search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் மாலை"

    • கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
    • கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி, நவ.17-

    சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.

    கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.

    • கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
    • சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    மதுரை

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் ஓடைப்பட்டி வேட்டுவநாதர் கோவிலில் அய்ப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

    மதுரையில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அங்கு சிறப்பு பூசுகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புதூர் மற்றும் விளாச்சேரியில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள், முன்னதாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.

    இதே போன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவில்,அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், மேலமாசி வீதி நேரு ஆலால விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

    கார்த்திகை மாதம் முதல் நாளான இன்றே பலர் மாலை அணிய கோவில்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விருதுநகரில் சொக்கநாதர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.

    சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பலர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னிதானம், வெள்ளகரைப் பிள்ளையார் கோவில், ஓடைப்பட்டி வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். குருசாமி தளபதி முருகன் கன்னிச்சாமி களுக்கு மாலை அணிவித்து அய்யப்ப சாமிக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.


    மானாமதுரை தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

     மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. அதைதொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த துளசிமணி மாலைகளை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து மாலையணிந்து சபரிமலை செல்ல 48 நாள் விரதத்தை தொடங்கினார்கள்.

    சபரிமலை மலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மானாமதுரையில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலையிட்டனர்.

    ×