search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telengana assembly election"

    • தெலுங்கானாவில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுதினம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடைசி நாளான இன்று ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அவர்கள் ஒரே அணி...இங்கே பி.ஆர்.எஸ், பா.ஜ.க, ஏ.ஐ.எம்.ஐ.எம். ஒரு அணியாகச் செயல்படுகிறார்கள். முதல் மந்திரி கே.சி.ஆர். மீது எந்த வழக்கும் இல்லை. ஊழல் மிகுந்த அரசை நடத்துகிறார்.

    பிரதமர் மோடிக்கு உதவுவதால் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி மீதும் எந்த வழக்கும் இல்லை. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறையும் அவர்களுக்குப் பின்னால் இல்லை என தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி துப்புரவு தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்களுடன் உரையாடி ஓட்டு வேட்டை.
    • பா.ஜனதா தலைவர்கள், சந்திரசேகர ராவ் கடைசி நாள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநில தேர்தல் முடிவடைந்ததால் உள்ளூர் தலைவர்கள், தேசிய தலைவர்கள் தெலுங்கானா பக்கம் திரும்பினர்.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை தெலுங்கானாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பல்வேறு இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட மாநில தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் தேசிய தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடைசி நாளான இன்றும் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் ஆட்டோ டிரைவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆகியோருடன் உரையாடினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, இன்றைய பிரசாரத்தின்போது கேசிஆர் மக்களை சந்திக்காமல் பண்ணை வீட்டில் வசிக்கிறார் என விமர்சித்தார்.

    நேற்று பா.ஜனதா தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டு வேட்டை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், அது பிஆர்எஸ் கட்சிக்கு சென்றடையும். இதனால் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றார். இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் சந்திரசேகர ராவ் கட்சியின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உள்ளூர் தலைவர்கள் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    நாளை வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்குமையத்திற்கு கொண்டு செல்லப்படும். நாளைமறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறும்.

    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி நேற்று தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
    • வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தீவிர பிரசாரம்.

    ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு, பா.ஜனதாவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்காணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரதமர் மோடியை பார்ப்பதற்காக பல இளைஞர்கள் டவர் போன்ற கட்டமைப்புகள் மீது ஏறி பிரதமர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பிரதமர் மோடி இதை கவனித்துக் கொண்டார். இளைஞர்கள் திடீரென கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தால் என்னவாகும்? என கவலையை அடைந்தார். இதனால் அவர்கள் கீழே இறங்கும் வகையில் தனது பேச்சை நிறுத்தினார்.

    இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பிரதமர் மோடி "கோபுரத்தில் ஏறியவர்களை சுட்டிக்காட்டி, அவர்களை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டார். நீங்கள் என்னை பார்க்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளையில் நீங்கள் கீழே விழுந்தால் அது என்னை மிகவும் அப்செட் செய்துவிடும். தயது செய்து கீழே இறங்கவும்" எனத் தெரிவித்தார்.

    ஒரு சிறுமி தேசியக்கொடியுடன் வந்திருந்தார். அவரை பார்த்து, "ஒரு சிறுமி பாரத மாதவாக வந்திக்கிறார். வீரம்" என்றார்.

    இதேபோல் கடந்த 11-ந்தேதி இளம் பெண், மின்னொளிக்காக கட்டப்பட்டிருந்த டவரில் ஏறினார். அவர் பின்னர் கீழே இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது.

    • விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.
    • பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு 4-வது முறையாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் நேற்று இரவு 7.50 மணிக்கு ரேணிகுண்டா வந்தடைந்தார்.

    விமான நிலையம் வந்த அவருக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் சிலையை பரிசாக வழங்கி வரவேற்றார்.

    சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்த பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் உள்ள ரச்சனா சிறப்பு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார்.

    இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பெரிய நாமமிட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு வந்திருந்தார்.

    சுமார் 45 நிமிடங்கள் கோவிலில் இருந்தார். பிரதமர் மோடிக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்டோர் ஏழுமலையான் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். 

    தரிசனம் முடிந்து 9.30 மணிக்கு வெளியே வந்தார். அவரை பார்த்து பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் ஹக்கீம் பேட்டை விமான நிலையத்திற்கு சென்றார்.

    திருப்பதி கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில் பிரதமர் மோடி 140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காக திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

    • தெலுங்கானாவில் ஏழு வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது.
    • கர்நாடகாவில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதாவை வீழ்த்த முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

    தற்போது காங்கிரஸ் கட்சி "கர்நாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான் தெலுங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    ஆனால் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரசாரம் செய்து வருகிறது.

    நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது சித்தராமையா கூறும்போது "செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல்வதை நான் பார்த்தேன். 

    பா.ஜனதா தலைவர்கள், பிஆர்எஸ் தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக்குள் சென்றதும், ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவுதான்" என்றார்.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங்கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

    • பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.
    • மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

    பாலஸ்தீனத்தை ஆதரிக்கிற இவர்கள் எல்லாம் (ஒவைசி கட்சி) அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். 

    ராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா?

    பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இப்போது ராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், பல நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது. அது தெலுங்கானா மாநிலத்திலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாக்குறுதி எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

    • காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாள்களாக பிரசாரம் செய்து வருகிறார்
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் நேற்று மாலை பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசாரம் செய்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இன்று பிரசாரம் செய்கிறார்.

     இதே போன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி 2 நாளாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்கிறார். குறிப்பாக பொதுக்கூட்டம், ரோடுஷோ ஆகியவற்றில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் போட்டி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் வருகையால் தெலுங்கானா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே தெலுங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், அவரது மகன் மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த மாநில, தேசிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் தெலுங்கானா முழுவதும் தேசிய தலைவர்களின் படையெடுப்பால் களை கட்டியுள்ளது.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பிஆர்எஸ் கட்சி தீவரமாக தேர்தல் வேலை செய்து வருகிறது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் சூறாவளி பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சந்திரசேகர ராவின் மகளும், அம்மாநில எம்.எல்.சி.யுமான கே. கவிதா கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எங்களுடன் நட்பாக இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைத்தது கிடையாது. அவர்களுடன் நட்பு முறையில் அணுகுகிறோம்.

    பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொறுத்தவரை, மற்ற அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பி.ஆர்.எஸ் கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் பெருகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் முறையும் விவசாயிகளை பற்றி சிந்திக்க தொடங்கியது. எங்கள் வளர்ச்சியை இரு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் யாருடைய பி டீம் அல்ல. நாங்கள் தெலுங்கானா மக்களுடைய அணி.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
    • தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.

    மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

    கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.

    கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.

    தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    • வருகிற 30-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிஆர்எஸ்- காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிவிப்பில் "வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 30-ந்தேதி வாக்குப்பதிவு.
    • சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

    சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

    காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

    ×