search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student"

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கேடஸ்வரா மெட்ரிக் பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களை சந்தித்து இறையன்பு பாராட்டினார்

    புதுக்கோட்டை,  

    தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இறையன்பு, தனது பதவி காலத்தின் போது, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதன்படி தமிழ்நாட்டில் முதன் முதலாக புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாசிப்போர் மன்றத்தின் 8வது கூட்டத்தில் இறை யன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர். இதைக் கேட்டறிந்த இறையன்பு வாசிப்போர் மன்றத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்பினார்.

    இதனை தொடர்ந்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களும் தாங்கள் படித்த அவரின் நூல்கள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர். மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட இறையன்பு முதன்முதலில் வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், 8 கூட்டங்கள் நடத்தி வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணரச் செய்தமைக்கும் பாராட்டு க்கள் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக 9ம் வகுப்பு மாணவி நெகாசினி தான் வரைந்த இறையன்பு ஓவியத்தை வழங்கினார்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ‘குண்டான் சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.

    கும்பகோணம் அடுத்த கொரநாட்டுகருப்பூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் அகஸ்தி (வயது 12) என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் மாற்றுத்திறனாளி மாண வனின் குறும்புத்தனம், கேலி செய்யும் விதம், அவர்களின் தனி திறமையை பிரதிபலிக்கும் வகையில் 'குண்டான் சட்டி' என்ற அனிமேஷன் படத்தை இயக்கி உள்ளார்.இந்த படமானது மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் வளர்க்கும் சிறந்த படமா கவும், மாணவர்களின் தனித்துவம் மேன்மை அடையும் வகையிலும் அமைந்துள்ளது.

    இந்த படத்தை பாராட்டி தனியார் பள்ளிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கழகம் ஆனது சிறந்த இயக்குனருக்கான விருதை மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மாணவி அகஸ்திக்கு வழங்கினார்.

    விருதை பெற்று க்கொண்ட மாணவி இது எனக்கு சிறந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. இது மேலும், பல்வேறு விருதுகளை பெற ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.

    • போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.

    போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
    • கண்களை கட்டிக்கொண்டு கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(வயது 14). இவர் 9- ம் வகுப்பு படித்து வரு கிறார்.

    இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத் துள்ளார். மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.

    உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனை கள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

    மேலும் இளம் வயதி லேயே 3 முனைவர் பட்டங் களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இந்த மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது .

    இந்த நிலையில் 70-வது உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு இன்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

    30 சாதனைகள்

    பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட் களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப் பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண் களை கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகை களை அதிக எண்ணிக்கை யில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண் களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வு களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் கொடியாலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர் பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் இரவு கோகுல் மற்றும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

    இதனால் வீட்டில் புழுக்கமாக இருந்த காரணத்தால் கதவுகளை திறந்து வைத்து அண்ணன், தம்பி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது தக்க தருணம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர்.

    இதில் துடிதுடித்த அவர் வேதனை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே ஓடி வாசலில் விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    கோகுலின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது மூச்சு அடங்கிவிட்டது.

    இது குறித்து ஜீயபுரம் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கோகுல் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐடிஐ மாணவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சந்துரு தென்காசியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • சமையலறையில் சிறுவன் சந்துரு தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மகன் சந்துரு (வயது 17). இவர் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவனு க்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்து கொண்டு மாற்று சான்றிதழ் வாங்கி தருமாறு வீட்டில் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த நிலையில், தென்காசியில் உள்ள அவரது தாத்தா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து இருந்து வந்துள்ளார். சிறுவனும், அவரது தாத்தா சுப்பிரமணியனும் (69) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தாத்தா சாப்பாடு வாங்க சென்றுள்ளார்.

    சாப்பாடு வாங்கி விட்டு வந்து பார்த்தபோது சிறுவன் சந்துரு அந்த வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித் ததில் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரி வித்து ள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மண்ணச்சநல்லூரில்பள்ளி மாணவன்கால் விரல்கள் துண்டானது
    • மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மண்ணச்சநல்லூர்  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் நிசாந்த்(வயது15). இவர் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி திருச்சி துறையூர் நெடுஞ்சாலை உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் நிசாந்த் வீட்டிற்க்கு செல்வதற்க்காக அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.

    இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநராக முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி (50), நடத்துனராக சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கமல் (42 பணியில் இருந்துள்ளனர்.

    மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் நிசாந்த் படியில் நின்று செய்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலாசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

    சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

    அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    • கடந்த 13-ந் தேதி மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.
    • இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த 13-ந் தேதி இந்த மாணவனை ஆசிரியை ஒருவர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அந்த மாணவனின் தந்தைக்கு நேற்று தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர் நேற்று பகல் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றார்.

    அங்கு மகனை அடித்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் திடீரென ஆசிரியையை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அழகாபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், மாவட்ட கல்வி அதிகாரி மோகன் ஆகியோரும் நடந்த சம்பவம் குறித்த பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
    • நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    • 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,

    மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.

    • சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.

    ×