search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kannimar Karupparayan temple."

    • அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனியில் விநாயகர், கன்னிமார்,பாலமுருகன், ஆதிபராசக்தி, கருப்பராய சுவாமி கோவில்உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி கன்னிமார் கருப்பராயன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜை நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பி.ஆர். டிரேடர்ஸ் உரிமையாளர் தண்ணீர்பந்தல்பி.தனபால் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம்எடுத்து வந்து கன்னிமார் கருப்பராயன் கோவிலில் சிறப்புவழிபாடு செய்தனர்.

    • 18-ந்தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • காப்புக்கட்டுதல், கோவில் சாட்டுதலும், காலை 9 மணி அளவில் பவானி கூடுதுறைக்கு தீா்த்தக்குடம் எடுத்தலும் நடைபெறுகிறது.

    அவினாசி :

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், புதுப்பாளையம் கிராமம் வலையபாளையத்தில் கன்னிமாா் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் சாட்டு விழா வருகிற 18-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    இதையடுத்து, காப்புக்கட்டுதல், கோவில் சாட்டுதலும், காலை 9 மணி அளவில் பவானி கூடுதுறைக்கு தீா்த்தக்குடம் எடுத்தலும் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு படைக்கலம் எடுத்தல், விநாயகா் கோவிலில் இருந்து கோவிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

    ×