search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகை மண்டலம்"

    3-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமாரி:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணி யில் ஈடு பட்டனர்.

    தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.தீய ணைப்பு வீரர்கள் தீய ணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.

    இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகர மாக உள்ளனர் .

    அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத் தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ- மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடு முறை விடப்பட்டது.

    இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ள னர்.

    • இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகளும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.

    இங்கு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிக அளவு உள்ளதால் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    குப்பை கிடங்கை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    காற்று வேகமாக வீசியதையடுத்து தீ மள மளவென்று பரவியது. இதையடுத்து நாகர்கோவில் மற்றும் திங்கள்சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகளும் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று 2-வது நாளாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதை யடுத்து கன்னியாகுமரியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. காற்று அதிகமாக வீசுவதையடுத்து தீ வேகமாக பரவி எரிந்து கொண்டே இருக்கிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியிலிருந்து புகை மண்டலங்களும் கிளம்பி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குப்பை கிடங்கில் எரியும் தீயை ஒருபுறமாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீச்சி அடித்து அணைத்துக் கொண்டிருக்க மறுபுறத்தில் தீ எரிந்து கொண்டே இருக்கிறது.

    ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாகவும் குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்த இன்னும் இரண்டு நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    ×