search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sasikala"

    • தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
    • ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம்.

    அவினாசி:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    ஜெயலலிதா ஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அம்மா மருந்தகம், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், சூரியஒளி மின் விளக்குடன் பசுமை வீடுகள், பெண்களுக்கு இலவச ஆடு மாடுகள், கிரைண்டர், மின்விசிறி, மிக்சி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

    தி.மு.க., அரசு மக்களை ஏமாற்றுகிறது. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம், சாலை வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதை தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதாதான்.

    தி.மு.க., அரசு வந்தால் சட்டம் ஒழுங்கு சரி இருக்காது. கள்ள சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை மற்றும் சந்தன மரம் நிறைய கடத்துவதாக பல பேர் சொல்கிறார்கள். இதை அரசு கவனிக்க வேண்டும்.

    தமிழக மக்களை தி.மு.க.விடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்காக அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும்.வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அ.தி.மு.க.. மக்களுக்காகவே இயங்கும் என்று சொன்ன ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது.
    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும்.

    கோவை:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சசிகலா சுற்று ப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். பின்னர் நேற்று மாலை அவர் கோவை வழியாக விமானம் மூலம் சென்னை சென்றார்.

    முன்னதாக கோவை விமான நிலையத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கொங்கு மண்டல பகுதி மக்கள் நல்லவர்கள், அவர்கள் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பார்கள். நான் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மக்களை சந்திக்க உள்ளேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்த போது இருந்த நிலை இப்போது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எனது வேலை. பாராளுமன்ற தேர்தலுக்கள் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன். ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. அரசு உரிமைத் தொகை வழங்குவதாக கூறி உள்ளது. நிதிநிலை சரியில்லாத நேரத்தில் எப்படி கொடுப்பார்கள். இது சாத்தியமில்லை.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை என்னை விசாரணைக்காக அழைத்து சென்றது. இரவு 11.30 மணிவரை என்னிடம் விசாரணை நடத்தினார்கள். இரவு 11.30 மணிக்கு என்னை கைது செய்ததாக கூறினார்கள். நானும் முழு ஒத்துழைப்பு அளித்தேன். எனவே, அமலாக்கத்துறை விசாரணைக்கு யாராக இருந்தாலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் ஒரு அமைச்சரிடம் விசாரணை நடத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் அளிக்கிறார்.

    தி.மு.க அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல், தனது கட்சியின் பிரச்சினையில் முனைப்பு காட்டி வருகிறது.

    சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சரியில்லை. உரிமம் இன்றி 24 மணிநேரமும் பார் செயல்படுகிறது. ஆனால் தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட்ட அரசு, விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையிட வேண்டும். தி.மு.க.வுக்கு வாக்களித்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் சரியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
    • சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    நாளை காலை 11 மணி அளவில் தி.நகர் வீட்டில் இருந்து புறப்படும் சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி-அந்தியூர் பிரிவுக்கு மாலை 4 மணி அளவில் வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் திருப்பூர் செல்லும் சசிகலா அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். அதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம், அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகே ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சசிகலா ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
    • ஈரோடு புறநகர் மாவட்டத்தின் அந்தியூர் பிரிவில் இருந்து அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

    நாளை காலையில் தி.நகர் வீட்டில் இருந்து புறப்பட்டு கோவை வழியாக ஈரோடு சென்று மாலையில் அங்கு பிரசாரம் செய்வது போன்று பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருப்பூர் மாவட்டத்துக்கு சென்று தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்கவும் சசிகலா முடிவு செய்திருந்தார்.

    இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சசிகலா தரப்பினரிடம் கேட்டபோது மழை எச்சரிக்கை காரணமாக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தை அடுத்த வாரத்துக்கு சசிகலா தள்ளி வைத்துள்ளார்.

    அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சசிகலா ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

    ஈரோடு புறநகர் மாவட்டத்தின் அந்தியூர் பிரிவில் இருந்து அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.கவுந்தப்பாடி, கோபி பகுதிகளிலும் அவர் வருகிற 22-ந்தேதி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (23-ந்தேதி) திருப்பூர் மாவட்டத்தில் சசிகலா பிரசாரம் செய்ய இருப்பதாகவும் ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தின்படி அவரது சுற்றுப் பயணம் இருக்கும் என்றும் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

    • சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவை சென்றடைகிறார்.
    • சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலும் தொண்டர்களை சந்திக்கிறார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாளை (15-ந்தேதி) காலை 11 மணிக்கு தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் சசிகலா, கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவை சென்றடைகிறார். மாலை 4 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் அவர் கவுந்தம்பாடி நான்கு ரோடு, கோபி செட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

    மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலும் தொண்டர்களை சந்திக்கிறார்.

