search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Char Dham Yatra"

    • சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்‌ஷய திரிதியை அன்று தொடங்கியது.
    • சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோவிலில் இருந்து தொடங்கி உயரமான இடங்களில் அமைந்துள்ள மற்ற மூன்று கோவில்களுக்கு செல்வதுதான் சார் தாம் யாத்திரை.

    இந்த சார் தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அக்ஷய திரிதியை அன்று தொடங்கியது. அதன் பின்னர் நேற்றைய தேதி வரை சார் தாம் யாத்திரைக்கு யாத்ரீகர்களின் வருகையின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், " முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி சார் தாம் யாத்திரையில் வரும் பக்தர்களின் சுமூகமான தரிசனத்திற்காக உத்தரகாண்ட் காவல்துறை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று மே 18ம் தேதி வரை, சார் தாம் யாத்திரையில் சென்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது " என்று குறிப்பிட்டிருந்தது.

    மேலும், சார் தாம் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்ய மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

    • பேருந்து விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல்
    • உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் சிவராஜ் சிங் சவுகான்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இது குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உத்தரகாண்ட் அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உடல்களை மத்திய பிரதேசத்திற்கு கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார்.
    • கங்கோத்ரி, யமுனோத்ரியில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சார்தாம் தலங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், முன்னெப்போதும் இல்லாத அளவு யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் யமுனோத்ரி நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்தது. பேருந்தில் பயணித்த 22 பக்தர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்தார். மேலும் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    6 மாத கால இடைவெளிக்குப் பிறகு கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களில் மே 3 ஆம் தேதி நடை திறக்கப்பட்டதன் மூலம் சார் தாம் யாத்திரை தொடங்கியது. அதன்பின்னர் கேதார்நாத்தில் மே 6 ஆம் தேதியும், பத்ரிநாத்தில் மே 8 ஆம் தேதியும் நடை திறக்கப்பட்டது.

    ×