என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "badrinath temple"

    • ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
    • பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபாஜி குகைக்கு ரஜினிகாந்த் சென்றார். இந்நிலையில், பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார். இங்கு ஒரு வாரம் அவர் தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயுள்ளன.

    • பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.

    அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்வதாகவும், அதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லும் ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.



    நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.
    • சாமியார் ஒருவர் கடும் பனிபொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார்.

    டோராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இமயமலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் சென்று வருகின்றனர்.

    தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளிலும் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    ஆனாலும் அங்குள்ள சாமியார் ஒருவர் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஈடுபட்டார். இது அங்கு சென்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதனை யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.
    • கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவில் மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை திறந்து இருக்கும். இன்று காலை 7.10 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்காக கடந்த சனிக்கிழமை பக்தர்கள் யாத்திரை தொடங்கியது. கோவில் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி நுழைவு வாயில் முழுவதும் பல டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    • இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
    • கோவிலுக்குள் நுழையும் முன்பாக, சுடுநீரில் நீராடுவது வழக்கம்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாக போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.


    `சார் தாம்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் இந்த பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று. பத்ரிநாத் கோவிலின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. அங்குள்ள வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள்.

    இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது. பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன்பாக, இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம்.


    பத்ரிநாத் கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே மகாவிஷ்ணு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

    இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறந்து வைக்கப்படும்.

    • இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
    • சார் தாம் யாத்திரையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    புதுடெல்லி:

    இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சார் தாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோவில்களுக்கு செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக் நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள சுவாரசியமான அம்சங்களில் ஒன்று வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள். இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது.

    பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன் இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம். பத்ரிநாத் கோவில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

    இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே திறந்து வைக்கப்படும்

    இந்நிலையில், இந்த ஆண்டு மே 4-ம் தேதி காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வசந்த பஞ்சமியை முன்னிட்டு நரேந்திர நகர் அரண்மனையில் இன்று நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.

    சார் தாம் யாத்திரையின்போது நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் நடை 6 மாதத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். #BadrinathTemple #CharDhamYatra
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் 4 புனித தலங்களில் இக்கோவிலும் ஒன்று. 

    நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

    அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 4.15 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க கோவில் நடை திறக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவில் நடையை தலைமை பூசாரி ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி திறந்தார். அப்போது கோவில் பூசாரிகள், நிர்வாகிகள் மற்றும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆளுநர் பேபி ராணி மயூர்யா, முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற முக்கிய பிரமுகர்களும் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

    இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில், பத்ரிநாத் விஷ்ணு கோவில் மற்றும் கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய அம்மன் கோவில்களுக்கான சார்தாம் யாத்திரை அட்சய திருதியை தினத்தில் (மே 7) தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு தொடங்கிய நிலையில், இன்று பத்ரிநாத் விஷ்ணு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு சார்தாம் யாத்திரையை நிறைவு செய்வார்கள். #BadrinathTemple #CharDhamYatra
    ×