search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baba"

    • பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.
    • ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா ஆலயம் இந்த ஆலயத்தின் நிர்வாகி சாய் முருகன் அவர்கள் சாய்பாபா மீது அளவுகடந்தபக்தி கொண்டு அவர் வீட்டின் முன்புறமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிறிய பாபா ஆலயத்தை தன் தாய், தந்தையின் உதவியுடன் ஆலயத்தை கட்டினார். திண்டுக்கல் நகர் பகுதி மக்கள் பாபா ஆலயம் இருப்பதை அறிந்து ஆலயத்திற்கு வர தொடங்கினர்.சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவை வணங்கிச் செல்ல வழிவகை செய்தார். இந்த பாபாவிற்கு ஆரத்தி நிகழ்ச்சியின்போது ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து பாபாவை தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை தோறும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினார். சாய் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமான காரணத்தினால் சப்பாத்தி இயந்திரம் ஒன்று வாங்கப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு தாரளாமாக சப்பாத்தி அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.

     

    அவரின் முயற்சியின்போது பல கஷ்டமான பாதைகளை கடந்து.. 2019ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை ஒழுங்குபடுத்தி சீரடி பாபா ஆலயத்தை உருவாக்க தொடங்கினார் . மேற்கூறையில் ஷீரடியில் உள்ள கோபுரம் போல அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆறு அடி உயரம் கொண்ட பளிங்கி கல்லால் ஆன பாபா சிலையினை நிறுவினார்.

    அதனைத் தொடர்ந்து பாபா ஆலயத்தில் மேற்புற பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்காக தியான மண்டபத்தையும் உருவாக்கினார்

    நமதுசீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கி வந்தனர் அதனை தொடர்ந்து சாய் பக்தர் சாய் முருகன் மதிய வேலை பக்தர்களுக்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும் எண்ணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான அன்னதானத்தை தொடங்கினார். பாபா எண்ணுவாதெல்லாம் பசி என்று யாரும் இருக்க கூடாது என எண்ணம் கொண்டவர். சாய் பக்தரான முருகன் புதிய முயற்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் சாய் பக்தர்களுக்கு காலை வேளை தினசரி பக்தர்களின் பசியாற்ற அருட்பிரசாதமாக காலை இட்லி சுட சுட தர தொடங்கினார் . திண்டுக்கல் நாகல்நகர் பாரதி புரத்தில் அமையப்பெற்ற பாபாவின் புகழ் அதிக அளவில் பக்தர்கள் மத்தியில் வரத் தொடங்கியது. ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயம் இருப்பதை அறிந்து வர தொடங்கினர்.

    ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    பாபா ஆலயத்திற்கு மனநிலை பாதிக்கபட்ட நபர்கள். அழைத்து வரப்பட்டனர் ஆலயத்திற்கு வந்து சென்றபிறகு இப்பொழுது முன்னேற்றம் அடைந்து வருவதாக பெற்றோர்கள் கூற நாம் வியந்துபோனோம்'', ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். பாபாவின் ஆசியை பெற்ற ஆலய நிர்வாகி சாய் முருகன் உடனடியாக பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் சாய் பக்தர்களின் திருக்கரங்களால் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் ஆலய முன்பாகவும் ஐம்பதாயிரம் கார்த்திகை தீபம் ஏற்றபட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

     

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திர சொல்லுக்கு ஏற்ப சாதி, மதம் பேதமின்றி ஏராளமான சாய் பக்தர்கள் ஆலயதிற்கு வர தொடங்கினர். தொடர்ந்து சாய்பாபா மீது அளவு கடந்த பக்தியினால் மீண்டும் ஒரு முயற்சியினை கையில் எடுத்தார் நிர்வாகி சாய் முருகன். ஆலயம் அருகிலேயே மாபெரும் ஒரு அன்னதானம் கூடத்தை கட்ட வேண்டும் என்று முயற்சி வீண்போகவில்லை வெற்றி பெற்று ஆலயத்திற்கு அருகிலேயே சாய் பக்தரின் ஒருவரின் உதவியோடு காலி இடம் வாங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு பூமி பூஜை போடப்பட்டு பக்தர்களின் உதவியோடு அன்னதான கூட கட்டுப்பணியை தொடங்கினார்கள் இந்த கட்டுமான பணிக்கு ஆலயத்துக்கு வருகின்ற சாய் பக்தர்கள் ஏராளமானோர் கட்டிடத்திற்கு தேவையான மணல், ஜல்லி, இரும்பு கம்பி, சிமெண்ட் என கட்டிடத்தின் மூலப் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் இயன்றதை செய்தனர். .இந்த அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற (28.03. 24) வியாழக்கிழமை திறப்பு விழா காண உள்ளது. அன்று முதலே தினசரி காலை இட்லி, பொங்கல், மதியம் வடை, பாயசத்துடன் உணவு, இரவு சப்பாத்தி, கோதுமை தோசை குருமா, சட்னி என மூன்று வேலையும் சாய் பக்தர்களுக்கு உணவளிக்க போவதாக திட்டமிட்டு உள்ளேன் என கோயில் நிர்வாகியும் சாய் பக்தருமான சாய் முருகன் தெரிவித்தார்.

    • திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

    திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி.

    இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

    இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது.

    இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார்.

    அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின.

    ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
    • இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

     

    பாபா

    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

     

    டப்பிங் பணியில் ரஜினி

    டப்பிங் பணியில் ரஜினி

    இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

     

    ரீ-ரிலீஸ் தேதி

    ரீ-ரிலீஸ் தேதி

    இந்நிலையில் 'பாபா' படத்தின் ரீ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
    • இப்படம் தற்போது புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

    கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

     

    பாபா

    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

     

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நேற்று பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

     

    பாபா

    பாபா

    பாபா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாபா படத்தில் மட்டும்தான் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளதா? மற்றவை எல்லாம் புத்தர் பற்றிய படங்களா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் சமூதாய பொறுப்புள்ளவர் என்றும் அன்புமணி பாராட்டியுள்ளார்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'.
    • இப்படம் தற்போது புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

     

    பாபா

    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

     

    பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி

    பாபா படத்திற்காக டப்பிங் பணியில் ஈடுபட்ட ரஜினி

    இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த புதிய டிரைலரை ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் ஒரு படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியாகிறது என்று பதிவிட்டுள்ளார்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
    • இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.


    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


    பாபா

    இதைத்தொடர்ந்து, 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.


    டப்பிங் பணியில் ரஜினிகாந்த்

    இந்நிலையில், 'பாபா' படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
    • இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.


    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


    பாபா

    'பாபா'வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் 'பாபா' முத்திரை தற்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.


    பாபா

    இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டு விட்டேன்.
    • சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷத்தில் 10% கூட எனக்கு கிடைக்கவில்லை.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது:

    எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ஸ்ரீராகவேந்திரர், பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன்.

    இமயமலையில் இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும்.குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கிறது. அங்கே உள்ள சித்தர்கள் அதில் குளிப்பதால் அந்த நதி பவித்ரமானது.

    சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம்.

    அதேபோல் நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும்.

    வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

    இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    ×