search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளச்சேரியில் குப்பை கொட்டும் இடமாக மாறிய கோவில் நிலம்
    X

    வேளச்சேரியில் குப்பை கொட்டும் இடமாக மாறிய கோவில் நிலம்

    • குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் தண்டீஸ்வரர் வேதஸ்ரேணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்ததமான காலி இடம் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3-வது மெயின்ரோட்டில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் நிலம் தற்போது பொதுமக்களின் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது.

    அந்த காலி இடத்தில் பழைய உபகரணங்கள், உடைந்த கண்ணாடி, பிளாஸ்டிக் பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் தினந்தோறும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் புதிய குப்பை கிடங்காக கோவில் நிலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது.

    அப்பகுதியில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு விருந்து வைத்தார்போல் உணவு கழிவுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் மாடு உள்ளிட்ட விலங்குகள் எந்த நேரமும் அந்த இடத்தி, சுற்றி வருகின்றன.

    குப்பையில் வீசப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    மேலும் இந்த இடத்தின் குறுகலான சாலைகளில் வாகனங்களும் பல நாட் களாக ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்படுகின்றன.

    கோவில் நிலத்தில் குப்பை கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து, தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, 'நான் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக கோவி லுக்கு சொந்தமான இந்த காலி இடத்தில் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில் நிலம் குப்பை கொட்டும் கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த இடத்தின் அருகே ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கோவில் இடத்தில் குப்பைகள், உணவுக்கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

    பொதுமக்களே இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். மேலும் தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகள் முழுவதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் கழிவுகளை கொட்டாத அளவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

    இதுகுறித்து மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள கோவில் காலி இடத்தில் குப்பைகள் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் வந்து உள்ளது. இந்த மாதிரியான பொது இடத்தில் கழிவுகளை கொட்டாமல் இருக்க பொதுமக்கள், குடியிருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    இல்லையெனில் கழிவுகளை கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகாரிகள் விரைவில் அந்த இடத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    Next Story
    ×