search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஓய்வு பெற்ற வீரர்கள் மோதிய டி20 கிரிக்கெட்: யுவராஜ் அணியை வீழ்த்திய சச்சின் அணி
    X

    ஓய்வு பெற்ற வீரர்கள் மோதிய டி20 கிரிக்கெட்: யுவராஜ் அணியை வீழ்த்திய சச்சின் அணி

    • இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
    • அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது.

    கர்நாடகாவில் ஒரு உலகம்- ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இந்த போட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இதில் சச்சின் டெண்டுல்கர்- யுவராஜ் சிங் தலைமையில் 2 அணிகள் களமிறங்கினர். ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய போட்டி என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    அதன்படி களமிறங்கிய ஒரு குடும்பம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 (41) ரன்கள் எடுத்தார். இறுதியில் யூசுப் தான் அதிரடியாக 38 (24) ரன்களும் கேப்டன் யுவராஜ் சிங் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 (10) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். ஒரு உலகம் சார்பில் ஹர்பஜன் சிங் 2, ஆர்பி சிங், அசோக் டின்டா, மாண்டி பனேசர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஒரு உலகம் அணியில் நமன் ஓஜா 25 ரன்களில் வாஸ் வேகத்திலும் சச்சின் டெண்டுல்கர் 27 ரன்கள் ரன்களில் முத்தையா முரளிதரன் சுழலிலும் அவுட்டானார்கள். அடுத்த வந்த அல்வீரோ பீட்டர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மறுமுனையில் உப்புள் தரங்கா 29, சுப்பிரமணியம் பத்ரிநாத் 4, ஹர்பஜன் 4 ரன்களில் அவுட்டானார்கள்.

    தொடர்ந்து அசத்திய அல்விரோ பீட்டர்சனும் 74 (50) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தன்னுடைய சகோதரர் யூசுப் பதான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த இர்பான் பதான் போட்டியை முடித்து வைத்தார். இதன்மூலம் சச்சின் தலைமையிலான அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    Next Story
    ×