search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
    • 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் வட்டாரம் துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2021- 2022-ம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட துங்காவி கிராமத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    துங்காவியில் 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 தென் னங்கன்றுகள், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், 22 சிறு,குறு விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், 33 எண்ணிக் கையில் தார்ப்பாய்கள், 5 தெளிப்பான்கள், மின்கலத்தெளிப்பான் கள் ஆகியவை வழங்கப்ப ட்டுள்ளது. மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் வரப்புப் பயிரில் உளுந்து சாகுபடி செய்வதற்கும், பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் 8ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈயைக்கட்டு ப்பாட்டுக்கு ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு ஒட்டுண்ணி, உயிர் உரங்கள், உளுந்து மற்றும் பிற விதைகள் வினியோகம் என மொத்தம் 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகள் விவர ங்களைக்கே ட்டறிந்தார். அத்துடன் விவசாயிகளின் திட்டங்கள், எந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், மாவட்ட கலெக்டரின் (வேளாண்துறை) நேரடி உதவியாளர் மகாதேவன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×