search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil new year"

    • காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
    • 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

    மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.
    • வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.

    வேலூர்:

    வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்:-

    அன்பார்ந்த சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். மேலும் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய புத்தாண்டாக அமையட்டும்.

    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார்.

    • கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
    • தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படும். தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. கோவில் நடையை நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.

    நாளை மறுநாள்(11-ந்தேதி முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை வருகிற 18-ந்தேதி வரை திறந்திருக்கும்.

    தினமும் நெய் அபிஷேகம், படிபூஜை, உதயாஸ்த மன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 14-ந்தேதி விஷூ பண்டிகை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் அமைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பத்தினம்திட்டா, கோட்டயம், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குரு மேஷ ராசியில் நிற்கிறார்.
    • கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.

    தமிழர்கள் சித்திரை 1-ம் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் 38-வது தமிழ் ஆண்டான குரோதி வருடம் ஏப்ரல் 14, 2024 அன்று ஞாயிற்றுகிழமை, திருவாதிரை நட்சத்திரம், சஷ்டி திதியில் பிறக்க உள்ளது. குரோதி வருட கிரக சஞ்சாரங்கள்: (திருக்கணித பஞ்சாங்கப்படி)

    குரு:

    ஆண்டின் துவக்கத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் மே1, 2024 முதல் ரிஷப ராசிக்கு சென்று கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைப் பார்வையிடுகிறார்.

    சனி:

    வருட கிரகங்களில் அதிக வருடம் ஒரு ராசியில் பயணம் செய்யும் கிரகமான சனி பகவான் 29.3.2025 வரை கும்ப ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். மேஷம், சிம்மம், விருச்சிகத்தை பார்க்கிறார். அதன் பிறகு மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் ரிஷபம், கன்னி, தனுசு ராசியை பார்வையிடுகிறார்.

    ராகு/கேது:

    வருடம் முழுவதும் மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.

    மேன்மையான பலன் பெறும் ராசிகள்

    மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்

    ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் வருடம் பிறக்கும் போது சூரியன் தனது உச்ச வீடான மேஷத்தில் சஞ்சரிப்பார். ஆனால் இந்த குரோதி வருட புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் குருவும் மேஷ ராசியில் நிற்கிறார். இது போன்ற கிரக அமைப்பு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே உருவாகும்.

    கால புருஷ 5ம் அதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியுமான சூரியனுடன் கால புருஷ 9-ம் அதிபதி பாக்கியாதிபதியுமான குரு சேருவதால் தர்மம் தலைத் தோங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக ஸ்தலங்கள் புனரமைக்கப்படும். தொழில் முனைவோர் ஏற்றம் காண்பர்.

    தங்கம் விலையேறும், பங்கு சந்தை ஏற்றம் பெறும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்.செல்வச் செழிப்பை கூறும் கிரகம் சுக்ரன் உச்சம் பெறுகிறார். ஆடம்பரச் செலவு மற்றும் அழகு ஆடம்பர பொருட்கள், நகைகள், துணிமணிகள் மோகம் அதிகமாகும்.

    ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் மேல்நாட்டு பாணியில் சோஷியலாக பழகுவார்கள். வயது படுபாடு இல்லாமல் காதல் திருமணம் அதிகம் நடக்கும். சினிமா, நாடக , நடனக் கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.

    பெண்களின் தனித் திறமை உலகில் போற்றப்படும். கிரடிட் கார்டு கலாச்சாரம், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகமாகும்.

    சனி+செவ்வாய் சேர்க்கை இருப்பதால் இயற்கை சீற்றம், அதிக மழை, விபத்துக்கள், போர் அபாயம், புதுவிதமான நோய், ஒற்றுமை குறைவு, அதீத வைத்தியச் செலவு, கடனால் அவதி, வழக்குகள் அதிகமாகும்.

    • இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம்.
    • மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும்.

    செவ்வாய் நீச்சமும், வக்ரமும்

    * ஐப்பசி 6-ந் தேதி முதல் தை 4-ந் தேதி (23.10.2024 - 17.1.2025) வரை கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகிறார்.

    * கார்த்திகை 18-ந் தேதி முதல் மாசி 9-ந் தேதி வரை (3.12.2024 - 21.2.2025) செவ்வாய் வக்ர நிலையில் இருக்கிறார்.

