search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு
    X

     ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த பச்சாபாளையம் மாகாளியம்மன்.

    பல்லடம் கோவில்களில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

    • கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகபூஜை செய்யப்பட்டது.

    பல்லடம் :

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்லடம் பகுதியில்உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்படிபல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில்,முருகப் பெருமானுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவிலில் முத்துக்கு மாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முருகப்பெருமானுக்கு 18 வகை வாசனை திரவியங்கள், பழங்கள், உள்ளிட்டவைகளால் அபிஷேகபூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதே போல பல்லடம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனை பழங்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    Next Story
    ×