search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trees"

    • இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் மேற்கூரை சேதம்

    பந்தலூர்

    நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே பந்தலூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பெய்தது.

    பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், சேரம்பாடி, எருமாடு, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கால்வாய்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலையொட்டி உள்ள மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த செவ்வந்தி என்பவர் சத்தம் கேட்டு உடனே வெளியே ஓடி வந்தார். இதில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் புஞ்சகொல்லியில் ஒரு வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. பலத்த மழையால் பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் மழை பெய்தது. 3 மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல் அதனை புறக்கணித்தார்.
    • ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவலார்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் வள்ளியம்மாள் கதிர்வேல், கிராமசபை கூட்டத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனால் கிராமசபை கூட்டத்திற்கு துணை தலைவர் கோவில்பாண்டி தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசாரதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பழனி தீர்மானங்களை வாசித்தார்.

    கிராமத்தில் பசுமை வளங்களை அதிகரிக்க ஏரி, குளங்களில் மரம் நட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் குமுதா, முருகேஷ்வரி, வேலம்மாள், மேகனா செல்வி மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர்.

    • கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பால்தாய் தலைமை தாங்கினார்.
    • தீர்மானத்தினை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான் குறிச்சி ஊராட்சியில் குருவன் கோட்டையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பால் தாய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பூச்செண்டு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியில் பசுமை வளங்கள் அதிகரிக்க ஏரி மற்றும் குளங்களில் மரம் நடும் தீர்மானம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர் நாராயணன், கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.
    • இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மேலும் எஸ்.பி.கே. நகர், அருண் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது.

    இதனால் வடவள்ளி சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வானங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது.
    • பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
    • சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக பல்லடம் அரசு மருத்துவமனை எதிரில் இருந்த நூறாண்டுகளுக்கு மேலான மரங்களை நேற்று வெட்ட முயன்றனர். அப்போது அதனை தடுத்த சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அங்கிருந்த மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது. இதனால் நூறாண்டுக்கும் மேல் பழமையான மரங்கள் முழுமையாக வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது
    • ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த 1 வாரமாக ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் பதுங்கும் யானை இரவில் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விவசாய தோட்டங்களில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த 3 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தது. இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்ட நேரத்திற்கு பின்னரே தோட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது. ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். ஒற்றை யானை நடமாடும் பகுதி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்லும் பாதை ஆகும். மேலும் யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் என்று விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆபத்து நிலவுவதாக கூறுகின்றனர். எனவே அச்சுறுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பக்தர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
    • உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.

    இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.

    இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.

    உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.

    ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.

    மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

    இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.

    பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.

    அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.

    தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.

    நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அபிராமம் அருகே கருவேல மரங்களை அகற்றி நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.
    • நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இதன் சுவர்கள், தரைதளம், மேல்தளம் சேதமடைந்து உள்ளது. நூலகம் ஊருக்கு ஒதுக்குபபுறமாக இடத்தில் உள்ளதால் மக்கள் நீண்ட தூரம் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

    சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் எந்த நடவடி க்கையும் எடுக்காததால் கருவேல மரங்களால் புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து நத்தம் கிராம மக்கள் கூறுகையில், நூலகத்திற்க்கு சொந்த கட்டிட வசதி இருந்தும் அதை சீரமைக்கவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் நூலகத்திற்க்கு யாரும் படிக்க செல்வது கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் செல்வது கிடையாது. இந்த நூலகத்தை ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பயன்ப டுத்தி வந்த நிலையில், நூலக கட்டிடம் சேதமடைந்ததால் யாரும் செல்லவில்லை.

    பொதுமக்கள் நடமாட்ட முள்ள பகுதியில் நூலகம் அமைத்து அனை வரும் பயன்படுத்தும் வகையில் நூலக கட்டிடத்தை கொண்டுவர வேண்டும். சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து, கருவேல மரங்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நூலக கட்டிடத்தை கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நான்கு வழிச் சாலை பணியின் போது ஆலங்குளம் பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன.
    • மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பகுதியில் நான்கு வழிச் சாலை பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இருப்பினும் சில மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது மழை நன்கு பெய்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி, மாற்று இடங்களில் நடவு செய்யும் பணியை பூவுலகை காப்போம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடவு செய்த மரக்கன்றுகளுக்கு வாரந்தோறும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடந்து அதிகளவு பனை விதைகளும் விதைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இச்செயலுக்கு ஆலங்குளம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
    • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

    காங்கயம்:

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

    ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.
    • இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம்மிடி ஏரிமலை காப்பு காட்டில் மர்ம கும்பல் தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் பரசு ராமமூர்த்தி உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்த கும்பலை வனத்து றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் காடையாம்பட்டி தாலுகா வீராட்சியூரை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூம ராத்தூர் பகுதியை சேர்ந்த தனக்கொடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெட்டி 4 தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரசுக்கு சொந்தமான காட்டில் இருந்து விலை உயர்ந்த மரத்தை வெட்டி கடத்துவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். மழை , காடு மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டி வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் மரங்களை காடுகளில் நட்டு வரும் வேளையில் 3 பேர் கும்பல் மரங்களை வெட்டியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து பழனிவேல், தனக்கொடி, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் கோட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் முன்னிலையில் வன ஊழியர்கள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    ×