search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலம்புரிவிளை"

    • 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
    • குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கு வலம்புரி விளையில் உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகி றார்கள். இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி யில் இரு ந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இருப்பினும் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் நேற்று இரவு வலம்புரிவிளை குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டார். தீயை விரைந்து அணைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் அதிகளவு வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நச்சுப்பு கையின் காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள புகை மண்டலம் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தால் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    காற்று வேகமாக வீசுவதால் சுசீந்திரம் வரை புகை மண்டலங்களாக காட்சியளிக்கிறது. தீய ணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 40 தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்னும் தீயை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஆகலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    3-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமாரி:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணி யில் ஈடு பட்டனர்.

    தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.தீய ணைப்பு வீரர்கள் தீய ணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகர மாக உள்ளனர் .

    அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத் தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ- மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடு முறை விடப்பட்டது.

    இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ள னர்.

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராட்டம்
    • இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோ வில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. தற்பொழுது நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

    மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வரும் நிலையில் மக்காத குப்பைகளை மட்டும் குப்பை கிடங்கில் கொட்டி வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் குப்பை கிடங்கில் இருந்து புகைமண்டலங்கள் வந்தது. இதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

    பின்னர் இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.உடனடியாக நாகர்கோவில் நிலைய தீயணைப்பு வீரர்கள் வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கு எரிந்த தீயை தண்ணீரை பீச்சு அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நாகர்கோவில் நகரில் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த குப்பை கிடங்கை மாற்றுவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கிருந்து வரும் துர்நாற்றத் தின் காரணமாகவும் புகை மண்டலத்தின் காரணமாக வும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகுள்ளாகி உள்ளனர். எனவே மேயர் மகேஷ் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.74.54 கோடி வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார் கள். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் வேலை நடந்து வருகிறது.

    அந்தப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை பணி 17 வார்டு பகுதிகளில் முடிந்துள்ளது. மற்ற வார்டுகளில் பணிகள் நடந்து வருகிறது.

    நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதியில் கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைகள் ரூ.3.50 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோணம் தொழில்கல்வி நிலையம் அருகே ரூ.2.50 கோடி செலவில் நவீன படிப்பகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 பூங்காக்கள் ரூ.1 கோடி செலவில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதேபோல் சுகாதாரத் துறையில் தொல்லைவிளை, கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.3 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் 10 இடங்களில் நலவாழ்வு மையங்கள் ரூ.2.50கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு இடங்களில் பணி முடியும் தருவாயில் உள்ளது.

    சரலூர் மீன் சந்தையில் ரூ.1.5 கோடி செலவில் நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், வடசேரி ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகிய 3 பஸ் நிலையங் களும் ரூ.8.35 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. வீடு இல்லாமல் சாலையோரம் தூங்கு பவர்கள் தூங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட உள்ளது.

    வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கு பயோ மைனிங் முறையில் ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். ரூ.10.50 கோடி செலவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப் பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்பட உள்ளது.

    கலெக்டர் அலுவலக சந்திப்பில் அமைக்கப்படும் ரவுண்டாவினை தொடர்ந்து செட்டி குளத்திலும் ரவுண் டான அமைக்கப்பட உள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்த வித பாரபட்சமின்றி அகற் றப்படும். மாநகர பகுதி யில் உள்ளச் சாலை கள் அனைத்தும் இரு வழிச்சாலை களாக ஆக்கி னால் மட்டுமே போக்கு வரத்து நெருக்கடி குறையும்.

    முதற்கட்டமாக செட்டிகுளம் முதல் சவேரி யார் கோவில் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக ஆக்கப்பட உள்ளது.இதை தொடர்ந்து மணிமேடை சந்திப்பு முதல் வடசேரி வரையும் இருவழிப்பாதை ஆக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகரத்தை மாசில்லா மாநகரமாக மாற்றும் பணி தொடங்கப்பட உள்ளது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி மாண வர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு மக்கள் அதனை பின்பற்ற வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    கோட்டார் ரோடு ரூ.20.60 லட்சம் செலவில் சாலை போடப்பட உள்ளது. மாநகர பகுதியில் வாகனம் நிறுத்தும் வகையில் நவீன வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தமிழக அரசு பல திட்டங்களை குமரிக்கு வழங்கி வரு கிறது. அந்த வகையில் அற நிலையத்துறை கோவில் களை மராமத்து செய்ய ரூ.5.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.
    • நேற்று மதியம் நாகர்கோவிலில் கன மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.

    இதையடுத்து நாகர் கோவில், கன்னியாகுமரி, திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

    நேற்று மதியம் நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது.

    நாகர்கோவில், ஜூன்.30-

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சூறைக்காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திங்கள்சந்தை பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீ அணைக்கும் பணி நடந்தது. 7 நாட்களாக நடந்த தீயணைக்கும் பணி நேற்று நிறைவு பெற்றுள்ளது.

    • நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.
    • இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப்படும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீப்பிடித்தது.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்ததையடுத்து தீ மளமளவென பரவியது. இதையடுத்து குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. இதையடுத்து கன்னியாகுமரி, திங்கள்நகர் தீயணைப்பு நிலைய த்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 50-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினார்கள்.

    நேற்று இரண்டாவது நாளாகவும் தீயை அணைக்கும் பணி நடந்தது. குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்துகொண்டே இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாக தீயை அணைக்கும் பணியில் கன்னியாகுமரி, திங்கள்நகர், நாகர்கோவில் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து புைக மண்டலங்கள் வந்து கொண்டே இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், குப்பை கிடங்கில் எரிந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. இன்று காலையில் மழையும் பெய்துள்ளது. இருப்பினும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஜே.சி.பி. மூலம் குப்பைகள் கிளறப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    ஆனால் தொடர்ந்து புகை மண்டலம் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தீ முழுமையாக அணைக்கப் படும் என்றார்.

    ×