search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரங்கள்"

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • வேலாயுதம் பாளையம் அருகே60 ஏக்கர் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்
    • தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் வட்டாரம் புஞ்சை புகழுர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கந்தசாமிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 60க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள தென்னையில் கருந்தலை புழுக்களின் தாக்கம் காணப்பட்டது .

    இதனை அடுத்து கரூர் வட்டார வேளாண்மை துறை வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் சாந்தி, பூச்சிகள்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன், இணைப்பு பேராசிரியர்( தென்னை) ராஜமாணிக்கம், புழுதேரி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்ச்செல்வன், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் துணை மேலாளர் பிரசாத், வனத்தோட்டத்துறை முதுநிலை மேலாளர் செழியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை குறித்து விவசாயிகளுடன் கலநதுரையாடினர்.

    அப்போது முற்றிலும் தாக்கப்பட்ட தென்னை அடிமட்டைகளை வெட்டி அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும் . அந்து பூச்சிகளை அழிக்க ஒரு ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகளை இரவு 7 மணி முதல் 11 மணி வரை தென்னந்தோப்புகளில் அமைக்க வேண்டும்.புழுக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகளான பிராக்கான் பிரவிகார்னிஷ் ஒரு ஏக்கருக்கு (இரண்டாயிரத்தி நூறு எண்கள்) மரங்களின் மேல் மட்டைகளின் இடுக்குகளில் நான்கு முதல் ஆறு முறை விட வேண்டும்.

    பூச்சிக்கொல்லி வேர் மூலம் செலுத்தி இருப்பின், அதன் எஞ்சிய நச்சு மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்து முழுமையாக நீங்கிய பின் ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.

    கருந்தலை புழுக்களால் தாக்கப்பட்ட மரங்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு மரத்தை சுற்றி ஆறு அடி அளவில் வட்டத்தில் சணப்பை தக்கை பூண்டு கொள்ளு அல்லது கொழுஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றை மரத்திற்கு 50 கிராம் வீதம் வட்டப்பாத்தியில் விதைத்து பூக்கும் தருவாயில் மடித்து உழுதிட வேண்டும்.

    பரிந்துரைக்கப்பட்டுள்ள அணைத்து தொழில்நுட்பங்களையும் கருந்தலை புழுக்களால் பாதிக்கப்பட்ட தென்ணை விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடை பிடிக்க அறிவுறுத்ப்பட்டது.

    விவசாயிகள் ,விஞ்ஞானிகள் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் செய்திருந்தார். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ஸ்ரீபிரியா, காஞ்சனா மற்றும் மணிமேகலை ஆகியோரால் விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. 

    • பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பாதிப்பு
    • குடியிருப்புகளில் சாய்ந்ததால் வீடுகள் சேதம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஒருசில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் ராட்சத மரங்கள் முறிந்து நடுரோட்டில் கிடக்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நீலகி ரியின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது குன்னூா்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன.

    மேலும் குரும்பாடி, வண்ணா ரப்பேட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, புரூக் லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் ராட்சத மரங்கள் விழுந்து கிடக்கின்றன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தி வருகின்றனா்.

    இதற்கிடையே லேம்ஸ் ராக், அட்டடி ஆகிய பகுதி களில் உள்ள 2 குடியிருப்புகள் மீது ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இத னால் அங்கு உள்ள வீடுகள் சேதம் அடைந்தன.

    எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    • அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் புதுச்லைசேரி சாலையில் உள்ள ஆலமரம் நள்ளிரவில் விழுந்து 3 மின்கம்பம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர், மரக்காணம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    • 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர்.
    • நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

    இந்தநிலையில் மரங்களை வெட்டியதற்காக போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியை சேர்ந்த ஏஞ்சல் என்பவருக்கு 4 ஆயிரத்து 572 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு 12 ஆயிரத்து, 544 ரூபாய், குருவாயூரப்பன் நகர் பூங்கா வீதியைச் சேர்ந்த கமலம் என்பவருக்கு 3 ஆயிரத்து, 816 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு 3 ஆயிரத்து, 560 ரூபாய் அபராதம் விதித்து தாசில்தார் உத்தரவிட்டார்.

    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
    • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

    திருப்பூர்:

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்தநாளையொட்டி இன்று இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் வித்தியாசமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சப் - கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். சப் - கலெக்டர் பேசுகையில், கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிட வேண்டும். நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்,

    சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை பார்க்கிறான். மாணவ மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக வாழ்நாளில் மரங்களை நடவுசெய்து வளர்க்க வேண்டும் . கலாமின் பொன்மொழிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பேசினார். மாணவ செயலர்கள் ராஜபிரபு, காமராஜ், மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலாமின் படங்கள் கொண்ட முகமூடியை அணிந்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.
    • இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது கருவேல மர முள்கள் குத்தி காயம் ஏற்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், மனோரா, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, மரக்காவலசை, சம்பைப ட்டினம், செந்தலை, மந்திரி பட்டினம், அண்ணாநகர், கணேசபுரம் செல்லும் சாலையில் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை கோடுகளை மறைக்கும் அளவிற்கு சாலையில் உள்ளது.

    இதனால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தெரியவில்லை.

    மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை ஓரத்தில் உள்ள கருவேல மரங்களில் உள்ள கிளைகளில் உள்ள முள் குத்தி காயம் ஏற்படுகிறது.எனவே மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக சாலையை மறைத்து வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு நெல்லை வன கோட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியை தென்காசி எம்.பி. தனுஷ் குமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரி முத்து, ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் பிரவீன் நன்றி கூறினார்.

    • மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வுமகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கரூர், 

    கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் எம்.ஆர்.வி-டிரஸ்ட் மூலம் "கானகத்திற்குள் கரூர்" என்று செயல் திட்டம் மூலமாக, கரூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் கடந்த 2019 முதல் 2021 வரை 30,000 க்கும் மேற்பட்ட மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மரங்களை நடுவதுடன் மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மரங்களை சுற்றி உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி மரங்களுக்கு ஊற்றப்படும் நீரானது தேங்கி மரங்கள் செழித்து நிழல் தரும் வகையில் வளர செய்வதை "கானகத்திற்குள் கரூர்" என்ற செயல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் மரங்களின் பராமரிப்பு பணியானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் கரூர் 80 அடி சாலையின் அருகே உள்ள மரங்களை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மரக்கிளைகள் மின்சார கம்பங்களில் உரசாமல் இருக்கும் வகையிலும், மரங்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எம்.ஆர்.வி - டிரஸ்ட் தன்னார்வலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் கரூர் மக்களுக்காக இந்த மரம் நடும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    மரம் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டி வருகின்றனர்.

    • காலிமனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சக்திநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் காலிமனையில் வீடு கட்டும் பணி தொடங்க இருந்தனர். அந்த காலி மனையில் மரங்கள் இருந்ததால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டது. மரங்களை விறகிற்காக வெட்டுவதற்கு மனமின்றி அதனை வேருடன் அகற்றி மறு நடவு செய்வதற்கு முடிவு செய்தனர்.

    இதற்காக ஆலங்குளத்தில் உள்ள பசுமை இயக்கம் தன்னார்வலர்களை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தென்காசி சென்ற தன்னார்வலர்கள் அங்கிருந்த வேம்பு, புங்கை என காலிமனையில் இருந்த 3 மரத்தை வேருடன் எடுத்து ஆலங்குளம் கொண்டு வந்தனர். ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் முன்பு ஆலங்குளம் மருத்துவர் புஷ்பலதா ஜான் ஏற்பாட்டில் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியின் மரத்தை மறு நடவு செய்தனர். மரம் நடும் நிகழ்வில் பசுமை இயக்கம் தன்னார்வலர்கள், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • அரண்மனை வளாகத்தில் மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் தங்கியுள்ளது.
    • பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பறவை இனத்திலும் விலங்கு இனத்திலும் சேராத பாலூட்டும் இனமாக உள்ளது வவ்வால்கள்.

    வவ்வால்களில் ஆயிரக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் தற்போது வரை 1200 வகையான வவ்வால்கள் உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

    வவ்வால்கள் பல வகையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் பழங்கள், பூக்கள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்து வருகின்றன.

    இயற்கையை பாதுகாப்பதிலும் வேளாண்மை பாதுகாப்ப திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடியது.

    இதில் பழம் தின்னி வவ்வால்கள் இயற்கையின் மிகப் பெரும் நண்பனாக விளங்குகிறது.

    பழங்களை பறிக்கும் வவ்வால்கள் அவற்றை அங்கே உண்ணுவது கிடையாது.

    வேறு இடத்திற்கு வந்து உண்பதால் அந்த இடத்தில் சிந்தும் விதைகள் மூலம் ஆயிரக்கணக்கான புதிய மரங்கள் உருவாகின்றன.வவ்வால் இனம் அழிந்தால் காடுகள் அழியும்.

    காடுகள் அழிந்தால் வவ்வால் இனம் அழியும் அப்படி ஒரு ஒற்றுமையுடன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் இனங்களில் வவ்வாலும் ஒன்று.

    தஞ்சாவூரின் மையப் பகுதியில் நாயக்க மன்னர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து மராட்டியர் மன்னர் காலுத்திலும் கட்டப்பட்ட அரண்மனையைச் சுற்றிலும் மிகப்பெரிய சுற்றுச்சுவர் உள்ளது.

    சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை வளாகத்தில் 7 அடுக்குகளைக் கொண்ட கோயில் போன்ற கட்டுமான தோற்றத்தை ஏற்படுத்தும் ஆயுத கோபுரம், மணிகோபுரம் ஆகியவை உள்ளது.

    இவைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே பலவகையான மரங்களும் உள்ளது.

    இந்த மரங்களில் பல ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கியுள்ளது.

    பகலில் மரங்களில் தொங்கியபடி ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மாலைப் பொழுதில் அப்பகுதியில் சாரை சாரையாக பறந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு வரை உணவு தேடி மீண்டும் அதே இடத்திற்கு பகலில் வருகிறது.

    இந்த அரண்மனை வளாகம் முழுவதும் கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் இருந்த நிலையில் தற்போது மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

    இதனால் வவ்வால்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது.

    அழிவின் விளிம்பில் உள்ள பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.

    அது இருக்கும் இடத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×