search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sickle Cut"

    அறந்தாங்கி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி 4 பேர் கொண்ட கும்பல் ரூ.16 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை அருகே தோப்புவயல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் நிறைந்த பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த கடையில் ஆ.குடிக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 35) சூபர்வைசராகவும், அவரது சகோதரர் செந்தில்குமார் மற்றும் நவக்குடியை சேர்ந்த காளிதாஸ் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு விற்பனை பணம் ரூ.18 லட்சத்து 87 ஆயிரத்து 300-ஐ எடுத்துக்கொண்டு ஊழியர்கள் புறப்பட்டனர். இதில் கண்ணன், செந்தில்குமார் ஒரு மோட்டார்சைக்கிளிலும், காளிதாஸ் மற்றொரு வாகனத்திலும் சென்றனர்.

    அப்போது அந்த கடை அருகே 4 பேர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் இருப்பது போன்று தள்ளாடியபடி வந்தார். திடீரென கீழே தவறி விழுந்தார். அவரை தூக்குவதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேரும் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகே சென்றனர்.

    அப்போது போதை ஆசாமியுடன் வந்த 3 பேரும் டாஸ்மாக் கடையை நோக்கி ஓடினர். அவர்களை தடுத்த போது கண்ணனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். இதிலிருந்து தப்பிய கண்ணன் கடைக்குள் செல்ல தலைதெறிக்க ஓடினார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவன் கண்ணனின் காலில் அரிவாளால் வெட்டினான். இதில் தவறி விழுந்த அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    இதில் அந்த பையில் இருந்த சில பணக்கட்டுகள் கீழே விழுந்தன. மீதமிருந்த ரூ.16 லட்சம்து 60 ஆயிரத்து 150 பணத்துடன் 4 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. கொள்ளையர்கள் தவற விட்டதில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 150 பணம் தப்பியது. படுகாயம் அடைந்த கண்ணனை மற்ற ஊழியர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துணிகர கொள்ளை குறித்து மணல்மேல்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில் அருகே அரிசி ஆலை அதிபர்-மனைவியை அரிவாளால் வெட்டி கொள்ளையர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில்:

    கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), ரைஸ்மில் அதிபர். இவரது மனைவி வனிதா (36). ராஜபாளையத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் ஊர் திரும்பினர்.

    தம்பதிகள் கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபாகரன் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி வனிதா அணிந்திருந்த செயினை கேட்டனர். உடனடியாக அதனை கொடுத்துள்ளனர். பின்னர் மோதிரம், பிற நகைகளையும் கேட்டனர்.

    இதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளால் பிரபாகரன் மற்றும் வனிதாவை வெட்டினர். அப்போது அவ்வழியாக ஒரு பேருந்து வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் கோவில்பட்டி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதிகளை அரிவாளால் வெட்டி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகை கடையில் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நகை வாங்குவது போல் நடித்து விவரம் கேட்டுள்ளனர். திடீரென கடையில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    சம்பவம் நடந்த கடையில் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் கொள்ளையர்களின் உருவங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிரா காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே பைக்கில் வந்த 3 பேர் என்பதால் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு சூரங்குடி பகுதியில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

    சங்கரன் கோவில் பகுதியில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கணவர் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது53), தனியார் நிறுவன காவலாளி.

    இவரது மனைவி முத்துலட்சுமி (45). இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந்தேதியும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை கண்ட காளியப்பன் பயந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையில் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். முத்துலட்சுமி இறந்ததை தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் காளியப்பன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லையில் குடும்ப தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன் (வயது45). இவர் ஐகிரவுண்டில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் கருப்பசாமி (24), கூலித்தொழிலாளி. தந்தை-மகனுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று கருப்பசாமி வீட்டில் இருந்த போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கருப்பசாமி தந்தையை திட்டினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சையா பாண்டியன், கருப்பசாமியை அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சையா பாண்டியனை தேடி வருகிறார்கள்.

    கோவில்பட்டியில் தொழில் அதிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 44). இவர் மந்தித்தோப்பு ரோட்டில் தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் தனது நிறுவனத்தில் இருந்தார். அவருடன் காவலாளி பாலசுப்பிரமணியன்(45) என்பவரும் உடனிருந்தார்.

