search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்த்திகை மாதம் பிறந்தது அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
    X

    கார்த்திகை மாதம் பிறந்தது அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

    • கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
    • கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி, நவ.17-

    சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

    கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.

    Next Story
    ×