search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"

    • சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

    காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு, காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

     தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

     அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 5 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து ஸ்தம்பித்து.

    • காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.
    • 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

    கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது.

    மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சிவலிங்கத்திற்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
    • ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள்.

    சிவலிங்கத்திற்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர்.

    இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் ராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் சொர்க்கம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார்.

    அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து,

    அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும்

    அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.

    ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள்.

    சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு கோடி புண்ணியங்கள் சேருகிறது.

    சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும்.

    அதனால்தான் சொல்வார்கள், "சோறு கண்ட இடம் சொர்கம்" என்று.

    அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்."

    அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

    வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும், சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம்.

    சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் பவுர்ணமி தினத்தன்று, சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற வேண்டும்.

    • பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.
    • இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை.

    கடவுளை வணங்குவதன் மூலமே ஒவ்வொரு மனிதனுக்கும் மனத்தூய்மையும், ஆத்மசாந்தியும் கிடைக்கிறது. தெய்வத்தை வணங்குவது என்பது தெய்வத்தை நாம் நெருங்கிக் காண்கிறோம் என்பதாகும். வணங்கும் முறைகளை நாம் ஒன்பது வகையாகப் பிரிக்கலாம். அற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கவனித்தல்:-

    கவனிப்பது என்பதன் அர்த்தம் `கேட்பது' என்பதாகும். இது குறிப்பிடுவது என்னவென்றால், தெய்வக் கதைகளையும், தெய்வங்கள் குறித்த பிற விஷயங்களையும் பக்தியோடும் ஆர்வத்துடனும் அமைதியான இடத்தில் இருந்து கேட்க வேண்டும் என்பதாகும்.

    கீர்த்தனம்:-

    கீர்த்தனம் ஆலாபனை செய்வதென்பது, ஆராதனையின் மற்றொரு சிறப்பம்சமாகும். பகவானின் லீலைகளை மனதில் கொண்டு பயபக்தியுடன் கீர்த்தனையை இசைக்கோர்வையாக பாடுவது.

    நினைத்தல்:-

    பகவானைப் பற்றி நிரந்தரமாக சிந்திப்பதுதான் 'நினைத்தல்' என்பதாகும். மனதை சுத்தப்படுத்தி அதிகாலை முதல் இரவு வரை இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

    சேவை:-

    நாம் ஒவ்வொருவரும் இறைவனின் சேவகர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை. நம்மை பகவானுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்ய வேண்டும்.

    தாசி:-

    சேவையின் மற்றொரு வடிவம் தாசி என்பது. தாசி என்பது, தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்துச் சேவை செய்வதாகும். வாழ்க்கையில் வேறு எந்தவிதமான ஆசைகளோ, மோகங்களோ இல்லாமல் களங்கமற்ற பக்தியுடன் இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான் தாசிப் பணி.

    அர்ச்சனை:-

    உலகேஸ்வரனுக்கு நாம் சேவகர்கள் என்று கருதி பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.

    வணங்குதல்:-

    மனம், சொல், செயல் இவற்றால் தியானம் நடத்தி மந்திரங்கள் சொல்லி அர்ப்பணிப்பதும், சாஸ்டாங்கமாக விழுந்து இறைவனோடு அன்புகொள்வதும் வணங்குதல் எனப்படும்.

    இணைப்பு:-

    இறைவன் ஒரு மனிதனுக்கு நன்மையாகவோ அல்லது தீமையாகவோ வழங்குவது எதுவானாலும், அது அவனது நன்மைக்காகத்தான் என்பதாகும்.

    ஆத்ம சமர்ப்பணம்:-

    நமது சொந்த உடல், மனது மற்றும் சர்வ அங்கங்களையும் முழு சந்தோஷத்துடன் இறைவனுக்கு சமர்ப்பிப்பதுதான் ஆத்ம சர்ப்பணம்.