    இதில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.
    • டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச சசிகலா திட்டமிட்டுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்களும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததாலும் அ.தி.மு.க. சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவியது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையின்கீழ் அ.தி.மு.க. வந்தது. ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகும் அ.தி.மு.க.வில் இணைந்து தலைமைப் பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின் எண்ணம் ஈடேறவில்லை.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தொடங்கிய அ.ம.மு.க.வில் சசிகலாவுக்கு தலைவர் பதவியை கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சசிகலா அதை ஏற்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு சென்று விட்டால் அதன்பிறகு அ.தி.மு.க.வுக்குள் செல்ல முடியாது என்பதாலேயே சசிகலா டி.டி.வி.தினகரனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் இப்போது அ.ம.மு.க. தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்க டி.டி.வி. தினகரன் தயாராகிவிட்டார்.

    தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை பிரிப்பார்கள். அதை ஈடுகட்ட தன்னை அ.தி.மு.க. வுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பார் என்று சசிகலா எதிர்பார்த்தார். அதற்காகவே வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்கு செல்வதை கூட தவிர்த்தார் என்கிறார்கள். ஆனால் எடப்பாடி தரப்பில் இருந்து அதற்கான சமிக்ஞை எதுவும் கிடைக்காதது சசிகலாவை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேரையும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    எனவே இதுவரை பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி வந்த சசிகலா தன்னால் முடியாததால் வேறு வழியை கையில் எடுத்துள்ளார்.

    அதாவது டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வில் நிலவும் இந்த சிக்கல்களுக்கு அமித்ஷா மூலம் தீர்வு காண அவர் முடிவு செய்து உள்ளார்.

    ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். அதுதான் கூட்டணிக்கு பலம் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அமித்ஷா. இந்த சூழ்நிலையில் சசிகலாவின் வேண்டுகோளை ஏற்று இணைப்புக்கான முயற்சியில் அவர் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தனி அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டபோராட்டம் நடத்தி கட்சியை தன்வசப்படுத்தினார். பெருவாரியான தொண்டர்கள் பலமும் அந்த தரப்புக்கே உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான அணியாக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்த பா.ஜனதா தலைவர்கள் இதுவரை எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

    இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த 3 பேரையும் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    இதுவரை அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    இப்போது அதையே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொல்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமியை சேர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளார். அதே நேரம் மோடிதான் பிரதமர். பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது. அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பா.ஜனதா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பா.ஜனதாவின் இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க பா.ஜனதா விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பா.ஜனதா விதிக்கக்கூடாது. நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    • தி.மு.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியவில்லை.
    • அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களை களையெடுக்கவும் அடுத்த கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கிவிட்டதால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த ஆதரவாளர்களின் கட்சி செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளதால் கட்சி ரீதியான செயல்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் வலுவாகி விட்டது.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க.தான் அதன் முதல் எதிரி. தி.மு.க. செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன் அதை விமர்சனம் செய்வது, போராட்டம் நடத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது.

    அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னரை சந்தித்து முறையிடுவது ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றிலும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.தான் முன்னின்று நடத்தி உள்ளது.

    இந்த விஷயத்தில் தி.மு.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் சோர்வடைய தொடங்கி விட்டனர். இனி எதிர்காலம் என்ன ஆகுமோ? என விரக்தியில் உள்ளனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்களை களையெடுக்கவும் அடுத்த கட்டமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கட்சியில் செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களை மாற்றி விட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் எடப்பாடி பழனிசாமி பட்டியல் தயாரித்து வருகிறார்.

    அ.தி.மு.க.வில் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை பணி வேகமாக நடந்து வருவதால் அந்த பணிகள் முடிந்ததும் கட்சி பொறுப்புகளுக்கு புதிய நபர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை பார்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும். ஒரே அணியாக செயல்பட வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டது. உள்துறை மந்திரி அமித்ஷா, நட்டா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.

    சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்த்தால் குழப்பம்தான் வரும். எனவே அவர்களை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனது பலத்தை காட்டும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி வந்த சசிகலாவால் அதில் வெற்றி பெற முடியாமல் சோர்வடைந்துவிட்டார்.

    சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி வந்த சசிகலா முதலில் கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட போவதாக கூறினார்.

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிப்பாக ஒன்று சேர்ப்பதாகவும் கூறி வந்தார். தி.மு.க. எனும் தீயசக்தியை ஒழிக்க அ.தி.மு.க. ஒன்றிணைவது அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் கூறி வந்தார்.

    ஆனால் அவரது பேச்சுக்கு அ.தி.மு.க.வில் யாரும் செவி சாய்க்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் சசிகலாவை சந்திக்க இயலாமல் உள்ளார்.

    சமீபத்தில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் இல்ல திருமணம் தஞ்சாவூரில் நடந்தது. அதற்கு சசிகலாவை அழைத்து தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரையும் ஒருங்கிணைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அந்த திருமண விழாவுக்கு சசிகலா செல்வதை தவிர்த்து விட்டார்.

