search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sachin Tendulkar"

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 - ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • விழாவில் பங்கேற்க முக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    கிரிக்கெட் உலகின் முன்னணி வீரரான சச்சின் டெண்டூல்கருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் சச்சின் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனைதொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தோனியையும் அவரது மனைவியையும் நேரில் சந்தித்து விழா அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் தோனி இந்த விழாவில் பங்கேற்பாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட் வீரர் விராட் கோலி-க்கும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோலி கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதால் இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.
    • கடைசி போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார்.

    பெங்களூர்:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஆட்டம் இருமுறை சூப்பர் ஓவர் சென்றது. இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

    இந்த போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆகினார்.அவர் டி20 போட்டிகளில் முதன்முறையாக டக் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 6 ரன்கள் எடுத்து இருந்தால் அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 12000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டி இருப்பார்.

    டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அளவில் சர்வதேச போட்டிகளில் அதிக டக் அவுட் ஆன முழு நேர பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இதுவரை சச்சின் 34 டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்தார். அதை முறியடித்த கோலி 35 டக் அவுட்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    டக் அவுட் ஆன அனைத்து இந்திய வீரர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜாகிர் கான் 44, இஷாந்த் சர்மா 40, ஹர்பஜன் சிங் 37, அனில் கும்ப்ளே 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து தற்போது விராட் கோலி 35 டக் அவுட் ஆகி இருக்கிறார்.

    • இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
    • அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.

    கர்நாடகாவில் ஒரு உலகம்- ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இந்த போட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இதில் சச்சின் டெண்டுல்கர்- யுவராஜ் சிங் தலைமையில் 2 அணிகள் களமிறங்கினர். ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய போட்டி என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 (41) ரன்கள் எடுத்தார். இறுதியில் யூசுப் தான் அதிரடியாக 38 (24) ரன்களும் கேப்டன் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (10) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். ஒரு உலகம் சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஒரு உலகம் அணியில் நமன் ஓஜா 25 ரன்களில் வாஸ் வேகத்திலும் சச்சின் டெண்டுல்கர் 27 ரன்கள் ரன்களில் முத்தையா முரளிதரன் சுழலிலும் அவுட்டானார்கள். அடுத்த வந்த அல்வீரோ பீட்டர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மறுமுனையில் உப்புள் தரங்கா 29, சுப்பிரமணியம் பத்ரிநாத் 4, ஹர்பஜன் 4 ரன்களில் அவுட்டானார்கள்.

    தொடர்ந்து அசத்திய அல்விரோ பீட்டர்சனும் 74 (50) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய சகோதரர் யூசுப் பதான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த இர்பான் பதான் போட்டியை முடித்து வைத்தார். இதன்மூலம் சச்சின் தலைமையிலான அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "டைமிங்" மற்றும் "ஷாட் செலக்ஷன்" ஆகியவற்றில் ஹனிஃப் கை தேர்ந்தவர்
    • 1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹனிஃப் சாதனை புரிந்தார்

    "லிட்டில் மாஸ்டர்."

    கிரிக்கெட் விளையாட்டில் இந்த பட்டத்தை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar); அதற்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar).

    1971லிருந்து 1987 வரை கவாஸ்கர் இந்தியாவிற்காக 125 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.

    டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள், 34 சென்சுரிகள், 50க்கும் மேல் சராசரி ரன் குவிப்பு என பெரிய சாதனைகளை புரிந்ததால், சுனில் கவாஸ்கர் "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்படுவது பொருத்தம்தான். டெஸ்ட் விளையாட்டில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் அந்தஸ்தை பெற்றவரும் கவாஸ்கர்தான்.

    பவுன்சர்களுக்கு சாதகமான விக்கெட்டுகளில், ஹெல்மெட் அணியாமல், உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சிறப்பாக விளையாடியது அவரது சாதனைக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

    ஆனால், முதல் முதலாக "லிட்டில் மாஸ்டர்" என அழைக்கப்பட்ட சிறப்பான வீரர், கவாஸ்கர் அல்ல.


    பாகிஸ்தான் அணியை சேர்ந்த பேட்ஸ்மேன், ஹனிஃப் மொகம்மது (Hanif Mohammad), அப்பட்டத்திற்கு சொந்தமானவர்.

    1952லிருந்து 1969 வரை அந்நாட்டிற்காக 55 டெஸ்ட் மேட்சுகள் விளையாடி, 3915 ரன்கள் குவித்த ஹனிஃப் மொகம்மது, 43.5 எனும் சராசரியில் ரன்களை குவித்தார்.

    பேட்டிங் செய்பவர்களுக்கு அவசியமான "டைமிங்" மட்டும் "ஷாட் செலக்ஷன்" ஆகிய இரண்டிலும் ஹனிஃப் கைதேர்ந்தவர்.

    டெஸ்ட் மேட்சுகளில் ஆசியாவிலிருந்து முதலில் 300 ரன்கள் அடித்த பெருமை ஹனிஃபிற்கு உண்டு.


    1958ல் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 970 நிமிடங்களில் 337 ரன்கள் அடித்து தோல்வியை நோக்கி சென்ற பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை எளிதாக்கினார்.

    2016 ஆகஸ்ட் 11 அன்று தனது 81-வது வயதில், நுரையீரல் நோய் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    முதல் லிட்டில் மாஸ்டரான ஹனிஃப் மொகம்மதுவின் சாதனையை பல வருடங்களுக்கு பின், 1997ல் இலங்கையின் சனத் ஜெயசூரியாவும், 2004ல் வீரேந்தர் சேவாக்கும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    • சச்சின் அணியில் இர்பான் பதான், அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • யுவராஜ் தலைமையிலான அணியில் யூசுப் பதான், முரளிதரன், மகாயா நீட்னி, சமிந்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார். சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதிலிருந்து எப்போதாவது சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது உண்டு.கொரோனா காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கேற்று வந்தார்.

