search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார சீர்கேடு"

    • தருமபுரி அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டில் உள்ளது.
    • உள்நோயாளிகள் பீதியில் உள்ளனர்

    தருமபுரி சேலம் பை-பாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது.

    இந்த மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி வளாகம், அவசர சிகிச்சை பிரிவு , உள்ளிட்ட பகுதிகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி உள்ளதால், சிகிச்சைக்கு வருபவர்கள் தொற்றுநோய்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி அரசு மருத்து வக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தருமபுரி மாவட்டம் மட்டும் இன்றி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் பிரசவம், விபத்து சிகிச்சை உட்பட, பல்வேறு சிகிச்சைகளுக்கு இங்கு உள்நோயாளிகள் மட்டும் இன்றி, புறநோயாளிகளாக தினந்தோறும், 2000 க்கும் மேலானோர் வந்து செல்கின்றனர்.

    1200 படுக்கை வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டில் முக்கி யத்துவம் வாய்ந்த, தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பிரசவ வார்டு மற்றும் பார்வையா ளர்கள் காத்திருப்பு அறை அருகே உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில தினங்களுக்கு முன் சேதமடைந்தது.

    மேலும், 500 படுக்கை அறைகள் கொண்ட பிரதான கட்டடத்தில் உள்ள கழி வறை குழாய்கள் சேதமடைந்துள்ளதுடன், கழிவறைகளில் இருந்து நேரடியாக குழாய்களில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும், தற்போது மழை காலமாக உள்ளதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. சேதமான சாக்கடை கால்வாயை சீரமைக்கவும், கழிவறைகளில் இருந்து கழிவு நீர் கட்டடத்தில் மீது வெளியேறுவதை தடுக்க, தருமபுரி மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் ஆர்வம் காட்டாமல் உள்ளது.

    மேலும் அவசர சிகிச்சை பிரிவு அருகே பொதுமக்கள் காலணி விடும் இடத்தில் எலிகள் ஓடி விளையாடி துர்நாற்றம் வீசி வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உயிருக்கு அபாயம் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மட்டும் இன்றி, கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    இதனால், இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் மட்டும் இன்றி, அவர்களை காண வருபவர்களுக்கும், பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தருமபுரி அரசு மருத்துவமனை நிர்வாகம், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள கழிவறைகள், கழிவு நீர் கால்வாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள நடுத்தெரு, பெரிய தெரு, வண்ணாரப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்குவதை தவிர்க்க மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்யும் தொடர்மழையின் காரணமாக, மழை நீருடன் கலந்த கழிவுநீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றத்தை வீசுகிறது.

    அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. சுகாதார சீர்கடி ஏற்படுத்தும் வகையில் கால்வாயில் தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை. இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் திரண்டு சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன்,பொறியாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் கொய்யாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்
    • சமுதாயக்கூடம் கட்டித் தர கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது காட்பாடி அருகே பெரியபட்டரையைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை, போர்வெல் பழுதடைந்து 1மாதம் ஆகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதி பொதுமக்களுக்காக 1993-ம் ஆண்டு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பொது காரியங்கள் செய்வதற்கான மண்டபம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த இடத்தில் ஒரு சிலர் தவறான அணுகுமுறையில் பட்டா பெறப்பட்டு அங்கே குடியேறி வீடு கட்டி உள்ளனர்,

    எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடத்தையும் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பொது உபயோக இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு காரியமண்டபம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.
    • தூர்வாரப்படாததால் தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.

    இதனை அடுத்து குளத்தை பராமரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி, இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது. மேலும் சிலைகள் மற்றும் முளைப்பாரி கரைக்க தடை விதித்து உத்தரவிட்டது. சிலைகள் கரைக்க கோட்டை குளம் முன்பு 2015ல் பெரிய தொட்டி அமைக்கப்பட்டது. இதில் சிலைகள், முளைப்பாரி கரைக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்லில் கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. இதற்காக 65 சிலைகள் இந்து அமைப்பு சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் கோட்டை குளத்தில் பிரத்தியேகமாக கட்டப்பட்ட தொட்டியில் கரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் எடுக்கப்பட்ட முளைப்பாரி ஆகியவையும் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தூர்வாரப்படாமல் உள்ள இந்த தொட்டியினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அருகே பத்ரகாளி அம்மன், அய்யப்பன் கோவில், ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த தொட்டியை உடனடியாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொட்டியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் பேரூராட்சியில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

    அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடுகளை சரி செய்யவும், பாலாற்றின் குறுக்கே சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை சீரமைக்கவும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்களை நியமிக்கவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (12-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர்களான மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.
    • 4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    தாம்பரம் மாநகராட்சி 38-வது வார்டுக்குட்பட்ட அஸ்தினாபுரம் மற்றும் மகேஸ்வரி நகரில் 7 தெருக்கள் உள்ளன. இங்கு 130 வீடுகள் உள்ளன.

