search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uddhav Thackeray"

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது.
    • ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான நேற்று அவர் அமராவதிக்கு சென்றார். அங்கு நடத்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    உலகின் நம்பர் ஒன் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறிக்கொள்ளும் பா.ஜனதாவுக்கு மற்ற கட்சிகளில் பிளவை ஏற்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது.

    நீங்கள் சிவசேனாவை கொள்ளையடித்தீர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை கொள்ளையடித்தீர்கள். நாளை வேறு எதையாவது கொள்ளை அடிப்பீர்கள்.

    நீங்கள் நாட்டுக்கு சொந்தமானதை விற்பனை செய்கிறீர்கள். மற்றவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறீர்கள். உலகின் மிகபெரிய கட்சியான பா.ஜனதாவுக்கு ஏன் இந்த நிலை வந்தது?. ஏனென்றால் உங்களிடம் அதிகாரத்தின் பெருமை இல்லை. தன்னம்பிக்கை இல்லை.

    பா.ஜனதா இவ்வளவு பெரிய மற்றும் பலம்பெற்ற கட்சியாக மாறியபிறகும், தேர்தலில் வெற்றி பெற முடியாது என நினைக்கிறது. எனவே எதிராளிகளை இல்லாமல் செய்ய அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்துகின்றனர்.

    மகாராஷ்டிராவில் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த பா.ஜனதாவை சிவசேனா தனது தோளில் சுமந்து மாநிலத்தில் அதன் அடித்தளத்தை விரிவுபடுத்த உதவியது.

    ஆனால் நீங்கள் எங்களை தற்போது அரசியலில் இருந்து ஒழித்துவிட பார்க்கிறீர்கள். இதுதான் உங்களின் இந்துத்வா.

    பாலாசாகேப் தாக்கரே உங்களை காப்பாற்றினார். இல்லையெனில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உங்களை குப்பை தொட்டியில் வீசியிருப்பார். பாலாசாகேப் தாக்கரே தற்போதைய பிரதமருக்கு ஆதரவு அளிக்காவிட்டால் அவர் பிரதமராகி இருக்க முடியுமா?. இதை மற்றவர்களிடம் கேட்பதை விட உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தற்போது தேர்தலில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் நோக்கிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினை கொண்டு வரப்படுகிறது. தேர்தல் முடிந்ததும் இந்த பிரச்சினை கிடப்பில் போடப்படும்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை எழுப்பப்படும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்ப்பு வழங்கியது. பா.ஜனதா எதையும் செய்யவில்லை.

    ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருமாறு நாங்கள் கோரியிருந்தோம். ஆனால் அதை கொண்டுவர அவர்களுக்கு தைரியம் இல்லை.

    ராமர் கோவிலுக்கான போராட்டத்தின் போது இந்துத்வாவாதிகள் என்று கூறிக்கொண்டவர்கள் எலி பொந்தில் பதுங்கி இருந்தனர்.

    ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கலாம். ஆனால் கட்சியின் பெயரை மாற்றும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. சிவசேனா என்ற பெயர் எனது தாத்தா கேசவ் தாக்கரே வழங்கியது. இதை யாரும் திருட விடமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி வாய்திறக்க மறுக்கிறார்
    • ஆனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சிவ சேனா கட்சியின் (UBT) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியதாவது:-

    துரோகிகள் மற்றும் பயனற்றவர்கள் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த வகையான அரசியல் வீழ்ச்சி அடையும். ஏனென்றால் மகாராஷ்டிரா துரோகிகளால் ஆட்சி செய்யப்படும் மாநிலமாக பார்க்கப்படுகிறது. அவர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    மத்திய பிரதேசத்தில் முன்னதாக பிரதமர் மோடி பேசும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சொன்னார். தற்போது அந்த கட்சியை தன்னுடன் நினைத்து உள்ளார். இதனால் 70 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தவர்களுடன் பிரதமர் மோடி பிம்பம் பிரதிபலிக்கும். இந்த இந்துத்வா உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி சோதனை அமைப்புகளை மணிப்பூருக்கு அனுப்புங்கள். மணிப்பூரை எரித்துக் கொண்டிருப்பவர்கள் தானாக உங்கள் கட்சியில் இணைந்து விடுவார்கள்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

    • எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை.
    • பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும்.

