search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvHK"

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஹாங் காங்குக்கு எதிராக பந்துவீசுவதில் தவறு செய்துவிட்டதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். #AsiaCup2018 #INDvHK #RohitSharma
    துபாய்:

    துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஆங்காங்கிடம் இந்தியா போராடி வெற்றி பெற்றது.

    இந்தியா நிர்யணித்த 286 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஹாங் காங் அணியின் தொடக்க ஜோடியான நிஜா கட்கான் (92ரன்), அனத் மான்ராஜ் (73) 34.1 ஓவரில் 174 ரன் சேர்த்தது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. ஆங்காங் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கத்துக்குட்டி அணியா ஹாங் காங்கை இந்திய பந்து வீச்சாளர்கள் எளிதாக சுருட்ட முடியாமல் திணறியதை பார்க்க முடிந்தது.

    போராடி வென்றது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-


    ஹாங் காங்குக்கு எதிரான போட்டி எளிதாக இருக்காது என்பதை அறிந்து இருந்தோம். இறுதியில் வெற்றி பெற்றது முக்கியமானது.

    நாங்கள் அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்குகினோம். ஆனால் அதை காரணம் காட்டக்கூடாது. பந்துவீச்சில் தவறு செய்துவிட்டோம்.

    இன்னும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் (ஆங்காங்) வெற்றியை நோக்கி முன்னேறினர். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

    எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. கடைசி கட்டத்தில் நெருக்கடி சூழ்நிலையை கையாண்ட விதம் சிறப்பானது.

    ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விளையாடி விட்டு இங்குள்ள சூழ்நிலையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது அவ்வளவு எளிதானதல்ல.

    அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் நல்ல பங்களிப்பு அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அற்புதமான வீரர். அவர் நல்ல தொடக்கத்தை தரவில்லை. ஆனால் அதன்பின் மீண்டு வந்து சிறப்பாக பந்து வீசினார். முதல் 3 ஓவரில் சிறப்பாக பந்து வீசவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். அதை கலீல் அகமது செய்தார். இதனால் அவர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்தடுத்து போட்டிகளில் மோதுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால்தான் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #AsiaCup2018 #INDvHK #RohitSharma
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை போராடி வெற்றி கொண்டது இந்திய அணி. #AsiaCup2018 #INDvHK
    துபாய் :

    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.

    தொடர்ந்து விளையாடிய தவான் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியா 40.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் வந்த டோனி (0), தினேஷ் கார்த்திக் (33), சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஹாங் காங் அணி சார்பில் சின்சிட் ஷா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்தும் ஹாங் காங் அணி சேசிங் செய்ய தொடங்கியது, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் கேப்டன் அன்சுமன் ராத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடத்தொடங்கிய இவர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்கு புறமும் சிதறடித்தனர்.

    அந்த அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி சீராக உயர்ந்ததால் ஹாங் காங் அணி வெற்றியை நோக்கி சென்றது, இதனால் இந்திய வீரர்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 174 ரன்களை குவித்து அசத்தியது.

    ஆனால், குல்தீப் யாதவ் வீசிய 34-வது ஓவரில் அன்சுமன் ராத் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 97 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அடுத்து சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிசாகத் கான் 92 ரன்களில் அறிமுக வீரர் கலீல் அகமது பந்தில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



    இதன் பின்னர் இந்திய வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதனால், அடுத்து களமிறங்கிய கார்டர் 3, பாபர் 18, ஷா 17, ஐஷாஸ் 0, எஸ்சான் 22 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து ஹாங் காங் அணி தடுமாறியது. எனவே 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் மட்டுமே அடித்ததால் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் கலீல் அகமது மற்றும் சாகல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சிறப்பாக விளையாடி சதமடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #AsiaCup2018 #INDvHK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஹாங் காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதம் அடித்தார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற  ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.



    இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் - அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த தவான், அதை சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. #AsiaCup2018 #INDvHK
    ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா ஹாங் காங்கை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் சுண்ட, ஹாங் காங் அணி கேப்டன் அன்சூமான் ராத் ‘டெய்ல்’ என அழைத்தார். ‘டெய்ல்’ விழ ஹாங் காங் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங் காங்கை எதிர்கொள்கிறது. #AsiaCup2018 #INDvHK
    இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை அணி வங்காள தேசத்திடம் 137 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. நேற்று நடந்த 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங் காங்கை வீழ்த்தியது.

    3-வது ‘லீக்’ ஆட்டம் அபுதாபியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இலங்கை அணிக்கு இருக்கிறது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்திடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் வெறறிக்காக போராடுவார்கள். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்து வெளயேற்றும் ஆர்வத்துடன் உள்ளது.

    ஆசிய கோப்பை போட்டியின் 4-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன.



    கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருக்கிறார். இதனால் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளது.

    கத்துக் குட்டியான ஹாங் காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இடத்தில் இடம் பெற போவது யார்? என்ற ஆர்வத்துடன் எதிரநோக்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் அம்பதி ராயுடு கோலியின் இடமான 3-வது வரிசையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
    ×