search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி   கடத்த முயன்ற 3 பேர் சிக்கினர்
    X

    விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்ற 3 பேர் சிக்கினர்

    • காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.
    • இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம்மிடி ஏரிமலை காப்பு காட்டில் மர்ம கும்பல் தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் பரசு ராமமூர்த்தி உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்த கும்பலை வனத்து றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் காடையாம்பட்டி தாலுகா வீராட்சியூரை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூம ராத்தூர் பகுதியை சேர்ந்த தனக்கொடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெட்டி 4 தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரசுக்கு சொந்தமான காட்டில் இருந்து விலை உயர்ந்த மரத்தை வெட்டி கடத்துவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். மழை , காடு மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டி வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் மரங்களை காடுகளில் நட்டு வரும் வேளையில் 3 பேர் கும்பல் மரங்களை வெட்டியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து பழனிவேல், தனக்கொடி, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் கோட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் முன்னிலையில் வன ஊழியர்கள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    Next Story
    ×