவி விவசாயிகள் நித்யராஜ், 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர், சுரேஷ்குமார் 97905 82010, தோட்டக்கலை அலுவலர் காவ்ய தீப்தினி 99524 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசு வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது.
    • தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது.

    மடத்துக்குளம் :

    மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். திமுக அரசு மக்களை வஞ்சிக்கிறது, தேர்தல் வாக்குறுதிக்கு புறம்பாக மின் கட்டண உயர்வை அதிகரித்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதே போல சட்டம் ஒழுங்கு கட்டுப்பாடு இன்றி மக்கள் அச்சப்படும் நிலையில் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். நால்ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    • அறிவியல் ஆய்வக கட்டிடத்திற்கு அரசு ரூ.17.34 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
    • கட்டிடத்தினை பொள்ளாச்சி எம்.பி., கு.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.

    மடத்துகுளம் :

    மடத்துக்குளம் தாலுகா குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆய்வக கட்டிடம் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்காக அரசு ரூ.17.34 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த கட்டிடம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணி நிறைவு அடைந்தது. இந்த கட்டிடத்தினை பொள்ளாச்சி எம்.பி., கு.சண்முகசுந்தரம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் காவியா அய்யப்பன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசு துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • 76.92 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • விபத்துகளை தவிர்க்க தேவையான பிரதிபலிப்பான், எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளது.

    மடத்துக்குளம்:

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. ஆற்றின் குறுக்கே 1984ல் மேம்பாலம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால்பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.கனரக வாகனங்கள் தொடர் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் பாலத்தின் ஓடுதளத்தில் விரிசல், அதிர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 2015ல்தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 76.92 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதன்பின்னர்தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், குறிப்பிட்ட இடைவெளியில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஓடுதளத்தில், ஆங்காங்கே குழிகள் உருவாகி வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்துகிறது.

    பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது, பழநிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள் பாலத்தின் நடைபாதையில் செல்ல முடியாமல் ரோட்டிலேயே நடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் பாலத்தை ஒட்டி ஆற்றின் கரையில் உள்ள சீமை கருவேல மரங்கள், தடுப்பு சுவர் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ளது. இரவு நேரங்களில், விபத்துகளை தவிர்க்க தேவையான பிரதிபலிப்பான், எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாமல் உள்ளது.தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தை குறிப்பிட்ட இடைவெளியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

    கழுகரை அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் இறைச்சிகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச் செல்கின்றனர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் தாலுகா கழுகரையிலிருந்து வேடபட்டி செல்லும் ரோடு, 2  கி.மீ., நீளமுடையது. இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இறைச்சிக் கழிவுகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச்செல்கின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: 

    கழுகரை அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் இறைச்சிகளை மூட்டையாக கொண்டு வந்து சாலையில் வீசிச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இதை உண்ண வரும் நாய்கள் மூட்டைகளை கடித்துக்குதறுவதால் சாலை முழுக்க இறைச்சிக் கழிவுகள் பரவிக்கிடக்கிறது. இதற்காக சண்டையிடும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துக்கள் நடக்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதை கொட்டுபவர்கள் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    ×