search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VIP darshan"

    • திருப்பதி தேவஸ்தானம் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது.
    • லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.

    மேலும், கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் நாளை காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தான்ம் அறிவித்துள்ளது.

    மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சார் தாம் யாத்திரை செல்ல கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
    • கோவிலில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ, ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    டேராடூன்:

    இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

    தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.

    இதற்கிடையே, சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை விஐபி தரிசனத்துக்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி கூறுகையில், யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள். புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    • திருப்பதியில் 69,640 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நேற்று அன்னம்மையா பவனில் செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில் நடந்தது.

    அலிப்பிரியில் ஆன்மீக பூங்கா அமைக்க முதல்கட்ட பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.9.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பத்மாவதி ஓய்வு இல்ல அறைகளை பராமரிப்பதற்காக ரூ.3.80 கோடியும், தேவஸ்தான ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களில் மருந்து வாங்க ரூ.2.50 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    திருப்பதியில் நேற்று 69,640 பேர் தரிசனம் செய்தனர். 28,649 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
    • இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.

    வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×