search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னதான கூடம்"

    • காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
    • பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    திண்டுக்கலில் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது.

    பாபா ஆசியுடனும், பக்தர்களின் பேராதரவுடனும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

    தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

    • பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.
    • ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா ஆலயம் இந்த ஆலயத்தின் நிர்வாகி சாய் முருகன் அவர்கள் சாய்பாபா மீது அளவுகடந்தபக்தி கொண்டு அவர் வீட்டின் முன்புறமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிறிய பாபா ஆலயத்தை தன் தாய், தந்தையின் உதவியுடன் ஆலயத்தை கட்டினார். திண்டுக்கல் நகர் பகுதி மக்கள் பாபா ஆலயம் இருப்பதை அறிந்து ஆலயத்திற்கு வர தொடங்கினர்.சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவை வணங்கிச் செல்ல வழிவகை செய்தார். இந்த பாபாவிற்கு ஆரத்தி நிகழ்ச்சியின்போது ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து பாபாவை தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை தோறும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினார். சாய் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமான காரணத்தினால் சப்பாத்தி இயந்திரம் ஒன்று வாங்கப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு தாரளாமாக சப்பாத்தி அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.

     

    அவரின் முயற்சியின்போது பல கஷ்டமான பாதைகளை கடந்து.. 2019ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை ஒழுங்குபடுத்தி சீரடி பாபா ஆலயத்தை உருவாக்க தொடங்கினார் . மேற்கூறையில் ஷீரடியில் உள்ள கோபுரம் போல அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆறு அடி உயரம் கொண்ட பளிங்கி கல்லால் ஆன பாபா சிலையினை நிறுவினார்.

    அதனைத் தொடர்ந்து பாபா ஆலயத்தில் மேற்புற பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்காக தியான மண்டபத்தையும் உருவாக்கினார்

    நமதுசீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கி வந்தனர் அதனை தொடர்ந்து சாய் பக்தர் சாய் முருகன் மதிய வேலை பக்தர்களுக்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும் எண்ணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான அன்னதானத்தை தொடங்கினார். பாபா எண்ணுவாதெல்லாம் பசி என்று யாரும் இருக்க கூடாது என எண்ணம் கொண்டவர். சாய் பக்தரான முருகன் புதிய முயற்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் சாய் பக்தர்களுக்கு காலை வேளை தினசரி பக்தர்களின் பசியாற்ற அருட்பிரசாதமாக காலை இட்லி சுட சுட தர தொடங்கினார் . திண்டுக்கல் நாகல்நகர் பாரதி புரத்தில் அமையப்பெற்ற பாபாவின் புகழ் அதிக அளவில் பக்தர்கள் மத்தியில் வரத் தொடங்கியது. ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயம் இருப்பதை அறிந்து வர தொடங்கினர்.

    ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    பாபா ஆலயத்திற்கு மனநிலை பாதிக்கபட்ட நபர்கள். அழைத்து வரப்பட்டனர் ஆலயத்திற்கு வந்து சென்றபிறகு இப்பொழுது முன்னேற்றம் அடைந்து வருவதாக பெற்றோர்கள் கூற நாம் வியந்துபோனோம்'', ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். பாபாவின் ஆசியை பெற்ற ஆலய நிர்வாகி சாய் முருகன் உடனடியாக பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் சாய் பக்தர்களின் திருக்கரங்களால் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் ஆலய முன்பாகவும் ஐம்பதாயிரம் கார்த்திகை தீபம் ஏற்றபட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

     

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திர சொல்லுக்கு ஏற்ப சாதி, மதம் பேதமின்றி ஏராளமான சாய் பக்தர்கள் ஆலயதிற்கு வர தொடங்கினர். தொடர்ந்து சாய்பாபா மீது அளவு கடந்த பக்தியினால் மீண்டும் ஒரு முயற்சியினை கையில் எடுத்தார் நிர்வாகி சாய் முருகன். ஆலயம் அருகிலேயே மாபெரும் ஒரு அன்னதானம் கூடத்தை கட்ட வேண்டும் என்று முயற்சி வீண்போகவில்லை வெற்றி பெற்று ஆலயத்திற்கு அருகிலேயே சாய் பக்தரின் ஒருவரின் உதவியோடு காலி இடம் வாங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு பூமி பூஜை போடப்பட்டு பக்தர்களின் உதவியோடு அன்னதான கூட கட்டுப்பணியை தொடங்கினார்கள் இந்த கட்டுமான பணிக்கு ஆலயத்துக்கு வருகின்ற சாய் பக்தர்கள் ஏராளமானோர் கட்டிடத்திற்கு தேவையான மணல், ஜல்லி, இரும்பு கம்பி, சிமெண்ட் என கட்டிடத்தின் மூலப் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் இயன்றதை செய்தனர். .இந்த அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற (28.03. 24) வியாழக்கிழமை திறப்பு விழா காண உள்ளது. அன்று முதலே தினசரி காலை இட்லி, பொங்கல், மதியம் வடை, பாயசத்துடன் உணவு, இரவு சப்பாத்தி, கோதுமை தோசை குருமா, சட்னி என மூன்று வேலையும் சாய் பக்தர்களுக்கு உணவளிக்க போவதாக திட்டமிட்டு உள்ளேன் என கோயில் நிர்வாகியும் சாய் பக்தருமான சாய் முருகன் தெரிவித்தார்.

    • குப்பை கொட்டும் இடமாக கோவில் அன்னதான கூடம் மாறியது.
    • கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பூமிநாதன் கோவில் அமைந்துள்ளது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

    பூமிநாதன் கோவில் வளாகத்தில் அன்ன தான கூடம் உள்ளது. இதன் பின்புறமாக காம்பவுண்டு சுவர் அருகே குப்பை தொட்டி வைக்கப் பட்டுள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த குடியி ருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    மேலும் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவதால் நாள் கணக்கில் குப்பைகள் மலை போல் தேங்கும் அவலம் உள்ளது. எனவே கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை ெதாட்டியை வைக்காமல் வேறுபகுதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், புகழ்பெற்ற இந்த கோவிலின் சுற்றுப்பு றத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே கோவிலுக்கு அதிகமானோர் வருவார்கள். ஆனால் ஊராட்சி நிர்வாகம் கோவில் காம்பவுண்டு பகுதியில் குப்பை தொட்டியை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.

    இனிமேலாவது அதனை அகற்றி கோவில் சுற்று வட்டார பகுதியை தூய்மை யாக வைத்திருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×