search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலத்தீவு"

    • மாலத்தீவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியே நடவடிக்கை எடுத்தார்.

    மாலத்தீவு அதிபராக முகமது முய்வு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர் எனப் பார்க்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் இந்தியா- மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என முகமது முய்வு கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், முதலில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இப்ராஹிம் முகமது சோலிஹ் கூறுகையில் "மாலத்தீவு அதிபர் முகமது முய்வு இந்தியாவிடம் கடன் சீரமைப்பு கேட்க விரும்புகிறார். ஆனால், நிதி சவால்கள் இநதியாவிடம் வாங்கிய கடன் காரணமாக ஏற்பட்டதில்லை.

    எனினும், நம்முடைய அண்டை நாடுகள் உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நாம் பிடிவாதத்தை கட்டாயம் நிறுத்த வேண்டம். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் காரணமாக ஏராளமானோர்கள் நமக்கு உதவிய செய்ய முடியும். ஆனால் முய்சு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை. முய்வு அரசு தற்போதுதான் நிலைமை புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர் என நினைக்கிறேன்" என்றார்.

    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முய்சு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வந்த நிலையில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுடன் மோதல் போக்கு, மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது.
    • விடுமுறை நாட்களில் இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர விரும்புகிறோம்.

    இந்தியாவுடன் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேலும் லட்சத்தீவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவுடன் மோதல் போக்கால் மாலத்தீவில் சுற்றுலா கடுமையாக பாதித்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவுடன் மோதல் போக்கு, மாலத்தீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலத்தீவு மக்களும் வருந்துகிறார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.

    இது நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்திய மக்களிடம் மாலத்தீவு மக்களின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன். விடுமுறை நாட்களில் இந்திய மக்கள் மாலத்தீவுக்கு வர விரும்புகிறோம். எங்கள் விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது.

    மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, இந்திய ராணுவ வீரர்களை வெளியேறச் சொன்னபோது, இந்தியா மாலத்தீவு அரசாங்கத்திடம் நாம் விவாதிப்போம் என்று கூறியது. இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் இந்தியா வரலாற்றுப் பொறுப்பான அணுகுமுறையை கொண்டுள்ளது.

    அதிபர் முய்சு ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர் புகைக் குண்டுகளை வாங்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இவைகள் தேவை என்று அரசாங்கம் நினைத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. துப்பாக்கிக் குழல் மூலம் ஆட்சி நடைபெறக்கூடாது.

    மாலத்தீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமே அல்ல. அது உபகரணங்களை கையகப்படுத்துதல் ஆகும் என்றார்.

    • சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
    • சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது.
    • இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

    இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சியாங்யாங் ஹாங்-03 என்ற உளவுக்கப்பல் மாலத்தீவை நோக்கி வந்தது.

    4300 டன் எடை கொண்ட இந்த கப்பல், ஆய்வுப்பணிகளுக்காக மாலத்தீவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பபட்டது. இந்திய பெருங்கடல் வழியாக சென்ற சீன உளவுக்கப்பல் கடந்த 22-ந்தேதி மாலத்தீவை சென்றடைந்தது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ள திலா புஷி துறைமுகத்தில் சீன உளவுக்கப்பல் நிலைநிறுத்தப்பட்டது.

    உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சீன கப்பல் நுண்ணுயிர் மரபணு ஆய்வு, உப்புத் தன்மை, நீருக்கடியில் கனிம ஆய்வு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலத்தீவு துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் ஒரு வாரத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீன கப்பல் மாலத்தீவு கடற்கரையை விட்டு வெளியேறியதாக மாலத்தீவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்ட போதிலும் கப்பலின் கடைசி சிக்னல் மாலத்தீவின் ஹுல்ஹு மாலே அருகே காட்டின என்றும் தெரிவித்தது.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி இந்திய படைகள் வெளியேற்றம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

    மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

    ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

    • இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது.
    • இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் சீனா காட்டி வருகிறது.

    பீஜிங்:

    இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மேலும், பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

    இதற்கிடையே, சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் வழியாக நுழைந்து மாலத்தீவை நோக்கி சென்றது.

    பாதுகாப்பு கருதி இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது.

    இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் இன்று மாலத்தீவை வந்தடைந்துள்ளது. ஆராய்ச்சிக்காக மட்டுமே கப்பல் சென்றுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

    ஆராய்ச்சி கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வந்துள்ள இந்த கப்பல் 4,300 டன் எடை உடையது. இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கை பேரிடருக்கான சாத்தியக் கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

    • மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்வு சீனாவுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வருகிறார்.
    • ராணுவம் தொடர்பான இந்தியா உடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க மாலத்தீவு மறுத்து விட்டது.

    மாலத்தீவில் உள்ள விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தது. மனிதாபிமான அடிப்படையிலான உதவி, மருத்துவ பொருட்கள் தொடர்பான உதவி ஆகியவற்றிற்காக பயன்படுத்தி வந்தது.

    புதிதாக பதவி ஏற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மார்ச் 10-ந்தேதி மூன்று தளங்களில் ஒன்றில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறும். மே 10-ந்தேதி மேலும் இரண்டு தளங்கள் என முற்றிலுமாக இந்திய ராணுவம் வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மாலத்தீவு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்றத்தில் பேசிய மகமது முய்சு "எந்தவொரு நாடும் எங்களது நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது அல்லது குறைந்து மதிப்பிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்திய ராணுவம் வெளியேறும்" என்றார்.

