search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதம்"

    • கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
    • கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி, நவ.17-

    சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

    கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.

    • வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது

    குண்டடம்

    குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இது குறித்து ஆடு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    கடந்த மாதங்களில் விறுவிறுப்பாக ஆடுகள் கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 6ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 300 கிலோ முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலை கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    • ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.
    • ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும்.

    இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த 15-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வள்ளம் மற்றும் நாட்டு படகுகளில் பிடிக்கும் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்களின் விலை"கிடுகிடு" வென கடுமையாக உயர்ந்து உள்ளது.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆரோக்கியபுரம், கோவளம், கன்னியாகுமரி, வாவத்துறை, கீழ மணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நாட்டுப்படகு மற்றும் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

    கன்னியாகுமரி வாவத்துறை மீன் இறங்கு தளத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்குவதற்காக குவிந்து இருந்தனர். மீன் வரத்து குறைவு காரணமாக இன்று மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    ரூ. 700 ஆக இருந்த ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கும், ரூ.250 விலைபோன பாரை மீன் கிலோ ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்ற விள மீன் கிலோ ரூ.400-க்கும், ரூ.250க்கு விற்ற ஊலா மீன் கிலோ ரூ.350-க்கும், ரூ.250 ஆக இருந்த சங்கரா மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது.

    விசைப்படகுகள் மீன்பிடிதடை காலம் என்பதால் இன்னும் ஒரு மாதத்திற்கு மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • விண்ணப்பிக்க வில்லையெனில் துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் அனு மதி பெற்று துப்பாக்கி வைத் திருப்போர், அதற்கான உரி மத்தினை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் விண் ணப்பிக்க வேண்டும்.

    அதாவது உரிமம் பெற்ற ஒற்றைக்குழல் மற்றும் இரட் டைக்குழல் துப்பாக்கிகள் (எஸ்.பி.பி.எல்., டி.பி.பி.எல்., ரிவால்வர் மற்றும் பிஸ்டல்) ஆகியவற்றின் உரிமங்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் 1.1.2023 முதல் 31.12.2027 வரை யிலான 5 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 31-ந் தேதிக்குள் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள ஆவணங் கள் மற்றும் உரிய படிவத்து டன் விண்ணப்பிக்குமாறு உரிமத்தாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அதாவது துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் படிவம் (A3) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் உரிம புத்தகம், இருப்பிட முகவரிக்கான ஆதார ஆவண நகல் (2), இதையடுத்து 5 ஆண்டிற்குரிய உரிமம் புதுப்பித்தல் கட்டணம் ரூ.2,500 செலுத்திய தற்கான இ-செல்லான் அசல் மற்றும் நகல் மற்றும்துப்பாக்கி உபயோகப்படுத்தி பணி புரியும் பட்சத்தில் தொடர்பு டைய அலுவலகத்தில் இருந்து பணி நிமித்தமாக பெறப்பட்ட கடிதம் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட உரிமங்களை சரியான முகவரிக்கும் அனுப்பும் பொருட்டு உரிம தாரர்கள் தங்களது விண்ணப் பங் களில் சரியான அஞ்சல் முகவ ரியை கொடுக்க வேண்டும். விண்ணப்பத் தோடு பணம் செலுத்திய செலானை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் உரிம தாரர் மட்டுமே கையொப்ப மிட்டு அனுப்ப வேண்டும்.துப்பாக்கி உரிமம் செயல் திறன் முடிவடைவதற்கு 60 நாட்களுக்கு முன்பு புதுப்பிப்பதற்கு விண்ணப் பம் அளிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விண்ணப்பிக்க வில்லையெனில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×