search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்
    X

    விருதுநகரில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மரணம்

    அரிவாளால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கணவர் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி மின்வாரிய காலனியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது53), தனியார் நிறுவன காவலாளி.

    இவரது மனைவி முத்துலட்சுமி (45). இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 23-ந்தேதியும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    மனைவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை கண்ட காளியப்பன் பயந்து விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துலட்சுமி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையில் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். முத்துலட்சுமி இறந்ததை தொடர்ந்து பாண்டியன் நகர் போலீசார் காளியப்பன் மீது கொலை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×