என் மலர்
நீங்கள் தேடியது "indvsaus"
- இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார்.
- பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.
மொகாலி:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிறகு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 71 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறிய நிலையில், கேமரான் கிரீன் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட கேமரான் கிரீன் 61 ரன்கள் விளாசினார். ஸ்மித் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜோஸ் இங்லிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பரபரப்பான கடைசி கட்டத்தில், டிம் டேவிட், மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தனர். டிம் டேவிட் 18 ரன்களும், மேத்யூ வேட் 45 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 23ம் தேதி நடக்கிறது.
- அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். குறிப்பாக கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் சிக்சர் விளாசி அசத்தினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார். ஹேசில்வுட் 2 விக்கெட், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.