search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனை விதைகள் சேகரிக்கும் பணி
    X

    பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட மாணவிகள்.

    பனை விதைகள் சேகரிக்கும் பணி

    • 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கடற்கரையோர பகுதிகளில் 1 கோடி பனை விதைக்கும் திட்டத்திற்காக பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்ட குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கடலோர பகுதிகளில் 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் வருகிற 24-ந் தேதி 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு மன்னார்குடி பான்செக்க ர்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அன்பரசி தலைமையில்,

    மூவாநல்லூர், கண்டி தம்பேட்டை, விக்ரபாண்டி யம், மதுக்கூர், மேலவந்தா ன்சேரி, வடபாதி, சேரன்கு ளம், களப்பாள், கோட்டூர், ஆலங்கோட்டை, உள்ளி க்கோட்டை, ஆலத்தூர் ஆகிய கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்து மனோராவை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நடவுள்ளனர்.

    Next Story
    ×