search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unsanitary"

    • கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.
    • மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுவது, எரிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை மதுரவாயல் மேம்பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் குப்பை கொட்ட கூடாது என பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அங்கு பிளாஸ்டிக், மரச்சா மான்கள், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள், வீட்டுக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேசிய நெடுஞ்சாலை யோரம் குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி, தீ வைத்து எரிப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது.

    வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், திடக்கழிவுகள், கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் லாரிகளில் கொண்டு வந்து அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்படுகின்றன. மேலும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை லாரிகள் மூலம் கொட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழை நேரத்தின் போது பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும்,பொது மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×