    அப்போது கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவை சேர்ந்த முருகன் மகன் சூர்யா(19) என்பவர் திடீரென நிறுவனத்துக்குள் புகுந்து, மாரியப்பனை அரிவாளால் தாக்கினார்.  அப்போது அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதில் மாரியப்பன், சூர்யா, பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    இது குறித்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பாரதிநகரை சேர்ந்த டிரைவர் காளிமுத்து (19), கிளவிபட்டி செண்பகராஜ் (33) இருவரையும் இன்று  போலீசார் கைது செய்தனர்.
    கோயம்பேட்டில் 5 பேர் கும்பலால் வெட்டப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு மெட்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 25-ந் தேதி இரவு இவர் அதே பகுதியில் நடந்த சென்றார். அப்போது விக்னேசை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

    இதையடுத்து கோயம்பேடு போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் என்பவரை விக்னேஷ் கொலை செய்து இருந்ததும், ஜாமினில் வந்த அவரை கணேசனின் தம்பி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக தீர்த்து கட்டி இருப்பது தெரிந்தது.


    இதையடுத்து கணேசனின் தம்பி பிரகாஷ் அவரது நண்பர்கள் மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி, ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வர்த்தக சங்க தலைவருக்கு முன்விரோதத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.தரைக்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் முகமது அபுபக்கர் (வயது52). சாயல்குடி வர்த்தக சங்க தலைவராகவும், தரைக்குடி ஜமாத் தலைவராகவும் உள்ளார்.

    இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திக்குவிஜயன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முகமது அபுபக்கர், எஸ்.தரைக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாயல்குடிக்கு புறப்பட்டார்.

    ஆர்.சி.புரம் பகுதியில் அவர் வந்தபோது திக்கு விஜயனின் மகன்கள் உமயவேலாயுதம், தங்கபாண்டி ஆகியோர் வழிமறித்தனர். அவர்கள் முகமது அபுபக்கரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து சாயல்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெரி விசாரணை நடத்தி திக்குவிஜயன் மகன்கள் உமயவேலாயுதம், தங்கப்பாண்டி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் உமய வேலாயுதம் கைது செய்யப்பட்டார்.

    வடசேரியில் 8 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்ட ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 33). ஆட்டோ டிரைவர். இவரை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. அவர்கள் சுப்பிரமணியனை அரிவாளாலும் வெட்டினர். இதில் சுப்பிரமணியன் பலத்த காயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனின் சகோதரரை அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் ஏற்பட்ட விரோதத்தில் சுப்பிரமணியனை, ரமேசும், அவரது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியனை தாக்கியதாக ரமேஷ்(19), வேல்முருகன் (58), அவரது 14 வயது மகன், சதீஷ் (19), ராஜா (19), முகமது தமீம் அன்சாரி (19) உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இவர்களில் ரமேஷ், வேல்முருகன், அவரது 14 வயது மகன் மற்றும் முகமது தமீம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் இன்று அதிகாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து வடசேரி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை அருகே குடி போதையில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி சாந்திமேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ்குமார் (வயது 26). இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ் குமார் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சாந்திமேடு அருகே சென்ற போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் குடி போதையில் சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதனை பார்த்த வெங்கடேஷ்குமார் சத்தம் போடக்கூடாது என 3 பேரையும் எச்சரித்து அனுப்பினார்.

    பின்னர் வெங்கடேஷ் குமார் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பரை சந்தித்து பேசி விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெங்டேஷ்குமாரை வெட்டினார்.

    இதில் இடது கை, கழுத்து பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். பின்னர் அந்த 3 வாலிபர்களும் காரில் தப்பிச் சென்றனர்.

    வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வெங்கடேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து வெங்கடேஷ்குமார் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் காரரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாகூரில் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாகூர்:

    பாகூரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் விஜயபாலன் (வயது 51). இவர், கட்சியின் தொகுதி குழு உறுப்பினராகவும், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவருடைய வீடு பாகூர்பேட் லெனின் வீதியில் உள்ளது. வீட்டில் இருந்து தினமும் பாகூர் கன்னிக்கோவில் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு காலையில் வருவது வழக்கம்.

    இந்த அலுவலகம் துணிக்கடை ஒன்றின் மாடியில் இருக்கிறது. இன்று காலை விஜயபாலன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து விஜயபாலனை சரமாரியாக வெட்டினார். அதை விஜயபாலன் தடுக்க முயன்றார். இதனால் கை மற்றும் உடலில் வெட்டு விழுந்தது. தலையிலும் வெட்டினார்.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த பொதுமக்கள் உள்ளே ஓடினார்கள். விஜயபாலனை வெட்டியவரை தடுத்து அவரை தாக்கினார்கள்.

    பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார்கள். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்திருந்த விஜயபாலனை 108 ஆம்பு லன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஜயபாலனை வெட்டிய நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் ஸ்ரீதர் என்றும், வளவனூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பாகூரில் அவரது மனைவியின் பெற்றோர் வீடு உள்ளது.

