search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
    X

      விழாவில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் சான்றிதழ்களை வழங்கிய காட்சி. 

    உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

    • முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

    உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் இ. டி. என். பொது மேலாளர் மோகன்ராஜ் ,அரசு கலைக் கல்லூரி முதல்வர் கல்யாணி ,உடுமலை நகராட்சி தலைவர் மத்தின், சமூக ஆர்வலர்கள் ராமராஜ் , செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 69 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.முடிவில்உதவி பயிற்சி அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

    Next Story
    ×