     பிரசாதம் சாப்பிடும் இறைவன்

    தினமும் சுவாமிக்கு பூஜை செய்யும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து வந்து நைவேத்தியத்தினை எடுத்துக்கொள்கிறது. இதனை இறைவனே எறும்பு வடிவில் எடுப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் இத்தல இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு. இதனைக் காண நீங்கள் திருவெறும்பூர் செல்ல வேண்டும். எறும்பாக வரும் இறைவனின் பெயர் எறும்பீஸ்வரர்.

     தமிழ்ப் புத்தாண்டில் அன்னாபிஷேகம்

    சிவாலயங்களில் வழக்கமாக ஐப்பசி பவுர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கமேசுவரர் திருக்கோவிலில் தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. மேலும் அங்குள்ள மற்ற மூர்த்தங்களுக்கும் அந்த நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படுவது அத்தலத்திற்குரிய கூடுதல் சிறப்பாகும்.

    அதிசய கிரகங்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நவக்கிரகங்கள் புதுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆம், எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல் இங்கே நவக்கிரகங்கள் காட்சி தரவில்லை. மாறாக, ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் நேர் கீழே ஒரு மேடை உள்ளது. நவக்கிரகங்களை வழிபடும் பக்தர்கள் அந்த மண்டபத்தை வலம் வந்து, தங்கள் கிரகங்களுக்கு பக்கமாக உள்ளது போல், மேடை அருகில் நின்று வழிபடுகிறார்கள். இதுபோல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.

    வித்தியாசமான தலவிருட்சம்

    * ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவிலின் சிவலிங்கம் மணலில் வடிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பாறை மீது தல விருட்சமான அத்திமரம் உள்ளது. மிகப் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது வியப்புக்குரியது.

     * தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசர் ஆலயத்தில் இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அபூர்வமான காட்சியாக அருள் தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவரது காலுக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.

     * தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர் மீது பங்குனி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களிலும் பவுர்ணமி அன்றும், அதற்கு முன்பு இருநாளும், பின் வரும் இருநாளிலும் சந்திரனின் கிரகணங்கள் மூர்த்தியின் மீது விழுகிறது.

    • சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது.
    • 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.

    முத்தூர்:

    ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் நேற்று மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் அருகே உள்ள சின்னாரிபட்டி கம்பம் மாதேசிலிங்கம் கோவில், காங்கயம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்பட காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    • பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் மற்றும் சிவபெருமான் முழுஉருவத்தில் காட்சி அளிக்கின்றனர்.

    இங்கு பிரதி பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    அன்னதோஷம் தீர ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவ தரிசனம் கோடி லிங்கங்கள் பார்த்த பலனை பெற்றுத் தரும் என்ற ஐதீகத்தின் படி ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி செங்கோட்டை பகுதி சிவன்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
    • பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் கோவிலில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், சிவன், அம்பாள், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, அணுக்க விநாயகர், கண்ணப்ப நாயனார், கன்னி மூல கணபதிவிநாயகர், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நாகதோஷ பரிகார விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கார்த்திகை முருகன், தண்டாயுதபாணி ,நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ,ராகு கேது, சனி, சன்னதி நவகிரகங்கள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
    • அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.

    சேலம்:

    ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    கார்த்திகை பவுர்ணமியன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றுவது போன்று ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து சிவனை வழிபடுவது சிறப்பானதாகும்.அன்னாபிஷேகத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வதால் பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் கிடைப்பதுடன் கடன், வறுமை நீங்கி, பாவங்கள் விலகி செல்வ வளம் சேரும்.இதனால் ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்கள் வண்ண வண்ண விளக்குகள், மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டி விழாவுக்கு தயாராகி வருகிறது.

    பொதுமக்களும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, பழவகைகள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை கோவில்களுக்கு கொடுத்து வருகின்றனர்.மேலும் நேற்று பிரதோஷத்தை யொட்டி சிவாலயங்களில் சிவபெருமான், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
    • 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று முன்தினமும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் சிவபெருமான், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி ஆகியோர் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×