    இந்த நிலையில் தற்போது பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சச்சின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். பெங்களூருவில் வரும் 18-ம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான மற்றொரு அணியும் விளையாட உள்ளது. சச்சின் அணியில் நமன் ஒஜா, பத்ரிநாத், இர்ஃபான் பத்தான், அசோக் டின்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    யுவராஜ் சிங் தலைமையிலான அணியில் பார்த்திவ் பட்டேல், முகமது கைஃப், யூசுப் பத்தான், ஜேசன் கிரிசா, முரளிதரன், மகாயா நீட்னி சமீன்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

    இந்த போட்டிக்காக சச்சின் டெண்டுல்கர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விராட்கோலி இளமையாக இருக்கிறார்.
    • கோலி விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.

    கொல்கத்தா:

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட்கோலி, டெஸ்டில் 29 சதம், ஒருநாள் போட்டியில் 50 சதம், 20 ஓவர் போட்டியில் ஒன்று என 80 சதங்கள் அடித்துள்ளார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலி முறியடிப்பார் என்று வெஸ்ட்இண்டீஸ் அணி முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிளைவ் லாயிட் கூறியதாவது:-

    விராட்கோலி இளமையாக இருக்கிறார். அவர் விளையாடும் விதத்தை பார்க்கும்போது அவர் விரும்பும் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவரது கையில் நேரமும் இருக்கிறது.

    விராட் கோலி, விவ்ரிச்சர்ட்ஸ் இருவரும், இரண்டு வகையான கிரிக்கெட் வீரர்கள். எனவே அவர்களை ஒப்பிட முடியாது. சர்வதேச போட்டி அட்டவணையில் அதிக டெஸ்ட் கிரிக்கெட் இடம் பெற வேண்டும். இருதரப்பு டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் இருக்க வேண்டும் என்றார்.

    • பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
    • மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.

    இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்

    நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

    நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 291 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுமியா சங்கர் - அனுமுள் களமிறங்கினர்.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி, சவுமியா சங்கரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ரன்கள் குவித்தது. அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு சதம் அடித்தார். 22 பவுண்டரி 2 சிக்சருடன் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து மண்ணில் சச்சின் சாதனையை சவுமியா முறியடித்துள்ளார். சச்சின் 2009-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 163 ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது வங்காளதேச வீரர் சவுமியா சங்கர் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் வங்காளதேச அணி வீரர்களில் ஒருவரின் தனிபட்ட அதிகபட்ச ரன்களில் சவுமியா சங்கர் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லிட்டன் தாஸ் (176) உள்ளார்.

    • டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
    • ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 80 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 50 சதம், டெஸ்டில் 29 சதம், 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு சதம்) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எட்டுவதற்கு இன்னும் 20 சதங்கள் தேவை. இப்போது கோலிக்கு 35 வயதாகிறது. ஆண்டுக்கு அவர் 5 சதங்கள் அடித்தாலும் கூட டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வதற்கு அவர் மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம். அப்போது அவருக்கு 39 வயதாகி விடும். இதன்படி பார்த்தால் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிக மிக கடினம்.

    இன்னும் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நிறைய வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் விளையாடி கூட 20 சதங்களை எடுத்ததில்லை. கோலியால் இதை செய்ய முடியாது என்று சவால் விடமாட்டேன். ஆனால் உங்களுடைய வயது எப்போதும், எதற்காகவும் நிற்காது. கோலியால் பல சாதனைகளை படைக்க முடியும். என்றாலும் 100 சதம் என்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது.

    அதே நேரத்தில் கோலியால் மட்டுமே இச்சாதனையை நெருங்க முடியும். அவரது கட்டுக்கோப்பான பேட்டிங், ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு நான் ரசிகன். ஒவ்வொரு போட்டிக்கும் அவர் தயாராகும் விதம், அதற்காக அவர் வழங்கும் கடின உழைப்பு இவற்றை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு எப்படி ரசிகராக இல்லாமல் இருக்க முடியும். டெண்டுல்கர் போன்று அவரும் 100 சதங்கள் அடித்தால் மகிழ்ச்சி அடைவேன். டெண்டுல்கர் எனது அன்பான நண்பர். ஏற்கனவே சொன்னது மாதிரி விராட் கோலிக்கு நான் தீவிர ரசிகன்.

    இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் திறமை வாய்ந்த பேட்டராக இந்தியாவின் சுப்மன் கில் திகழ்கிறார். வரும் ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் களத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்துவார். அவரால் என்னுடைய சாதனைகளையும் தகர்க்க முடியும். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் பட்சத்தில், என்னுடைய முதல்தர கிரிக்கெட் சாதனையையும் (501 ரன்), டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது அதிகபட்ச ரன் சாதனையையும் (400 ரன்) நிச்சயம் தாண்ட முடியும்.

    சுப்மன் கில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் செஞ்சுரி அடிக்கிறார். ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகரமான இன்னிங்ஸ் ஆடியுள்ளார். வருங்காலத்தில் அவர் நிறைய ஐ.சி.சி. தொடர்களை வெல்வார்.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    • விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
    • 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.

    மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 

    இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

    விராட் கோலி 50-வது சதத்தை அடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை.


    இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேட்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.
    • ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×