search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதங்குடியில், குதிரை வண்டி போட்டி
    X

    போட்டியில் சீறிப்பாய்ந்து ஓடிய குதிரை வண்டிகள்.

    பூதங்குடியில், குதிரை வண்டி போட்டி

    • பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ், கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நாகூர் வீ.ஹெச்.எப் குடும்பத்தினர் மற்றும் திட்டச்சேரி நண்பர்கள் இணைந்து நடத்திய குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. போட்டியை நாகை தி.மு.க மாவட்ட செயலாளர் கெளதமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்போட்டி புதிய குதிரை, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

    இதில் சேலம், கோயம்புத்தூா், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் பங்கேற்றன.

    பந்தய தொலைவு குதிரைகளுக்கு ஏற்ப நிா்ணயிக்கப்பட்டது. இதில் பெரிய குதிரையில் சென்னை, கரூர், பேராவூரணி குதிரைகள் முதல் முன்று இடங்களை பெற்றது.

    கரிச்சான் குதிரையில் திப்புராஜபுரம், நாகூர், பூண்டி குதிரைகள் முதல் மூன்று பரிசுகளை பெற்றது. புது குதிரையில் 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதலிடம் திருச்சி, அரதாங்கி குதிரைகளும், 2ம் நாகை, மதுரை குதிரைகளும், 3ம் திருச்சி, நாகூர் குதிரைகளும் பரிசுகளைப் பெற்றன.

    வெற்றி பெற்ற குதிரை வண்டிகளை ஓட்டியவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், பரிசுக் கோப்பை ஆகியன வழங்கப்பட்டன.

    இதில் நாகூர் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார், திட்டச்சேரி அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல் பாசித், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, வி.ஹெச்.எப் குடும்பத்தார் நூர்சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வந்திருந்தனா். இதையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

    Next Story
    ×