search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carts"

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தினமும் 12 டன் குப்பைகள் அள்ளப்படுகிறது.
    • 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்கு ரூ. 65.70 லட்சம் செலவில் 15-வது நிதிக்குழு மானியத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 9 வாகனம் வாங்கபட்டது . இந்த வாகனங்களை பயன்பட்டிற்கு விடும் பணியினை நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்பு இரண்டு டன் குப்பபைகளை அள்ளும் 9 வண்டிகளும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தன.

    இது குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா கூறும்போது ;-

    இந்த வாகனங்கள் மூலம் நகராட்சியில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என நாள்தோறும் 12 டன் குப்பைகள் அள்ளபட்டு நகராட்சி குப்பை சேகரிக்கும் மையத்திற்கு எடுத்து செல்லபடும்.

    அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கி சலுகை விலையில் விலையில் வழங்கப்படும். மேலும் நகராட்சி பகுதியில் இனி குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அள்ளப்படும் என்றார்.

    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ், கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நாகூர் வீ.ஹெச்.எப் குடும்பத்தினர் மற்றும் திட்டச்சேரி நண்பர்கள் இணைந்து நடத்திய குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை நாகை தி.மு.க மாவட்ட செயலாளர் கெளதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

    இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.

    பந்தய தொலைவு குதிரைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய குதிரையில் சென்னை, கரூர், பேராவூரணி குதிரைகள் முதல் முன்று இடங்களை பெற்றது.

    கரிச்சான் குதிரையில் திப்புராஜபுரம், நாகூர், பூண்டி குதிரைகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றது. புது குதிரையில் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் திருச்சி, அரதாங்கி குதிரைகளும், 2ம் நாகை, மதுரை குதிரைகளும், 3ம் திருச்சி, நாகூர் குதிரைகளும் பரிசுகளைப் பெற்றன.

    வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் நாகூர் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், திட்டச்சேரி அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல் பாசித், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, வி.ஹெச்.எப் குடும்பத்தார் நூர்சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

    ×