    இந்த குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் இருந்து வெளியேறும் மழைநீர் 4-வது தெரு வழியாக சென்று அங்குள்ள ரேஷன் கடையையொட்டியுள்ள காய்வாய் வழியாக ஓடி செம்பரம்பாக்கம் ஏரியை சென்றடையும். இந்த கால்வாய் மற்றும் தண்ணீர் சென்று சேரும் இடம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் குடியிருப்புகளில் தேங்கும் நிலை காணப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவதால் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மகேஸ்வரி நகரில் உள்ள கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள தெருக்களிலும் கால்வாய்கள் தூர் வாரப்படாமலேயே உள்ளது.

    4-வது தெருவில் மட்டும் பெயரளவுக்கு கால்வாயை தூர் வாரி சென்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்.

    அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. 2 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கழிவு நீரும் கலந்துள்ளதால் அஸ்தினாபுரம் பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது என்றும் மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சுகாதார சீர்கேட்டை சரி செய்யவும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதற்கிடையே ஒரு குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோயும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று அஸ்தினாபுரத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை போக்குவதற்கு நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
    • கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.

    இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை யும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரையில் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியுள்ளது.
    • இதனால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது. எல்லைகள் அதிகரித்தாலும் அதற்காக எந்த வசதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்பட வில்லை.

    விரிவாக்க பகுதியான அவனியாபுரம், வில்லா புரம், வண்டியூர், திருப்ப ரங்குன்றம் போன்ற பகுதி களில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை வசதி போன்றவை கொண்ட வரப்படவில்லை.

    மேலும் வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. மாந கராட்சி சாா்பில் குப்பை களை சேகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் 90 சதவீதம் பழுதடைந்து வெறும் காட்சி பொருளாக உள்ளன. இதனால் மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் 100 சதவீதம் மனித உழைப்பை நம்பியே உள்ளது.

    இதன் காரணமாக மாநகராட்சியில் குப்பைகள் முழுவதும் அகற்றப்படு வதில்லை. இதனால் முக்கிய சாலைகள், தெருக் கள் என அனைத்து பகுதி களிலும் குப்பைகள் மலை போல் குவிகின்றன. பண் டிகை காலங்களில் வழக் கத்தை விட குப்பைகள் அதிகளவில் சேருகின்றன. இத னால் நகரமே எங்கு பார்த்தாலும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா மதுரையில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக வாழை மரம், மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் நேற்று இரவு முதல் குவியல் குவியலாக குப்பை தொட்டியில் பொதுமக்கள் போட ஆரம்பித்தனர். சிலர் நடுரோட்டிலும் குப்பைகள் கொட்டுவதை பார்கக முடிகிறது.

    இதன் காரணமாக இன்று காலை மதுரை நகரம் குப்பை காடாக காட்சியளித்தது. குறிப்பாக பெரியார் பஸ்நிலையம், மாசி வீதிகள், ஜெய்ஹிந்துபுரம், மகால் பகுதிகள், ஜீவா நகர், செல்லூர், அண்ணாநகர், பி.பி.சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டன் பகுதியில் குப்பைகள் தேங்கின.

    பணியாளர்கள் பற்றா குறையால் குப்பைகளை அகற்ற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மழை பெய்ததாலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தன. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

    தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் இன்னும் அதற்கான முன்னெடுப்பை தொடங்க வில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி தற்போது சுகாதார சீர்கேட்டில் உள்ளது.

    • பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    • கலெக்டரிடம் புகார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சகாய அன்னை ஆலய சுற்றுசுவர் மற்றும் அக்சீலியம் தொழிற் கல்வி சுற்றுசுவர் அருகில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர்.

    தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குப்பைகள் கொளுத்தும் போது புகை மண்டலம் சூழ்ந்து பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கக்கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.

    • பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் இறந்ததாக புகார்
    • நஷ்ட ஈடு பெற்று தர வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த பள்ளகொள்ளை கிராமத்தை சேர்ந்த வர் குமாரசாமி, விவசாயி. இவர் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசுமாடு தற்போது 8 மாத சினையாக இருந்தது.

    பசுமாட்டை கடந்த 1-ந் தேதி குமாரசாமி கோட்டையூர் ஏரியில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்துவிட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பள்ளத்தில் பசுமாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து குமாரசாமி அணைக்கட்டு போலீசில், பனந்தோப்பு பட்டியைச் சேர்ந்த பக்கத்து நிலத்துகாரின் பசு மாடு முட்டியதில் தனது பசுமாடு இறந்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் எனவும் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிவாரணம் கிடைக்கும் வரை இறந்த பசுமாட்டை அப்புறப்படுத்த உரிமையாளர் மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    6 நாட்கள் ஆகியும் இறந்துபோன பசுமாட்டை அப்பு றப்ப டுத்தாமல் ஏரியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்துகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்கமுடியாமல் மூக்கை பிடித்த படியே கடந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இறந்து போன மாட்டை அந்த பகுதியில் இருந்து அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×