search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsAUS"

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்தது.

    ராய்ப்பூர்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

    முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

    மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    • ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.

    இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகின்றன.
    • இந்த தொடரின் முதல் இரு போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    கவுகாத்தி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கவுகாத்தியில் இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதையடுத்து, இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார்.

    தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    இதில், முதலாவதாக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் தலா 19 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, ஜோஷ் இங்லீஸ் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், டிம் டேவிட் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    14 ஓவரில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வாடே களத்தில் விளையாடினர்.

    இதில், மார்கஸ் 45 ரன்களில் அவுட்டானதை அடுத்து, மேத்யூ வாடேவுடன் சியோன் அபாட் விளையாடி ஒரு ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, நாதன் எல்லிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

    16 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் எடுத்திருந்தது.

    20 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

    17வது ஓவரில் ஆடம் சம்பாவும் ஒரு ரன்னில் அவுட்டானதை அடுத்து தன்வீர் சங்கா களமிறங்கினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து டி20 தொடரில் 2வது ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் கண்டனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்கினர்.

    முதலாவதாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஜோடியில், யாஷஸ்வி 25 பந்துகளில் அரை சதம் அடித்து 53 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடரந்து, ருத்துராஜ்- இஷான் கிஷான் ஜோடி களத்தில் இருந்தது. இதில், இஷான் கிஷான் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    18 ஓவரில் ருத்துராஜூடன் ரிங்கு சிங் களத்தில் இருந்தார். இதில், ருத்துராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ரங்கு சிங்குடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இதில், ரிங்கு சிங் 31 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை குவித்தது.

    இதன்மூலம், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை 2023 தொடரை தொர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

    அந்த வகையில், திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 26) நடைபெறும் 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியை போன்ற இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. 

    இந்திய அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இன்றும் களம் காண்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் பெரன்டோர்ஃப்க்கு மாற்றாக ஆடம் ஜாம்பாவும், ஹார்டிக்கு மாற்றாக மேக்ஸ்வெல் களமிறங்குகின்றனர்.

    • கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர்.
    • மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் சதம் (110) அடித்தார். பின்னர் விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 80 ரன்னும், இஷான்கிஷன் 58 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். ஆனால் அது 'நோ-பால்' ஆக வீசப்பட்டதால் சிக்சர் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    மைதானத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் நெருக்கடியில் இருந்தோம். ஆனால் அதில் இருந்து ஒவ்வொரும் மீண்டு வெற்றி பெற்றது சிறப்பானது.

    கேப்டன் பொறுப்பு என்பது ஒரு பெருமையான தருணம். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். இன்று நான் கேப்டனாக அறிமுகமாகி விளையாடியது மிகப்பெரிய தருணமாக நினைக்கிறேன்.

    இந்த போட்டியின் போது 2-வது பாதியில் பனி இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பனி தாக்கம் இல்லை. இந்த மைதானம் சிறியது என்று தெரியும். இதனால் 230 ரன்கள் இலக்கு வரும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினர். 16-வது ஓவருக்கு பிறகு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இது அற்புதமானது.

    இஷான் கிஷனிடம், இலக்கை பற்றி நினைக்காமல் உங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். 10 ஓவர்களுக்கு பிறகு சேசிங் செய்ய வேண்டிய ரன்கள் எவ்வளவு என்று பார்த்து கொள்ளலாம் என்று கூறினேன்.

    இதனால் ரன் இலக்கை தொட முடிந்தது. ரிங்கு சிங் அருமையாக போட்டியை முடித்து வைத்தார். நான் கேப்டன்சியை டிரஸ்சிங் ரூமில் விட்டு விட்டேன். நான் 10 அல்லது 40 பந்துகளில் பேட்டிங் செய்தாலும் ரசித்து விளையாட முயற்சித்தேன். மைதானத்தில் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு அணிகள் மோதும் 2-வது இருபது ஓவர் போட்டி 26-ந்தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. 209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 21 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

    அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 39 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். தொர்ந்து, திலக் வர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், சூர்யகுமார் 80 ரன்களை குவித்து அவுட்டானார்.

    18 ஓவர் முடிவில், ரங்கு சிங்- அசார் பட்டேல் ஜோடி களத்தில் இருந்தது. இதில், ரங்கு சிங் 21 ரன்களும், அசார் பட்டேல் 2 ரன்களும் எடுத்தனர். ரவி பிஷ்னோய் ரன் அவுட் ஆனார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஷார்ட் மற்றும் ஜாசன், சியான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.

    • ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
    • இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இங்லிஸ் 110 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

    • டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்.
    • பந்துவீச்சில் அர்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். இவர் தவிர ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா இடம்பெற்று உள்ளனர்.

    • உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா.
    • ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்று அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 240 ரன்களை மட்டுமே குவித்தது.

    அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை துரத்தியது. துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தணறிய ஆஸ்திரேலியா அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    22.1 ஓவரில் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 28-வது ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீசினார். லபுஷேன் எதிர்கொண்ட இந்த பந்து, அவரின் பேட்-ஐ தாக்கியது. விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டனர். எனினும், அவர் செவி கொடுக்காமல் விக்கெட்டை மறுத்தார்.

    உடனே இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார். மூன்றாவது நடுவர், இந்த பந்தை ரி-பிளே செய்து பார்த்தார். அதில் பந்து லபுஷேன் பேட்-இல் படாமல், நேரடியாக அவரது பேட்-இல் பட்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நடுவர் களத்தில் இருந்த அம்பயரின் முடிவே இறுதியானது என்பதை தெரிவிக்கும் வகையில் "அம்பயர்ஸ் கால்" என்ற தீர்ப்பை வழங்கினார்.

    போட்டியின் இந்த சூழலில் இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த போராடி வந்த நிலையில், அம்பயர்ஸ் கால் முடிவால் விக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பிறகு வேகம்பிடித்த லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில், போட்டியில் இந்திய அணி தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • இந்தியா சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தல். இன்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதன்படி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களையும், விராட் கோலி 54 ரன்களையும், கே.எல். ராகுல் 66 ரன்களையும் சேர்த்தனர். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

    இவரைத் தொடர்ந்து கலமிறங்கிய மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஸ்கோர் சீராக அதிகரித்தது. 

    அப்படியாக 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி வெற்றி இலக்கை எட்டி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா அணிக்கு டிராவில் ஹெட் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இவர் 137 ரன்களையும், லபுஷேன் 58 ரன்களையும் குவித்தனர்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    ×