search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trees"

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் இணைந்து 66 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளை மேயர் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்ற ஓராண்டினை முன்னிட்டும் 70 ஆயிரம் மரங்கள் நடப்படும் என்று அறிவித்தபடி முதற்கட்டமாக முதற்கட்டமாக 11 ஆயிரம் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தற்போது மேலும் 66 ஆயிரம் மரங்கள் நடும் பணி தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையமும் இணைந்து நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான படிவத்தை வனத்துறை அதிகாரிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கந்தசாமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து செல்வநாயகபுரம் பிரதான சாலை, ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் டி.எம்.பி.காலனி பகுதியில் தொடங்க உள்ள வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி கமிஷனர் தினேஷ் குமாருடன் சென்று ஆய்வு நடத்தினார்.

    பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மேயர் மற்றும் கமிஷனர் அங்கு சமைக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், பெயர் முக்கியமல்ல. மக்களின் உணர்வு தான் முக்கியம் என்று பாமரர்களின் பசியை போக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் மாநகராட்சி உணவு கூடங்களில் ஓன்றான தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் தரமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்பொழுது அங்கு இருந்த மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு உணவு வழங்க ஆவண செய்வதாக கூறினார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது.
    • கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் சுற்றுவட்டாரங்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக் கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளது. கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கு தீர்வாக கோவில் நிர்வாகம் வயரிங் செய்யும் பி.வி.சி. பைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் ஒத்துழைப்போடு மின் கம்பியின் உள்ளாக நுழைத்து மாட்டி விட்டது. இதனால் மரங்கள் மின்கம்பியில் உரசும் அபாயம் நீங்கியது. மின்கம்பியை சுற்றி பாதுகாப்பான பி.வி.சி. பைப் இருப்பதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசினால் கூட எவ்வித அபாயம் ஏற்படுவதில்லை. மரங்களை பாதுகாக்க மற்ற இடங்களிலும் அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
    • மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
    • 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆய்வு செய்த போது 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் கூறியதாவது;-

    இந்த வீட்டுமனை இடத்தில் மாதப்பூர் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் எண்ணற்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
    • பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பாக 2500 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
    • முதற்கட்ட பணியாக 150 மரக்கன்றுகள் நடும் பணியை குளத்தூரில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் சார்பாக பாளையங்கோட்டை-குறுக்குச்சாலை, குளத்தூர்-விளாத்திகுளம், நாகலாபுரம்- பந்தல்குடி, அருப்புக்கோட்டை சாலையில் இருபுறமும் 2500 மரக்கன்றுகள் நடுவதன் முதற்கட்ட பணியாக 150 மரக்கன்றுகள் நடும் பணியை குளத்தூரில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் விளாத்தி குளம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெயச்ச ந்திரன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர் எபநேசர், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி செல்வபாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் ராஜபாண்டி, ஒன்றிய இளைஞரணி துணை அமை ப்பாளர் பேச்சிமுத்து, சா லை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு படை போலீசார் அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் அருகில் ஒரு ராட்சத மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.

    இதற்கிடையே கோடநாடு சாலை புதூர் அருகே, ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்தது இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவே தீயணைப்பு படை போலீசார் உரிய குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    • மரக்கன்றுகள் நடும்விழாவுக்கு நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார்.
    • நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றத்துறை நடுவரும் ,நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவா் வெங்கடேசன், துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் கார்த்திகைராஜன் வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து நீதிபதி சுனில்ராஜா நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னா் நீதிமன்ற பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச்சூழல் அவசியம் குறித்தும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மாரியப்பன், நித்யானந்தம், வெங்கடேஷ், சிதம்பரம், வீரபாண்டி, கணேசன் நல்லையா, நீதிமன்ற பணியாளா்கள், போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • மாவட்ட நீதிபதி சீனிவாசன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கோர்ட்டு வளா கத்தில் வைத்து 500 மரக்கன்றுகள் வழங்குதல்-நடுதல் மற்றும் 500 துணிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் இசக்கியப்பன் வரவேற்று பேசினார்.

    மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சமீனா முன்னிலை வகி த்தார். வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், வக்கீல் சங்க செயலாளர் காமராஜ், கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன், கிராம உதயம் ஆலோ சனை குழு உறுப்பினர் டாக்டர் புகழேந்தி பகத்சிங் ஆகி யோர் மரக்கன்றுகள் வள ர்ப்பதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினர். தலைமை குற்ற வியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட நீதிமன்ற, நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள், பொது மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்டது.

    • விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
    • பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
    • பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.

    பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.

    இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.

    இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    ×