search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tanjore"

    தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    காரைக்குடி பகுதி ஆத்தங்குடியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 83). இவர் தனது மகன் நாராயணனுடன் ஒரு காரில் புறப்பட்டார். காரை நாராயணன் ஓட்டி வந்தார்.

    அந்த கார் தஞ்சை அருகே அற்புதாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரில் இருந்த நாச்சியப்பன் மற்றும் அவரது மகன் நாராயணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாச்சியப்பன் பரிதாபமாக இறந்தார். நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை அருகே 1½ வயது மகனுடன் இளம்பெண் மாயமானதையடுத்து இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள காசாநாடுபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி உஷா (வயது 24). இவர்களுக்கு பவன்குமார் (1½) என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உஷா, தனது மகன் பவன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், மகனுடன் மாயமான மனைவியை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    பின்னர் இதுபற்றி தஞ்சை தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடும்ப தகராறு காரணமாக மகனுடன் உஷா வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    தஞ்சாவூர்:

    பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கப், பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

    தஞ்சையில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் பாக்கெட், கப் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசைகளை பார்சலாக கட்டி எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்கினர். பேப்பர் தட்டுகளில் இட்லி, பூரி, தோசைகள் பரிமாறப்பட்டன. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளில் தான் மளிகை சாமான்களை கட்டி கொடுத்தனர்.

    தஞ்சை பூக்கார தெருவில் பூ சந்தை கடைகளில் துணிப்பையில் பூக்களை போட்டு வழங்கினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளம்பர பேனர், பூச்சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

    பூக்கள் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தஞ்சையில் இறைச்சி கடைகளில் கறிவாங்க, பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால் நேற்று முதல் விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுப்பிரியர்களுக்கு சில பார்களில் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வரை வசூலிக்கப்பட்டது.  #Plasticban

    திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம் ஆணையின்படி பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத் துறை அலுவலர்களை கொண்டு திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

    முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ரேசன் கடைகளில் நடைபெறும் ஆய்வின் போது கடும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய விற்பனையாளர் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தர பணிநீக்கம் போன்ற கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதை விளக்கி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அதன்படி கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை கோட்டத்தில் தலைமை தபால் நிலையம், கிளை தபால் நிலையங்கள் என 294 தபால் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் 494 கிராமிய தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 107 பேர் மட்டும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். 387 பேர் பணிக்கு வரவில்லை.

    கமலேஷ்சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும், 1-1-2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராம தபால் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும்.

    நிலுவை தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 2-ம் நாளாக தஞ்சை தபால் நிலையம் முன்பு கோட்ட தலைவர் ஜானகி ராமன் தலைமையில் கோட்ட பொருளாளர் கருப்புசாமி, கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராம தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக பணப்பட்டுவாடா, தபால் சேவைகள் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    தஞ்சையில் பஸ் பயணிகளிடம் பணத்தை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பணம், நகை, மணிபர்சை பறிமுதல் செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள சேர்மானநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 40). இவர் நேற்று மதியம் அம்மாபேட்டையில் இருந்து தஞ்சைக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ் வண்டிக்காரத்தெரு பாலத்தில் வந்தபோது அந்த பஸ்சில் பயணம் செய்த திருநெல்வேலியை சேர்ந்த சித்ரா (32). என்பவர் கோமதி வைத்திருந்த மணிபர்சை நைசாக திருடிக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி கூச்சல் போடவே டிரைவர் விஜய் பஸ்சை நிறுத்தி விட்டார். மற்ற பயணிகள் சித்ராவை பிடிக்க முயன்றபோது அவர் பயணிகளை தள்ளிவிட்டு கீழே இறங்கி ஓடிச்சென்று அந்த வழியாக சென்ற மற்றொரு பஸ்சை நிறுத்தி அதில் ஏறி சென்றார். அதனை பார்த்த டிரைவர் விஜய் அந்த பஸ்சை பின் தொடர்ந்து சென்று நிறுத்தினார். பின்னர் அந்த பஸ்சில் இருந்த சித்ராவை பிடித்தனர்.