    * இடையில் தை 5-ந் தேதி (18.1.2025) அன்று மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், மீண்டும் பங்குனி 24-ந் தேதி (7.4.2025) அன்று கடகத்திற்கு திரும்பி வருகிறார்.

    இதுபோன்ற காலங்களில் செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி, செவ்வாய் ராசிநாதனாக அமைந்த மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள், அங்காரக தலங்களுக்குச் சென்று வழிபடுங்கள்.

    சனி, குரு வக்ர காலம்

    * குரோதி வருடம் ஆனி மாதம் 5-ந் தேதி முதல் ஐப்பசி மாதம் 18-ந் தேதி (19.6.2024 - 4.11.2024) வரை, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார்.

    * குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29-ந் தேதி முதல் தை மாதம் 20-ந் தேதி (15.10.2024 - 11.2.2025) வரை, ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார்.

    இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'குரோதி'. வருகிற பங்குனி மாதம் 30-ந் தேதி (13.4.2024) சனிக்கிழமை அன்று, மிருகசீரிஷம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில், மிதுன ராசியில் இரவு 8.10 மணிக்கு மங்களகரமான குரோதி ஆண்டு பிறக்கிறது.

    இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இந்த ஆண்டு சுக்ரனின் வீடான ரிஷப ராசிக்குச் செல்லும் குரு, அங்கு ஓராண்டு காலம் இருப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்களும், இனிய சம்பவங்களும் நடைபெறவும், மக்களுக்கு ஆன்மிக சிந்தனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு நாட்டில் வறட்சியும், புரட்சியும் உருவாகலாம். நீர்நிலைகள் வற்றும் சூழலும், நெருப்பால் ஆபத்தும், புதிய தொற்று நோய்கள் உருவெடுத்தலும் இருக்கும். அரசாங்கத்தின் புதிய வரிவிதிப்பு, மக்களுக்கு மன கலக்கத்தை ஏற்படுத்தும்.

    புஞ்சைப் பயிர்களின் விளைச்சல் பெருகும். பவளம் மற்றும் சிவப்பு நிற ரத்தினங்களின் உற்பத்தி அதிகரிக்கும். தங்கம் விலை ஏற்றம் காணும். கால்நடைகள் விருத்தியாகும். எண்ணெய், மற்றும் திரவப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். தேவையான அளவு மழை பெய்து விவசாயத்தை காப்பாற்றும்.

    அரசியல் களம் சூடுபிடிக்கும். மக்களின் வாழ்க்கை போராட்டமாக அமையும். பெட்ரோல், டீசல், எரிவாயு இறங்குவதுபோல் தோன்றி, மீண்டும் ஏறுமுகம் காணும். வெள்ளை நிற பொருட்களின் விலை உயரும். எப்படி இருந்தாலும் மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரிக்கும்.

    இந்த ஆண்டு அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் பெண்களின் பங்கு அதிகரிக்கும். சுக்ரன் வீட்டில் குரு உலா வருவதால் நாடு முழுவதும் திடீர், திடீரென பதற்றம் அதிகரிக்கும். கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் மக்கள் மன அமைதி காணலாம். இளைஞர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய வருடம் இது. சனி - செவ்வாய் சேர்க்கை மற்றும் சனி -செவ்வாய் பார்வைக் காலங்களில், இயற்கை சீற்றங்களாலும், நூதன தொற்று நோய்களாலும் அச்சுறுத்தல் ஏற்படும். சித்திரை 18-ந் தேதி (1.5.2024) அன்று, குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. பகைக் கிரகமான சுக்ரன் வீட்டிற்கு குரு செல்வதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

    சனி - செவ்வாய் சேர்க்கை (14.4.2024 முதல் 21.4.2024 வரை), சனி- செவ்வாய் பார்வை (23.10.2024 முதல் 17.1.2025 வரை) காலங்களில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கடக ராசிக்கு அஷ்டமச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு பாதச்சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச்சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடக்கிறது. இவர்கள் சுய ஜாதக அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளில், தசாபுத்திக்கு ஏற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது வளர்ச்சியைத் தரும்.

    • கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகபூஜை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில்உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்படிபல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில்,முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவிலில் முத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளால் அபிஷேகபூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதே போல பல்லடம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனை பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது.
    • தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் மகாபாரதி புத்தாண்டை கொண்டாடினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான அன்பாலயம் காப்பகம் இயங்கி வருகிறது.

    இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் பழங்கள் உள்ளிட்டவர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடினார்.

    மேலும் இந்த குழந்தைகள் உருவாக்கும் கைவினைப் பொருட்கள் கைத்தறி ஆடைகள் கண்டு பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் அன்பாலய குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி அன்பாலய நிர்வாகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    • ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.

    கோவை:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

    சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

    • புத்தாண்டு பிறப்பையொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.
    • சோபகிருது வருடப்பிறப்பையொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ் புத்தாண்டை யொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    நெல்லையப்பர் கோவில்

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை யொட்டி அதிகாலை 5 மணி முதல் சிறப்பு வழிபா டுகள் தொடங்கின. தொ டர்ந்து ஏராளமான பக் தர்கள் குடும்பத்தி னருடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    இன்று மாலையில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் சோமஸ்கந்தர் மண்ட பத்திற்கு எழுந்த ருளிய பின்னர் சோபகிருது வருடப்பிறப்பை யொட்டி தமிழ் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவில் ஜோதிடர் பங்கேற்று கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து பஞ்சா ங்கம் வாசிக்கப்படு கிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    சூரிய ஒளி

    ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும், விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்ட நெல்லை சந்திப்பு மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்தது. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நாயக்க, பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

    அத்தகைய பெருமை மிகுந்த இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக மும், மகா கும்பாபி ஷேகமும் நடைபெற்றது.

    பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    சித்திரை முதல் நாள் தொடங்கி 3 நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இத்தகைய அரிய நிகழ்வு சித்திரை 1-ம் நாளான இன்று நடைபெற்றது. சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் பரவசம் அடைந்து தரிசனம் செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகளும் அதனைத் தொடர்ந்து மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    கோபூஜை

    பாளை தெற்கு பஜார் ராஜகோபாலசுவாமி கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பாளை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கு கோ பூஜை நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில், பாளை மேல வாசல் சுப்பிரமணியசாமி கோவில், தெற்கு பஜாரில் உள்ள தெற்கு முத்தாரம்மன் கோவில், வெற்றி விநாயகர் கோவில், தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் காரில் வந்து தரிசனம் செய்து திரும்பினர். நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பாளை அருகே உள்ள சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் பரிவார சுவாமி களுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மதியம் உச்சிகால சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் இன்று காலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தீர்த்தம் எடுத்து வரப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.
    • பொதுநல ஆர்வலர்களுக்கு தோரண மலையான் விருது வழங்கப்பட்டது.

    கடையம்:

    தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இது அகஸ்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபடப்பட்ட சிறப்புகளும், மலை மீது குகையில் அமைந்த முருகன் கோவிலாகும். மேலும் இந்த மலையை சுற்றிலும் 64 தீர்த்த சுனைகள் அமைந்த சிறப்புடையதாகும்.

    இந்நிலையில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மேம்படவும், உலகம் செழிப்பு பெற வேண்டியும் இன்று காலை சிறப்பு பூஜைகள் அடிவாரத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து மலை மீது தீர்த்தம் எடுத்து வரப்பட்டு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப் பட்டது.உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டது .

    விவசாய கருவிலான ஏர், கலப்பை, மரம், தண்ணீர் இறவை செய்யும் கூனை உள்பட விவசாயக் கருவிகள் பசுமர கன்றுகள் வைத்து விவசாயிகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. சமூக சேவை மற்றும் பொதுநல ஆர்வலர்களுக்கு தோரண மலையான் விருது வழங்கப்பட்டது. மேலும் வருட பிறப்பை முன்னிட்டு 51 பெண்கள் பொங்கலிட்டு படையலிட்டு வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்ப கராமன் செய்திருந்தார்.

    • அம்பாளுக்கு 18 வகையான அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சங்கரேஸ்வரி அம்பாளுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.

    விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், பிரேமா, முருகன் ஆகியோர் செய்தனர்.

    ×