    அண்மையில் டி.டி.விதினகரனை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் இன்னும் அவரால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்திக்கும் முயற்சிக்கு சசிகலா பிடி கொடுக்காமல் இருக்கிறார். அரசியலில் சசிகலாவின் மறுபிரவேசம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியை நோக்கிதான் செல்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர் கூறுகையில், அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை சேர்த்தால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். மீண்டும் கோஷ்டி உருவாகும். அதனால் தான் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தவிர மற்ற யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

    அதற்கேற்ப டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் இருந்து பெரும்பான்மையான ஆட்கள் அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டனர். ஒரு சிலர்தான் டி.டி.வி.பக்கம் உள்ளனர். அவர்களும் தேர்தல் நெருங்க நெருங்க எங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இதேபோல் தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ளவர்களும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது.
    • இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியிருப்பது துரதிஷ்டவசமானது. அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை.

    ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது.

    இதை பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுகளுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன். அதேசமயம் அம்மா உணவகம் தந்து ஏழை-எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.

    இதுபோன்ற கருத்துகளால் தி.மு.க.வினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். எனவே பொறுப்பற்றவர்கள் பேசும் இதுபோன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் வைத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா தனது வருங்கால அரசியல் பயணம் குறித்து விஜயசாந்தியுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    அப்போது அவர் அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்றும், அ.தி.மு.க.க்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சிலர் மட்டுமே தன்னை எதிர்க்கிறார்கள் என்றும் சசிகலா கூறி இருந்தார்.

    இப்படி அ.தி.மு.க.வை மீட்க சசிகலா ரகசிய திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி வருகிறார்.

    இது தொடர்பாக கடந்த வாரம் சசிகலா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுக்கு தான் நிச்சயம் தலைமை தாங்குவேன். அதற்கான நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சசிகலாவை பா.ஜனதா முன்னாள் எம்.பி.யான விஜயசாந்தி சமீபத்தில் ரகசியமாக சந்தித்துள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நேரத்தில் தி.நகரில் உள்ள இல்லத்தில் வெளிப்படையாக சந்தித்த விஜயசாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரகசியமாக சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது சசிகலாவின் வருங்கால அரசியல் பயணம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி கட்டுப்படுத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே விஜயசாந்தி சசிகலாவை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


    தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை தி.நகரில் இன்று திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- அ.தி.மு.க. விரைவில் ஒன்றிணையும், ஆட்சிக்கு வரும் என்று கூறி இருந்தீர்கள்? ஆனால் இதுவரை அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் உங்களை சந்திக்கவில்லை. எந்த அடிப்படையில் அது போன்று தெரிவித்தீர்கள்?

    பதில்:- அது தொண்டர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் தான் நான் கூறினேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் கூட்ட போவதாக கூறி இருக்கிறார்களே?

    பதில்:- எதை செய்தாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. ஏனென்றால் தொண்டர்கள் அவர்களுடன் இல்லை.

    கேள்வி:- அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவருமே உங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்களே?

    பதில்:- எல்லோரும் பேசவில்லை. ஒரு சிலர் பேசுகிறார்கள். அவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்பதற்காக கூட பேசலாம் இல்லையா?

    கேள்வி:- உங்களை அ.தி.மு.க.வில் இணைக்கவே முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்களே?

    பதில்:- இதனை சொல்வதற்கு அவர்கள் யார்? அ.தி.மு.க.வில் யார் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பதை தலைவர் சொல்லி இருக்கிறார். அதன்படி பார்த்தால் தொண்டர்கள்தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.

    கேள்வி:- அ.தி.மு.க. சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளதே?

    பதில்:- அ.தி.மு.க. எந்த விஷயத்திலும் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை.

    அதனால் தலைமைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    கேள்வி:- தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை எப்படி பார்க்கிறீர்கள்? நேற்று கூட பா.ஜனதா பிரமுகர் ஒருவர் போலீஸ் பாதுகாப்பு இருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளாரே?

    பதில்:- தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. போலீஸ் துறையை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் அந்த துறை உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.

    கேள்வி:- அ.தி.மு.க.வை சட்ட ரீதியாக மீட்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறதா?

    பதில்:- பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக எப்படி கூறுகிறீர்கள். இது சுப்ரீம் கோர்ட்டு முடிவா என்ன?

    கேள்வி:- அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய போகிறீர்கள்?

    பதில்:- அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் விரைவில் மேற்கொள்ள உள்ளேன்.

    கேள்வி:- அ.தி.மு.க. தலைவர்கள் தற்போதும் தொடர்பில் உள்ளனரா?

    பதில்:- இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். யார்-யார் என்பதை வெளியில் செல்ல முடியாது.

    இவ்வாறு சசிகலா கூறி உள்ளார்.

    ×