என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தஞ்சசை
நீங்கள் தேடியது "தஞ்சசை"
தஞ்சையில் நேற்று இரவு தூங்கிய முதியவர் மீது செங்கல்லை போட்டு படுகொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மானம்பு சாவடி மிஷின் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70). கூலித்தொழிலாளியான இவர் தினமும் அப்பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு எதிரே உள்ள கட்டிடத்தில் வந்து தூங்குவாராம்.
இந்த நிலையில் நேற்று இரவும் சுப்பிரமணியன் அங்கு வந்து படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் சுப்பிரமணியன் படுத்து தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள செங்கற்களால் அவர் முகம் மற்றும் கால்களில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக செல்பவர்கள் சுப்பிரமணியன் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள்? குடிபோதையில் நடந்த சம்பவமா? என்பது உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மானம்புச் சாவடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (40). என்பவர் தான் சுப்பிரமணியனை செங்கலால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ராஜ்குமார் மீது ஏற்கனவே மேற்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு ஒரு வழக்கிற்கு ஆஜராக வந்த அவர் இரவு தூங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் விடுதி அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணியன் தூங்கி கொண்டிருந்தார். உடனே ராஜ்குமார் சுப்பிரமணியனை வேறு இடத்தில் சென்று படுக்குமாறு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் அருகில் இருந்த செங்கலை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X