    மும்பை :

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொண்டர்களை ஊக்கப்படுத்த உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விதர்பா மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். நேற்று காலை நாக்பூர் சென்ற அவர், அங்கு இருந்து கார் மூலம் விதர்பா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு சென்றார். பல்வேறு இடங்களில் தொண்டர்கள் உத்தவ் தாக்கரேயை உற்சாகமாக வரவேற்றனர்.

    உத்தவ் தாக்கரே யவத்மால், வாசிம், அமராவதி, அகோலா, நாக்பூர் பகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். வாசிமில் உள்ள போக்ராதேவி கோவிலில் சாமி தாிசனம் செய்த அவர், பஞ்சாரா சமூக பிரநிதிகளையும் சந்தித்து பேசினார்

    யவத்மாலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகளுக்கு பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. நானும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் முடிவை எடுத்து இருந்தோம். பா.ஜனதா அந்த முடிவை மதித்து இருந்தால், இன்று வேறு கட்சியினருக்கு அந்த கட்சியின் தொண்டர்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. 2 கட்சிகளும் 2½ ஆண்டு முதல்-மந்திரி பதவியை நிறைவு செய்து இருக்கும்.

    நான் மந்திராலயாவுக்கு கூட சென்றதில்லை என கூற பா.ஜனதாவுக்கு தகுதி கிடையாது. பா.ஜனதா அடுத்தவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்த வேண்டும். எங்களுக்கு பாடம் கற்று கொடுக்க பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. குப்பைகளை (அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தது) பா.ஜனதா எப்படி கையாளுகிறது என்பதை பார்க்க காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து யவத்மால் மாவட்டம் திக்ராஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஒரு நாடு, ஒரே சட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் பா.ஜனதாவின் ஒரு நாடு, ஒரு கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பா.ஜனதாவுக்கு தாக்கரே இல்லாத சிவசேனா மட்டும் வேண்டும். பா.ஜனதா தற்போது குப்பை கட்சியாகிவிட்டது. பிரதமர் மோடியின் செல்வாக்கு மங்கிவிட்டது சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. அவர் 'பஜ்ரங்பலி கி ஜெய்' என சத்தமாக முழங்கினார். ஆனால் கடவுள் பதிலடி கொடுத்தார். பா.ஜனதா கர்நாடகாவில் படுதோல்வி அடைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார்.
    • எனது வாழ்க்கை திறந்த புத்தகம்.

    மும்பை :

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 23-ந் தேதி 15 கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்றவே கூட்டத்தில் கலந்து கொண்டனர் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.

    இதையடுத்து உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ், சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்லானியின் மகள் அன்ஷிகா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் பற்றி பேசி இருந்தார்.

    இந்தநிலையில் சந்திராப்பூரில் நடந்த மோடி அரசின் 9 ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் பணி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் வாரிசுகளை பாதுகாக்க ஒரே கூரையின் கீழ் பாட்னாவில் வரவைத்து உள்ளது.

    மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே அவர்கள் ஒன்று திரண்டனர். சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படுவார்களா?, அல்லது தங்கள் பிள்ளைகள் பற்றி கவலைப்படுவார்களா?.

    மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை. ஆனால் நான் நுழைந்தால் பாதியில் விடமாட்டேன். பாட்னாவில் நடந்த கூட்டம் குடும்ப கட்சிகளுடையது என நான் கூறினேன். ஆனால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) எனது மனைவியை பற்றி பேசுகிறீர்கள்.

    நான் கண்ணாடி வீட்டில் இல்லை. ஆனால் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களின் வீடுகளின் மேல் கல்வீசக் கூடாது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களின் குடும்ப சொத்துகளை பொதுவெளியில் வெளியிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.

    மும்பை :

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.

    இதுவரை இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இம்பால் நகரில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலவர கும்பல் சூழ்ந்து தீ வைத்து எரித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    மணிப்பூரில் குகி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலில் இந்துக்கள் இறந்துகொண்டு இருக்கும் வேளையில் இந்துத்வா என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் மணிப்பூரை சேர்ந்த இந்துக்கள் இந்துக்கள் இல்லையா?

    ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால் தான், ஆட்சி மற்றும் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பா.ஜனதா கூறி வருகிறது. மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.

