search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை"

    • கழிவுநீர் நெல் வயல்களில் புகுந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் கிராமம் உள்ளது. முற்றிலும் நெல் விவசாயம் நடைபெறும் கிராமம் இது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் தார் சாலையில் ஓரத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் அதன் அருகில் உள்ள நெல் வயல்களில் புகுந்து விடுவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயி தெரிவிக்கின்றார்.

    எனவே கண்டமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் வாய்க்காலை பார்வையிட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தண்டீஸ்வரர் வேதஸ்ரேணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்ததமான காலி இடம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின்ரோட்டில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் நிலம் தற்போது பொதுமக்களின் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.

    அந்த காலி இடத்தில் பழைய உபகரணங்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் புதிய குப்பை கிடங்காக கோவில் நிலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.

    அப்பகுதியில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு விருந்து வைத்தார்போல் உணவு கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் மாடு உள்ளிட்ட விலங்குகள் எந்த நேரமும் அந்த இடத்தி, சுற்றி வருகின்றன.

    குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    மேலும் இந்த இடத்தின் குறுகலான சாலைகளில் வாகனங்களும் பல நாட் களாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்படுகின்றன.

    கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, 'நான் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக கோவி லுக்கு சொந்தமான இந்த காலி இடத்தில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் நிலம் குப்பை கொட்டும் கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த இடத்தின் அருகே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோவில் இடத்தில் குப்பைகள், உணவுக்கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

    பொதுமக்களே இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

    இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கோவில் காலி இடத்தில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்து உள்ளது. இந்த மாதிரியான பொது இடத்தில் கழிவுகளை கொட்டாமல் இருக்க பொதுமக்கள், குடியிருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    இல்லையெனில் கழிவுகளை கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள் விரைவில் அந்த இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    • துர்நாற்றம் வீசுவதால் அகற்ற கோரிக்கை
    • என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன.

    இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கழிவுகள் தேங்கி ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்தது. ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் இந்த கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

    இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரை உள்ள பகுதியில் உள்ள என்.பி. கால்வாயில் தூர்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரமாக ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர்.

    இந்த குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

    மேலும் இந்த குப்பை கூழங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு ஆற்றில் வாகனங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கூழங்கள் மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது.

    எனவே தூர்வாரி ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது
    • 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு குப்பை சேகரிக்க புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் நகரங்களில் குப்பை அகற்றுவது பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது.இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் உடுமலை நகராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் வாயிலாக வீடுகள் ,வணிகம் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பை சிறிய அளவிலான பேட்டரி வாகனங்கள் வாயிலாக பெரிய வாகனங்கள் மற்றும் நுண் உர குடில்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஏற்கனவே நகராட்சியில் 10 பேட்டரி வாகனங்கள் உள்ள நிலையில் ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் வாயிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அதிகாரிகள் கூறுகையில்,தற்போது 7வாகனங்கள் வந்துள்ளன. மேலும் 3 வாகனங்கள் வாங்க வேண்டி உள்ளது . விரைவில் தூய்மைப் பணிக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்றனர்.இந்த புதிய பேட்டரி வாகனங்களின் வருகையால் நகரின் குப்பை பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
    • குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கு வலம்புரி விளையில் உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகி றார்கள். இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி யில் இரு ந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இருப்பினும் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் நேற்று இரவு வலம்புரிவிளை குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டார். தீயை விரைந்து அணைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் அதிகளவு வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நச்சுப்பு கையின் காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள புகை மண்டலம் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தால் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    காற்று வேகமாக வீசுவதால் சுசீந்திரம் வரை புகை மண்டலங்களாக காட்சியளிக்கிறது. தீய ணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 40 தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்னும் தீயை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஆகலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • குப்பை கொட்டும் இடமாக கோவில் அன்னதான கூடம் மாறியது.
    • கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பூமிநாதன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

    பூமிநாதன் கோவில் வளாகத்தில் அன்ன தான கூடம் உள்ளது. இதன் பின்புறமாக காம்பவுண்டு சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குடியி ருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    மேலும் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதால் நாள் கணக்கில் குப்பைகள் மலை போல் தேங்கும் அவலம் உள்ளது. எனவே கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை ெதாட்டியை வைக்காமல் வேறுபகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புகழ்பெற்ற இந்த கோவிலின் சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு அதிகமானோர் வருவார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.

    இனிமேலாவது அதனை அகற்றி கோவில் சுற்று வட்டார பகுதியை தூய்மை யாக வைத்திருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை மாநகராட்சியின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    வடசென்னையில் உள்ள திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி குடிமை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த 2 மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றுவதை தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்க கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் தங்களின் வேலை பறிபோகும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கூறினார்கள். ராயபுரம் மண்டலத்தில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் 864 பேரும், திரு.வி.க.நகரில் 1,029 பேரும் உள்ளனர். இவர்களின் மூலம் சென்னை மாநகராட்சி தற்போது குப்பைகளை அகற்றி வருகிறது.

    குப்பைகள் அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

    இதனாலேயே இதற்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை மாநகராட்சியின் முடிவை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் அடையாளமாக வடசென்னை பகுதி சி.ஐ.டி.யூ., சென்னை மாநகராட்சி தொழிலாளர் அமைப்பு சார்பில் திரு.வி.க.நகர் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.

    சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.

    இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.

    மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

     இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

    மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.

    ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

    இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.

    மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.

    இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.

    பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.

    இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.

    பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.

    இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் பேரூராட்சி சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சுடுகாட்டை சுற்றி உள்ள இடங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

    இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்ற செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது;- திருவையாறில் சேகரமாகும் குப்பைகள் காவிரி கரையில் கொட்டப்பட்டு மக்காத குப்பை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுடுகாடு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் பேரூராட்சி சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சுடுகாட்டை சுற்றி உள்ள இடங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

    இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்ற செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது;- திருவையாறில் சேகரமாகும் குப்பைகள் காவிரி கரையில் கொட்டப்பட்டு மக்காத குப்பை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுடுகாடு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
    • 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-

    இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.

    அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.

    • கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
    • மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுவது, எரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் குப்பை கொட்ட கூடாது என பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு பிளாஸ்டிக், மரச்சா மான்கள், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள், வீட்டுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேசிய நெடுஞ்சாலை யோரம் குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி, தீ வைத்து எரிப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.

    வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், திடக்கழிவுகள், கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் லாரிகளில் கொண்டு வந்து அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்படுகின்றன. மேலும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை நேரத்தின் போது பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும்,பொது மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×