search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shikhar Dhawan"

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டியில் மோசமான பீல்டிங்கால் தோல்வி அடைந்ததாக இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறினார். #AUSvIND #ShikharDhawan
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    தோல்விக்கு பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நிருபர்களிடம் கூறுகையில், ‘பீல்டிங்கில் செய்த தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணமாகும். ஒரு சில கேட்ச்களை கோட்டை விட்டோம். இதே போல் ரன்-அவுட் வாய்ப்பையும் (மேக்ஸ்வெல்லுக்கு) நழுவ விட்டோம். ஆனால் இதுவெல்லாம் விளையாட்டில் சகஜம். தோல்வி அடைந்தாலும் இந்த ஆட்டத்தில் கிடைத்த நம்பிக்கையை அடுத்த ஆட்டத்திற்கு கொண்டு செல்வோம்’ என்றார்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய கேப்டன் விராட் கோலியும், ஸ்டோனிஸ் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கலீல் அகமதுவும் வீணடித்தது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #ShikharDhawan
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற உள்ளார். அவருக்கு மூன்று வீரர்களை விடுவிக்கிறது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசனுக்கான ஆயத்த பணிகளை அணிகள் மேற்கொண்டு வருகிறது. வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் மும்பை அணிக்கு செல்ல இருக்கிறார். மந்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு செல்ல இருக்கிறார்.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வந்த ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுக்கிறது.



    தவானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதேவேளையில் டெல்லி டேர்டெவில்ஸ் விஜய் ஷங்கர், நதீம் ஆகியோரை தலா 3.2 கோடி ரூபாய்க்கும், அபிஷேக்கை 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.
    ஒருநாள் போட்டியில் அசத்தும் ஷிகர் தவான், டெஸ்ட் போட்டியில் ஜொலிக்காதது ஆச்சர்யம் அளிக்கிறது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். #dhawan
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தார். சராசரி 20.25 ஆகும். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதேவேளையில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    ஒயிட் பால் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஷிகர் தவான், ரெட் பால் போட்டியில் சொதப்புவது ஆச்சர்யம் அளிக்கிறது என்று இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.



    ஷிகர் தவான் குறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒயிட் பால் பேட்டியில் அசத்தும் பேட்ஸ்மேன்கள், ரெட் பால் போட்டியில் திணறுவது எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யம் அளிக்கிறது. தவான் எல்லா வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

    அதிகமான வாய்ப்புகள் கொடுத்த பிறகு துரதிருஷ்டவசமாக இந்த கடின முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கடினமான பயிற்சி மேற்கொண்டு ஆட்டத்திறனை சிறப்பான வகையில் மேம்படுத்தினால், அவருக்காக கதவு திறந்தே இருக்கும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 317 ரன்கள் குவித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCRankings #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இந்தியா இரண்டு லீக், மூன்று ‘சூப்பர் 4’ மற்றும் இறுதிப் போட்டி என 6 போட்டிகளில் விளையாடியது. இதில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடினார்.

    ஐந்து இன்னிங்சில் ஒரு சதம் இரண்டு அரைசதத்துடன் 317 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி முதல் இடத்தில் நீடிக்கிறார். 342 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிகர் தவான் நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.



    பந்து வீச்சாளர்களில் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுதான் ஒருநாள் தரவரிசையில் இவரது சிறந்த தரவரிசையாகும்.

    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பந்து வீச்சாளர்களில் 2-வது இடத்தையும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
    ஆசிய கோப்பை போட்டியில் அடுத்தடுத்து அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ஆட்டங்களில் 342 ரன்கள் குவித்து ஆசிய கோப்பை தொடர் நாயகன் விருதை கைப்பற்றியுள்ளார். #AsiaCup2018 #ShikharDhawan
    துபாய்:

    இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பையில் அதிரடியாகவும், பரபரப்பாகவும் விளையாடிய இந்திய அணி தனது வெற்றியை நிலைநாட்டி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி தனது திறமையை அனைத்து வீரர்களும் வெளிப்படுத்தினர்.

    இந்த ஆசிய கோப்பை விளையாட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் சர்மா, 1 சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.



    இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் மூலம் தொடக்க ஆட்டக்காரர் தவான் 5 ஆட்டத்தில் விளையாடி 342 ரன் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 68.40 ஆகும். இரண்டு சதம் அடித்து, அதிகபட்சமாக 127 ரன்கள் குவித்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தவான் முதலிடத்தை பிடித்து, தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றியுள்ளார்.

    வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரகீம் 1 சதத்துடன் 302 ரன் எடுத்து 3-வது இடத்திலும், ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகமது‌ஷசாத் 268 ரன் எடுத்து 4-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 6 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 45 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாகும். இதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கானும், முஷ்டாபிசுர் ரகுமானும் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இருவரும் 5 ஆட்டத்தில் இந்த விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 8 விக்கெட்டுகளும், ஜடேஜா 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். #AsiaCup2018 #ShikharDhawan
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம் என்று தவான் தெரிவித்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபு தாபி மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்று முடிந்து நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமலும், வங்காள தேசம் இரண்டு தோல்வியுடனும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன.

    சூப்பர் 4 சுற்றில் இந்தியா வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தாலும். என்றாலும் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் வங்காள தேசத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோன் என்று துணைக் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘வங்காள தேசம் அணி மிகவும் பேலன்ஸ் ஆன அணி. அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரியும். கடந்த சில வருடங்களாக அவர்கள் நின்றாக முன்னேற்றம் அடைந்து, தரமான அணியாக மாறியுள்ளனர். பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுகின்றன. அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டா், முடிவுகள் இயற்கையாகவே வந்து சேரும்.



    வங்காள தேசம் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். வங்காள தேசத்தை தவிர ஐக்கிய அரபு எமிரேட்சிலும் அந்த அணியை வீழ்த்துவது கடினம். அனுபவமான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களுக்கு நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது கூட நெருக்கடிக்கு உள்ளாவது கிடையாது. இது சிறந்த விஷயமாகும். சூப்பர் 4 சுற்றில் அவர்களை தோற்கடித்திருந்தாலும், நாளைய போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்றார்.
    ரோகித் சர்மாவின் கேப்டன் திறமையை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மனதார வாழ்த்தியுள்ளார். #AsiaCup2018 #RohitSharma
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    விராட் கோலி இல்லாத இந்திய அணியை ரோகித் சர்மாவால் பொறுப்பேற்று நடத்த முடியும் என்று ஹர்பஜன் சிங் கூறிய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் மனதார வாழ்த்தியுள்ளார்.



    இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். அவர் முன்னின்று அணியை வழி நடத்துகிறார். அவர் தொடர்ந்து மிகவும் எளிதாக ரன்கள் குவித்து வருகிறார்.

    அவருடன் துணைக் கேப்டன் ஆன ஷிகர் தவானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர்கள் பேட்டிங் செய்ய வரும்போது, மிகவும் சிறப்பாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஷாட்டையும் அடிக்கும் திறன் பெற்றிருக்கிறார்கள்’’ என்றார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 237 ரன்கள் சேர்த்தது. பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஓய்வில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அதேபோல் சதம் அடித்த ரோகித் சர்மா, ஷிகர் தவானுக்கு சச்சின் தெண்டுல்கரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி. #AsiaCup2018 #INDvHK
    துபாய் :

    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.

    தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்தும் ஹாங் காங் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர்.

    அந்த அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி சீராக உயர்ந்ததால் ஹாங் காங் அணி வெற்றியை நோக்கி சென்றது, இதனால் இந்திய வீரர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ரன்களை குவித்து அசத்தியது.

    ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34-வது ஓவரில் அன்சுமன் ராத் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



    இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. எனவே 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #INDvHK
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தவான், அம்பதி ராயுடு ஆட்டத்தால் ஹாங் காங் வெற்றிக்கு 286 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #AsiaCup2018 #Dhawan #Rayudu
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.


    அரைசதம் அடித்த அம்பதி ராயுடு

    தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது.

    கேதர் ஜாதவ் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 28 ரன்கள் சேர்க்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஹாங் காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதம் அடித்தார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, தவான் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக இருப்பார்கள் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா கேப்டனாகவும், தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘விராட் கோலி அணியில் இல்லாதபோது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு கீ பேட்ஸ்மேனாக இருப்பார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். அதேபோல் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்லும்போது ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்’’ என்றார்.
    ×