search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழாவில்"

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    • ஓசக் கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
    • சேலம் குகை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீரக்குமார்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உடலில் கத்தி போட்டு நடனமாடினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே ஓசக் கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த கோவிலுக்கு நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.

    அதன்படி, நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு 44-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில் சேலம் குகை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீரக்குமார்கள் குழுவினர் கோயில் வளாகத்தில் உடலில் கத்தி போட்டு நடனமாடினர்.

    ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்தனர். மாலையில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • கொல்லிமலையில் அடுத்த மாதம் நடைபெறும் வல்வில் ஓரி விழாவில் கலெக்டர் பங்கேற்பு.
    • அதேபோல் இந்த ஆண்டும் 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

    நாமக்கல்:

    வல்வில் ஓரி விழா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 2 நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு காவல் துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவு துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    இந்த ஆண்டு கொல்லி மலையில் கொண்டாடப்பட உள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை பசுமை திருவிழாவாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது.

    மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில் வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×