    இதையடுத்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் சித்ராவை ஒப்படைத்தனர். போலீசார் சித்ராவிடம் விசாரணை செய்தபோது அவர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை, பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கோமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சித்ராவை கைது அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் மணிபர்சை பறிமுதல் செய்தனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 8-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட12 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Dengue

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வேகமாக டெங்கு - பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் நாளுக்கு நாள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

    மேலும் டெங்கு - பன்றிக் காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    எனவே காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அது போன்று மாவட்டங்கள் முழுவதும் இதற்காக தனி அதிகாரிகள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை தனி வார்டில் அனுமதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு என்று வார்டுகள் ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று இரவு வரை 87 பேர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தவிர 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தனி வார்டுகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue

    பொறியியல் பிரிவுக்கான பணி நடைபெறுவதால் திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் பொறியியல் பிரிவுக்கான பணி நடக்கிறது. அதையொட்டி, திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி(வண்டி எண்:76824/76827) இடையே ஓடும் பயணிகள் ரெயில் 3 சனிக்கிழமைகளில், அதாவது வருகிற 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக இயக்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை, மயிலாடுதுறை-திருநெல்வேலி (வண்டிஎண்: 56822/56821) இடையே ஓடும் பயணிகள் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16234) ரெயில், ஆலக்குடி-தஞ்சை இடையே நடக்கும் பணி காரணமாக இன்று(புதன் கிழமை) முதல் 31-ந் தேதிவரை 60 நிமிடம் தாமதமாக வந்து மயிலாடுதுறையை சென்றடையும். சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ் பிரஸ்(வண்டிஎண்:12635) ரெயில், 18-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 21-ந் தேதி ஆகிய 3 நாட்கள் வழக்கமான நேரத்தை விட 20 நிமிடம் தாமதமாக திருச்சியை வந்தடையும். சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல்-நாகர்கோவில் ஜங்ஷன் வாராந்திர எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16351) ரெயில் 12-ந் தேதி, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் அரியலூர் மற்றும் திருச்சிக்கு 15 நிமிடம் தாமதமாக வந்து சேரும்.

    மேலும் காரைக்கால்-திருச்சி இடையே ஓடும் பயணிகள் ரெயில்(வண்டி எண்:56711) 11-ந் தேதி முதல் 16-ந் தேதிவரை காரைக்காலில் வழக்கமாக பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 45 நிமிடம் தாமதமாக, அதாவது 1.15 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் இன்று காலை திடீரென கல்லணை கால்வாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டது.
    பூதலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கல்லணையில் இருந்து கல்லணை கால்வாய்க்கு 2700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தில் இன்று காலை திடீரென கல்லணை கால்வாயில் கரையில் உடைப்பு ஏற்பட்டது.

    அந்த கிராமத்தில் உள்ள கீழ்போக்குபாலம் கல்லணை கால்வாய் வலதுகரை பகுதியில் கரை உடைந்து உள்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பெருக் கெடுத்து சென்றது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் விரைந்தனர். கரை உடைப்பை சரிசெய்ய அந்த பகுதி விவசாயிகள் துணையுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


    லாரிகளில் மண்ணை கொண்டு வந்து கரை உடைப்பில் போட்டு கொட்டினர். ஆனால் தொடர்ந்து கரையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டே இருந்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுதிரண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கல்லணை கால்வாய் தண்ணீர் வந்த பிறகு பல பகுதிகளில் கரைகள் பலவீனமாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கரை உடைப்பை இன்று மாலைக்குள் சரிசெய்து விடுவோம். முறையான குளங்கள், ஏரிகளின் கரைகளை தூர்வாராததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது உடைப்பு ஏற்பட்டு செல்லும் தண்ணீர் கள்ளபெரம்பூர் ஏரியை நோக்கி செல்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    கும்பகோணம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த கொரநாட்டுகருப்பூர் கீழபுதுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் அபிநயா (வயது 16) . இவர் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அரசு பொது தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

    கடந்த 23-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதில் மாணவி அபிநயா 371 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனமுடைந்த அவர் கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்த எலிமருந்தை சாப்பிட்டுள்ளார்.

    மயங்கி விழுந்த அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சையில் நேற்று இரவு தூங்கிய முதியவர் மீது செங்கல்லை போட்டு படுகொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்பு சாவடி மிஷின் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் தினமும் அப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரே உள்ள கட்டிடத்தில் வந்து தூங்குவாராம்.

    இந்த நிலையில் நேற்று இரவும் சுப்பிரமணியன் அங்கு வந்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் சுப்பிரமணியன் படுத்து தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள செங்கற்களால் அவர் முகம் மற்றும் கால்களில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    இதைத் தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக செல்பவர்கள் சுப்பிரமணியன் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? குடிபோதையில் நடந்த சம்பவமா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மானம்புச் சாவடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40). என்பவர் தான் சுப்பிரமணியனை செங்கலால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    ராஜ்குமார் மீது ஏற்கனவே மேற்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது.  இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு ஒரு வழக்கிற்கு ஆஜராக வந்த அவர் இரவு தூங்குவதற்காக  வருவாய் ஆய்வாளர் விடுதி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணியன் தூங்கி கொண்டிருந்தார். உடனே ராஜ்குமார் சுப்பிரமணியனை வேறு இடத்தில் சென்று படுக்குமாறு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த  ராஜ்குமார் அருகில் இருந்த செங்கலை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×