    அப்படியானால் மணிப்பூரில் ஏன் இந்த இரட்டை என்ஜின் அரசு தோல்வியடைந்தது?, மாநிலத்தில் அமைதியை இன்னும் நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன? இந்த பயங்கரமான பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேச மறுப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். குகி பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கிடைக்கிறது என்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.
    • உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் வந்து இருந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச நானும், தேவேந்திர பட்னாவிசும் சென்றோம். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக ஒத்துக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் உத்தவ் தாக்கரே கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சோ்ந்து கொண்டார். ஆட்சியை கவிழ்த்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறாா்கள். நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவில்லை.

    உங்களின் நாடகத்தால் விரக்தி அடைந்த சிவசேனா தொண்டர்கள் தான் ஆட்சியை கவிழ்த்தனர். அவர்கள் தேசியவாத காங்கிரசுடன் இருக்க விரும்பவில்லை, எனவே விலகி வந்தனர், என பேசியிருந்தார்

    இந்தநிலையில் அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவது நல்லது தான். அவர்கள் கட்சியை உடைத்தனர், கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துரோகிகளுக்கு கொடுத்தனர். தற்போதும் கூட அவர்களுக்கு உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    அமித்ஷா 20 நிமிடங்கள் பேசியுள்ளார். இதில் 7 நிமிடங்கள் அவர் உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசியுள்ளார். அவரது பேச்சு வேடிக்கையாக இருந்தது.

    அந்த கூட்டம் பா.ஜனதா மகா சம்பர்க் அபியானுக்காக நடந்ததா அல்லது உத்தவ் தாக்கரேயை விமர்சிக்க நடந்ததா என ஆச்சரியமாக உள்ளது. உத்தவ் தாக்கரேவிடம் கேட்ட கேள்விகளை பா.ஜனதா தங்களுக்குள் கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இதேபோல பரூக் அப்துல்லா, மெபூபா முப்தி, நிதிஷ்குமார், மாயாவதி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பா.ஜனதா கூட்டணி வைத்த போது, இந்துத்வா எங்கு போனது என அமித்ஷாவுக்கு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே கேள்வி எழுப்பி உள்ளார்.

    • ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.
    • அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது.

    மும்பை :

    மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி அரசை கவிழ்த்தார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரி ஆனார்.

    உத்தவ் தாக்கரே அரசு கவிழும் முன் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த மராட்டிய அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கும் அடங்கும். நேற்று முன்தினம் வழக்கில் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானம் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் 16 எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட உயிர்பிச்சை தற்காலிகமானது தான். சுப்ரீம் கோர்ட்டு குறிப்பட்ட காலத்தில் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. எனவே எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்மானத்தின் மீது சபாநாயகர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்.

    முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் என்னை மீண்டும் முதல்-மந்திரி பதவியில் அமர்த்தி இருக்க முடியும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது எனக்கு திருப்தி அளிக்கிறது. தார்மீக அடிப்படையில் நான் அதை செய்தேன். மக்கள் மன்றத்தை சந்திக்க நான் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு சவால் விடுக்கிறேன்.

    என்னை சட்டசபையில் பலத்தை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியதே சட்டவிரோதம் என்று கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியெனில் தற்போது உள்ள அரசு சட்டவிரோதமானது தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உடனிருந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் அனில் பரப் கூறுகையில், "இந்த அரசு சட்டவிரோதமானது என கூறி வருகிறோம். கொறடாவின் பங்கு முக்கியமானது. அந்த நேரத்தில் கொறடாவாக எங்கள் அணியை சேர்ந்த சுனில் பிரபு இருந்தார். எனவே ஷிண்டே அணியினர் கொறடா உத்தரவை மீறி உள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அதிக காலம் எடுத்து கொள்ளக்கூடாது. அதிருப்தி அணி எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு குறைந்த நேரம் தான் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ராகுல் நர்வேக்கருக்கு கடிதம் எழுதுவோம்" என்றார்.

    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.
    • இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

    மும்பை

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாவிகாஸ் அகாடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசு சட்டப்படி தான் அமைக்கப்பட்டது என்பதில் இனிமேல் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

    தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். எனவே தார்மீகம் பற்றி பேசுவது உத்தவ் தாக்கரேக்கு பொருந்தாது. உத்தவ் தாக்கரே தார்மீக அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. வேறு வழியில்லாமல் பயத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை வரவேற்றார்.

    அவர் " சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வாய்மையின் வெற்றி. சபாநாயகர் தகுதியின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் முடிவு எடுப்பார். உத்தவ் தாக்கரே தரப்பினர் அவர்களின் திருப்திக்காக எங்களது அரசு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என கூறி வந்தனர். அது பொய் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தான் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் " என்றார்.

    • ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர்.
    • சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    மும்பை :

    மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்குகளில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. தீர்ப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனாவின் கொறடாவாக அங்கீகரித்தது சட்டவிரோதம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். தீர்ப்பு தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    ஷிண்டே தரப்பினர் எனது கட்சிக்கும், எனது தந்தைக்கும் துரோகம் செய்தனர். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில் நான் பதவியை ராஜினாமா செய்தேன். துரோகிகளை வைத்து நான் எப்படி ஆட்சி நடத்த முடியும்?. தற்போது உள்ள முதல்-மந்திரி (ஏக்நாத் ஷிண்டே), துணை முதல்-மந்திரி (தேவேந்திர பட்னாவிஸ்) ஆகியோர் அறநெறி இருந்தால், அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை அடுத்து ராஜினாமா செய்ய வேண்டும்.

    சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் ஷிண்டே அணியை சேர்ந்த பாரத் கோகவலேயை சிவசேனா கொறடாவாக நியமித்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்பளித்து உள்ளது, எனவே 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க முடிவில் சுனில் பிரபுவை சிவசேனா கொறடாவாக ராகுல் நர்வேக்கர் கருத வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
    • பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது.

    மும்பை :

    மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் இரவு நாக்பூரில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத், அம்பாதாஸ் தான்வே, தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், ஜித்தேந்திர அவாத், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் நானா படோலே, பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைவர் சுனில் கேதார் செய்து இருந்தார்.

    கூட்டத்தில் 3 கட்சிகளையும் சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

    ஒரு பக்கம் அவர்கள் அனுமன் பஜனை பாடுகிறார்கள். மறுபுறம் மசூதியில் போதனை கேட்கின்றனர். அது தான் அவர்களின் இந்துத்வாவா?. உத்தரபிரதேசத்தில் உருது மொழியில் 'மன் கி பாத்' நடத்துகின்றனர். நாட்டுக்காக வாழ்க்கையை அர்பணிப்பது தான் எங்களின் இந்துத்வா. நான் காங்கிரசுடன் சென்று இந்துத்வாவை கைவிட்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.

    காங்கிரசில் ஒரு இந்து கூட இல்லையா?. அவர்களின் (பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ்.) இந்துத்வா பசு கோமிய இந்துத்வா.

    இந்துத்வா தேசியநலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். சமீபத்தில் நாங்கள் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில் பா.ஜனதாவினர் கோமியத்தை தெளித்தனர். அவர்கள் அந்த கோமியத்தை குடித்து இருக்க வேண்டும். அப்போது தான் இந்துத்வா தேசியம் சார்ந்தது என்பது அவர்களுக்கு உணர்ந்து இருக்கும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்-மந்திரி அயோத்தி செல்கிறார். பா.ஜனதா ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கொன்று வருகிறது. அந்த கட்சிக்கு நெருங்கிய நண்பர்களுக்கு (அதானி) உதவி செய்வது தான் ஜனநாயகம். மோடி அரசின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்டபோது ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பல பிரச்சினைகளில் மோடியை கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நேரமும் ஜெயிலில் அடைக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 12-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ராகுல் காந்தியை நீண்ட நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஒடிசா நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என நிதிஷ்குமார் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அன்று மாலையே நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.

    தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. எனவே தேசிய அளவில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை உயர்த்த மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

    இது தொடர்பாக சரத்பவாருடன், ராகுல்காந்தி விவாதித்துள்ளார். சமீபத்தில் சாவர்கர் குறித்து ராகுல்காந்தி பேசிய பேச்சு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக விரைவில் ராகுல் காந்தி மும்பை சென்று உத்தவ் தாக்கரையை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அப்போது கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை களையவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை உருவாக்கவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் 15 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு வழங்கப்படும். ஆனால் சிவசேனா அதிக இடங்களை கேட்டு வருகிறது.

    அதே நேரம் சிவசேனாவில் 13 சிட்டிங் எம்.பி.க்கள், தற்போதைய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். எனவே வலுவான வேட்பாளர்களை பெறுவதில் உத்தவ் தாக்கரே சிரமங்களை சந்திக்க நேரிடும். நாங்கள் வேட்பாளர்களை மாற்றி கொள்ளலாம் என்றார்.

    ×