search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VIP darshan"

    • ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    • திருப்பதியில் 69,640 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கு முன்பு முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் இன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நேற்று அன்னம்மையா பவனில் செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமையில் நடந்தது.

    அலிப்பிரியில் ஆன்மீக பூங்கா அமைக்க முதல்கட்ட பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் மலைப்பாதையில் தடுப்பு சுவர் அமைக்க ரூ.9.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பத்மாவதி ஓய்வு இல்ல அறைகளை பராமரிப்பதற்காக ரூ.3.80 கோடியும், தேவஸ்தான ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களில் மருந்து வாங்க ரூ.2.50 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    திருப்பதியில் நேற்று 69,640 பேர் தரிசனம் செய்தனர். 28,649 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.
    • இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும்.

    வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இரவில் காத்திருக்கும் பக்தர்கள், காலையில் விரைவாக தரிசனம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தினமும் பக்தர்கள் திருமலைக்கு வந்து வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும் திருமலையில் உள்ள அறைகள் வாங்கும் நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது.

    இந்த தகவலை திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×