    அங்கு வந்த இடத்தில் விஜயபாலனை அவர் வெட்டி உள்ளார். அவரை ஏன் வெட்டினார்? என்பது மர்மமாக இருக்கிறது. அது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    விஜயபாலன் வெட்டப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பாகூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

    திருமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படையை சேர்ந்தவர் கோகுலராமகிருஷ்ணன் (வயது32). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரவி (55) என்பவருக்கும் கருவேல மரங்கள் வெட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    அப்போது ரவி அரிவாளால் வெட்டியதில் கோகுல ராமகிருஷ்ணன் காயம் அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

    இதேபோல் ஆஸ்டின்பட்டி அருகே உள்ள வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு (40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பழனியாண்டி (33) என்பவருக்கும் பொது பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று பழனியாண்டி தாக்கியதல் பதினெட்டாம்படி கருப்பு காயம் அடைந்தார்.

    இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியாண்டியை கைது செய்தனர்.

    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லா கவுண்டர். கட்டிட தொழிலாளி (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (36). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கடந்த 10-ந்தேதி ஆன்மீக சுற்றுலா செல்ல ஊரில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு சுற்றுலா பஸ் பிடித்தனர்.

    இதையறிந்த மகேஸ்வரி தனது கணவர் நல்லாகவுண்டரிடம் நானும் குழந்தைகளும் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று வருகிறோம் என்று கூறினார். இதற்கு அவர் போகக்கூடாது என கூறினார்.

    ஆனால், குழந்தைகள் இருவரும் அம்மாவிடம் ஊரில் உள்ள எல்லோரும் சுற்றுலா செல்கிறார்கள். நாமும் போகலாம் அம்மா என்று கூறினார்கள். குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடிக்கவே வேறு வழியின்றி கணவர் பேச்சை மீறி கடந்த 10-ந்தேதி ஊர் மக்களுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்றார்.

    மணப்பாறை அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரப்பூர் கோவில் மற்றும் திருச்சியில் உள்ள சமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கடைசியாக ஆதிபராசக்தி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ்சில் இன்று அதிகாலை குழந்தைகளுடன் மகேஸ்வரி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டுக்குள் இருந்த நல்லா கவுண்டர் எங்கு சென்று வந்தாய்? என கேட்டார். அதற்கு மகேஸ்வரி நான், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊர் மக்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றேன் என்றார்.

    இதை அவர் நம்பவில்லை. நீ கோவிலுக்கு செல்லாமல் வேறு எங்கோ சுற்றி விட்டு வருகிறாய்?, நான் சொல்லியும் நீ கேட்காமல் வெளியே போய் விட்டு வந்துள்ளாய்? என்று நல்லா கவுண்டர் ஆவேசமாக கூறினார்.

    மகேஸ்வரி பலமுறை அவரிடம் எடுத்துக் கூறியும் கேட்காமல் சந்தேகப்பட்டு நல்லா கவுண்டர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் மகேஸ்வரியின் உடலில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது. என்னை விட்டு விடுங்கள்.. என்னை விட்டு விடுங்கள் என அவரது காலில் விழுந்து கதறினார்.

    இதை பார்த்து 2 குழந்தைகளும் அழுதது. தந்தையிடம் அம்மாவை வெட்டாதீர்கள்.. விட்டு விடுங்கள் என அந்த குழந்தைகள் கெஞ்சியது. ஆனாலும் நல்லா கவுண்டர் அரிவாளால் ஆக்ரோசமாக மகேஸ்வரியின் இடது கால் மணிக்கட்டு மற்றும் இடது தோள்பட்டையில் வெட்டினார்.

    இதனால் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக அவரது பிடியில் இருந்து தப்பித்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச்சென்று தலையில் வெறித்தனமாக வெட்டினார். மேலும் கையில் வெட்ட முயன்றபோது மகேஸ்வரி அரிவாளை பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கத்தினார். உடனே அவரை பிடித்து தள்ளி விட்டு அரிவாளால் வலது கை மணிக்கட்டில் வெட்டினார்.

    இதனால் மகேஸ்வரி சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது குழந்தைகள் அம்மா...அம்மா என கதறி அழுதது. சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நல்லா கவுண்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பொதுமக்கள் உடனடியாக மகேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் குழந்தைகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நல்லாகவுண்டரை தேடி வருகிறார்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், நல்லகவுண்டர் சென்ட்ரிங் வேலை செய்தபோது, மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு வந்த மகேஸ்வரியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியுள்ளார் என்றனர்.

    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×