    87 இடங்களை கொண்டிருக்கும் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகளான எதிர்க்கட்சிகளான எம்.டி.பி. (43), ஜனநாயக கட்சி (13) எம்.பி.க்கள் முகமது முய்சுவின் பேச்சை புறக்கணித்தனர். நிர்வாகப் பதவியை பெறுவதற்கான ஏழு எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 80 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் 24 எம்.பி.க்கள் முன்னிலையில்தான் முகமது முய்சு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப்படை மார்ச் 15-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதுதொடர்பாக இருநாடுகள் இடையே சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று டெல்லியில் 2-வது கட்டமாக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரமாக செயல்பட்டு தீர்வு காண ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணுதல், நடப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களை விரைவுபடுத்துதல் உள்பட இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்து இருதரப்பும் விவாதங்கள் தொடர்ந்தன.

    மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் ராணுவ வீரர்களை மார்ச் 10-ந்தேதிக்குள் இந்திய அரசு திரும்பப்பெறும். மற்ற இரண்டு தளங்களில் உள்ள ராணுவ வீரர்களை மே 10-ந்தேதிக்குள் திரும்பப்பெறும். இதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்று தெரிவித்தது. மேலும் உயர்மட்ட குழுவின் அடுத்த கூட்டத்தை மாலத்தீவு தலைநகர் மாலேயில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி.
    • தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும்.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாலத்தீவு நாட்டின் ஜூம்ஹூரீ கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.

    முன்னதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், குவாசிம் இப்ராஹிம் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு நாடாகவும் இருக்கட்டும், குறிப்பாக அண்டை நாடு பற்றியும், உறவில் விரிசல் ஏற்படும் வகையிலும் நாம் பேசக்கூடாது. நம் நாட்டிற்கென கடமை உள்ளது, அதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடமையை கருத்தில் கொண்டுதான் ஜனாதிபதி சொலிஹ் இந்தியா அவுட் பிரசாராத்திற்கு தடை விதித்தார்."

    "இந்த தடை உத்தரவை அதிபர் முய்சு ஏன் ரத்து செய்யவில்லை என முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி உத்தரவை ரத்து செய்யக் கூடாது, இது தேசத்திற்கே பெரிய இழப்பாக மாறிவிடும். இப்படி நடக்கக்கூடாது. இப்படி செய்யாதீர்கள் என முய்சுவிடம் நான் கூறுவேன். மேலும், சீனா பயணத்திற்கு கூறிய கருத்துக்களுக்கு, முகமது முய்சு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது.
    • அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது.

    மாலி:

    இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா.

    மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மேலும், பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சீனா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தியாவிற்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து வரும் சீனா தற்போது மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. மாலத்தீவுடனான சீனாவின் நெருக்கம் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீன உளவுக்கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளது. அது மாலத்தீவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தங்கள் கடற்கரையில் வெளிநாட்டுக் கப்பல்கள் நுழைய இலங்கை தடை விதித்த நிலையில், அங்கு செல்லவிருந்த சீன உளவு கப்பல் மாலத்தீவை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

    • ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் சிற்றுண்டி.
    • சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம்.

    பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்ததையடுத்து அந்த அமைச்சர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    மத்திய அமைச்சரகள் தொடங்கி அரசியல் கட்சியினர், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் மாலத்தீவை கண்டித்ததோடு லட்சத்தீவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

    இந்நிலையில் டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள பாதுரா என்ற உணவகம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு லட்சத்தீவு முன்பதிவு அல்லது ரத்து செய்யப்பட்ட மாலத்தீவு பயணங்களுக்கு ஒரு தட்டு சோலே பத்தூர் எனப்படும் ஒரு வகையான காலை சிற்றுண்டி தருவதாக தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், "இந்த சலுகையின் மூலம் லட்சத்தீவின் சுற்றுலா பயணத்தை மேம்படுத்த விரும்புகிறோம். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்த சலுகையை நீடிக்க விரும்புகிறோம்" என்றார்.

    • முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்தார்.
    • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அணிசேரா அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா சென்றார். அங்கு மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் "இரு நாடு உறவுகள் பற்றி வெளிப்படையாக உரையாடினோம்., மேலும் அணிசேரா அமைப்புத் தொடர்பான விவகாரம் குறித்தும் விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மலாத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் தனது எக்ஸ் பக்கத்தில், "அணிசேரா அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவது, மாலத்தீவில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்துவது, சார்க் மற்றும் அணிசேரா அமைப்பின் ஒத்துழைப்பு குறித்து உரையாடினோம். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி விரிவாக்குவது குறித்தும் விவாதித்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2023ம் ஆண்டு மாலத்தீவில் நடந்த தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். சீன ஆதரவாளரான அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    ஜனவரி 8-ஆம் தேதி சீனா சென்ற முகமது முய்சு, மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தினைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை மாலத்தீவிலிருந்து வெளியேற அறிவுறுத்தும் அறிவிப்பு வந்தது.

    முன்னதாக, இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து மாலத்தீவு அமைச்சர்களான மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் சர்ச்சையான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதுகுறித்து முகமது முய்சு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.

    மாலத்தீவு உனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ×