search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suspecting"

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்திய அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயவீரபாண்டி (வயது37), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கயல்விழி (28). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கயல்விழியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி ஜெயவீரபாண்டி தகராறு செய்து வந்தார். நேற்றும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெய வீரபாண்டி கத்தியால் கயல் விழியை குத்தினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து கயல்விழி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவீரபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லா கவுண்டர். கட்டிட தொழிலாளி (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (36). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கடந்த 10-ந்தேதி ஆன்மீக சுற்றுலா செல்ல ஊரில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு சுற்றுலா பஸ் பிடித்தனர்.

    இதையறிந்த மகேஸ்வரி தனது கணவர் நல்லாகவுண்டரிடம் நானும் குழந்தைகளும் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று வருகிறோம் என்று கூறினார். இதற்கு அவர் போகக்கூடாது என கூறினார்.

    ஆனால், குழந்தைகள் இருவரும் அம்மாவிடம் ஊரில் உள்ள எல்லோரும் சுற்றுலா செல்கிறார்கள். நாமும் போகலாம் அம்மா என்று கூறினார்கள். குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடிக்கவே வேறு வழியின்றி கணவர் பேச்சை மீறி கடந்த 10-ந்தேதி ஊர் மக்களுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்றார்.

    மணப்பாறை அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரப்பூர் கோவில் மற்றும் திருச்சியில் உள்ள சமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கடைசியாக ஆதிபராசக்தி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ்சில் இன்று அதிகாலை குழந்தைகளுடன் மகேஸ்வரி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டுக்குள் இருந்த நல்லா கவுண்டர் எங்கு சென்று வந்தாய்? என கேட்டார். அதற்கு மகேஸ்வரி நான், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊர் மக்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றேன் என்றார்.

    இதை அவர் நம்பவில்லை. நீ கோவிலுக்கு செல்லாமல் வேறு எங்கோ சுற்றி விட்டு வருகிறாய்?, நான் சொல்லியும் நீ கேட்காமல் வெளியே போய் விட்டு வந்துள்ளாய்? என்று நல்லா கவுண்டர் ஆவேசமாக கூறினார்.

    மகேஸ்வரி பலமுறை அவரிடம் எடுத்துக் கூறியும் கேட்காமல் சந்தேகப்பட்டு நல்லா கவுண்டர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் மகேஸ்வரியின் உடலில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது. என்னை விட்டு விடுங்கள்.. என்னை விட்டு விடுங்கள் என அவரது காலில் விழுந்து கதறினார்.

    இதை பார்த்து 2 குழந்தைகளும் அழுதது. தந்தையிடம் அம்மாவை வெட்டாதீர்கள்.. விட்டு விடுங்கள் என அந்த குழந்தைகள் கெஞ்சியது. ஆனாலும் நல்லா கவுண்டர் அரிவாளால் ஆக்ரோசமாக மகேஸ்வரியின் இடது கால் மணிக்கட்டு மற்றும் இடது தோள்பட்டையில் வெட்டினார்.

    இதனால் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக அவரது பிடியில் இருந்து தப்பித்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச்சென்று தலையில் வெறித்தனமாக வெட்டினார். மேலும் கையில் வெட்ட முயன்றபோது மகேஸ்வரி அரிவாளை பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கத்தினார். உடனே அவரை பிடித்து தள்ளி விட்டு அரிவாளால் வலது கை மணிக்கட்டில் வெட்டினார்.

    இதனால் மகேஸ்வரி சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது குழந்தைகள் அம்மா...அம்மா என கதறி அழுதது. சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நல்லா கவுண்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பொதுமக்கள் உடனடியாக மகேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் குழந்தைகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நல்லாகவுண்டரை தேடி வருகிறார்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், நல்லகவுண்டர் சென்ட்ரிங் வேலை செய்தபோது, மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு வந்த மகேஸ்வரியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியுள்ளார் என்றனர்.

    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×