search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
    X

    தி.மு.க.பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

    உடுமலையில் தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா

    • தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    பெரியார் பிறந்தநாளையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள சங்கராமநல்லூர், சமத்துவபுரம் ,பாலப்பம்பட்டி, சமத்துவபுரம் ,கோட்டமங்கலம் ,சமத்துவபுரம் பகுதிகளில் உள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முபாரக் அலி, கதிரேசன், ராஜமாணிக்கம், சாமி ,அருண், மகாலிங்கம், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி, குடிமங்கலம் முன்னாள் பொறுப்பாளர் கிரி, சியாம் மற்றும் காரத்தொழவு சிவக்குமார், சங்கராமநல்லூர் பேரூர் செயலாளர் சாதிக் அலி, மடத்துக்குளம் பேரூர் செயலாளர் பாலகிருஷ்ணன், குமரலிங்கம் பேரூர் செயலாளர் ஆச்சிமுத்து, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காவியா ஐயப்பன், உடுமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் மல்லிகா கருப்புசாமி, ஷர்மிளா ஜாகிர் உசேன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரகுபதி கருப்பம்மாள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×