search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protection"

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் 2-வது மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரி தலைமையில் நடந்தது.

    குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சோபனா, மதுரை வடக்கு துணை தாசில்தார் தனமூர்த்தி, மாநகராட்சி மண்டல அதிகாரி அகமத்இப்ராகிம், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 2-வது மண்டலத்தில் உள்ள கவுன்சிலர்கள் மாநகராட்சி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒருங்கிணைந்து கல்வி இடைநிற்றலை தடுத்தல், குழந்தைகள் பாலியல் தீங்கிழைப்பில் இருந்து தடுத்தல் தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருமண மண்டப உரிமையாளர்கள், கோவில் நிர்வாகங்களில் கூட்டம் நடத்தி மணமக்கள் அரசு நிர்ணயம் செய்த வயதை பூர்த்தி செய்துள்ளனரா? என்பதை சான்றிதழ் மூலம் உறுதி செய்த பிறகே திருமணத்துக்கு அனுமதிக்க வேண்டும், குழந்தைகளுக்கு குழந்தைகள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.

    தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #SriLankablasts
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

    இந்த நிலையில் இலங்கையில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 310 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, போலீசார் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #SriLankablasts

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும், பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களும் ராணிமேரி கல்லூரியில் வைக்கப்படும்.

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்த 3 இடங்களிலும் ஓட்டு எண்ணும் நாள் வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் அடுக்கு பாதுகாப்பில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் இருப்பார்கள். 2-வது அடுக்கு பாதுகாப்பில் ஆயுதப்படை போலீசார் பணியில் இருப்பார்கள். 3-வது அடுக்கு பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் ஓட்டு எண்ணப்படும் நாள் வரை தினமும் 1,000 போலீசார் சுழற்சி முறையில் காவல் பணி செய்வார்கள். ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தேவநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடிகளை பெற்றோருடன் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 19). எம்.வி.எம். கல்லூரியில் பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வேடசந்தூர் அடைக்கனூரைச் சேர்ந்தவர் கோபிசரவணன் (21). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    பஸ்சில் செல்லும்போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே நேற்று பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூரைச் சேர்ந்தவர் பெருமாள் (23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கூம்பூரைச் சேர்ந்த தேன்மொழி (19) என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    பெற்றோருக்கு பயந்து நேற்று திருச்சியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் தனத்தனியாக வரவழைத்து சமரசம்பேசி அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி அனுப்பி வைத்தனர்.

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #PChidambaram #DelhiHighCourt
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நேற்றைய வழக்கு விசாரணைக்குப்பின் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Chidambaram #INXMedia
    சபரிமலை விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan
    கண்ணூர்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கம்யூனிஸ்டு, பா.ஜனதா கட்சி தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், வெடிகுண்டுகள் வீச்சு சம்பவமும் நடந்து வருகின்றன.

    இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் தலச்சேரி பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.  #KeralaViolent #Sabarimala #PinarayiVijayan
    துறையூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தா.பேட்டை:

    துறையூர் தாலுகா முத்தையம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்பிரகாஷ். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

    இதையடுத்து கமல் பிரகாசும், அபிநயாவும் கடந்த சிலதினங்களுக்குமுன்பு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீசில் நேற்று முன்தினம் மணக்கோலத்தில் இருவரும் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த கமல்பிரகாசின் பெற்றோர்கள் இருவரையும் பார்த்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்து அழைத்து சென்றனர். 

    காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தது.

    வடமதுரை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வடமதுரை அருகே ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் மோகன் (22), காங்கேயம் பகுதியில் வேலைக்கு சென்றார்.

    அப்போது கவுதமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

    இந்த வி‌ஷயம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்பு கரூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். ஆனால் இருவரும் காதல் ஜோடியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

    மோகன், தனது காதல் மனைவியை தானே காப்பாற்றிக் கொள்வேன் எனக் கூறி காதல் ஜோடி தனியாக சென்று விட்டனர்.

    புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக இருந்தும் சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நாளைய தினம் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். காங்கிரஸ் நடத்தும் இந்த போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் இல்லை.

    நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் பெட்ரோல்- டீசல் விற்பனை வரியை 5 சதவீதம் குறைக்கலாம். பெட்ரோல்- டீசல் விலை ஏற்றத்தை நாங்களும் (அ.தி. மு.க.) எதிர்க்கிறோம்.

    கடந்த 15 நாட்களாக புதுவையில் அதிகார மோதல் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் காரைக்காலில் கவர்னர் கிரண்பேடி பேசும் போது தரமான அரிசியும், முறையான டெண்டரும் இல்லாததால் இலவச அரிசி வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இனி வருங்காலத்தில் இலவச அரிசி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்ப தாகவும் அவர் கூறி உள்ளார்.

    இந்த காங்கிரஸ் அரசு கடந்த 26 மாதங்களில் 10 மாதங்கள் மட்டுமே இலவச அரிசி வழங்கி உள்ளது. பட்ஜெட்டின் போது இலவச அரிசி திட்டங்களுக்கு ரூ.200 கோடிக்கு பதில் ரூ.120 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர்.

    இது கண்டிக்கத்தக்கது. கவர்னர் கிரண்பேடி காரைக்காலில் பேசியது அமைச்சர் கந்தசாமியை மிரட்டுவதற்காக இருக்கலாம். இலவச அரிசிக்கு முறைகேடாக டெண்டர் விட்டதிலும், தரமற்ற அரிசி கொள்முதல் செய்த அரசு அதிகாரிகள் மீதும் கவர்னர் நடவடிக்கை எடுப்பாரா?

    புதுவையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா துறையின் தவறான கொள்கை முடிவால் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது. பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் பெண் ஊழியர்கள் மானபங்கம், மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனது தொகுதியில் மது அருந்தும் பாருடன் கூடிய 3 ஓட்டல்கள் உள்ளன.

    நேற்றைய தினம் ஒரு ஓட்டலில் நடந்த இரவு நடனத்தில் பங்கேற்ற 2 வடமாநில பெண்களை அவர்களது ஆண் நண்பர்களை அடித்து உதைத்து விரட்டி விட்டு அந்த பெண்களை சிலர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். அந்த பெண்கள் அலறியடித்து கொண்டு இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்- அமைச்சர் சட்டம்-ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. இந்த அரசு கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் பெண் அதிகாரிகள் அதிகமாக உள்ளனர். கவர்னர், போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு என பெண்களே உள்ளனர். இவ்வளவு பேர் இருந்தும் புதுவை சுற்றுலா வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரி முதல்வருக்கு மார்க். கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். #vckravikumar

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் மாற்றுக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எதிர்கட்சியினர் கடுமையாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

    இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடாமல் தடுத்திட ரவிக்குமாருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #vckravikumar

    திண்டுக்கல் ரெயில் நிலையம் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    முருகபவனம்:

    திண்டுக்கல் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த பகுதியில் சேலம் வழியாக சென்னைக்கும், திருச்சி வழியாக சென்னைக்கும் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்லலாம். எனவே தான் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

    இந்த வழியாக சுற்றுலா தலம், ஆன்மீக தலத்துக்கும் செல்லலாம் என்பதால் ஏராளமான மக்கள் வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இங்கு இல்லை. ரெயில் நிலைய முகப்பில் சாமியார்கள் போர்வையில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் உலா வருகின்றனர்.

    அதோடு பிக்பாக்கெட் கொள்ளையர்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பயணிகளுக்கு உரிய அத்தியாவசிய எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மினரல் வாட்டர் என கூறப்படும் எந்திரம் உள்ளது. ஆனால் தண்ணீர் வராது.

    இது போன்ற ஏராளமான குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பயணிகளுக்கு உரிய வாகன காப்பகம் டெண்டர் விடாமல் முடங்கி கிடக்கிறது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் பல்வேறு சமயங்களில் திருடு போய் விடுகிறது.

    இது தவிர அனுமதியின்றி ஏராளமான வேன் மற்றும் கார்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் எச்சில் ஒழுகிக் கொண்டே நாய்கள் சுதந்திரமாக ஓடுகிறது. ஆடு மாடுகளும் ரெயில்வே தண்டவாளங்களை கடக்கின்றன.

    குட்ஷெட் பகுதியில் பல சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.#tamilnews
    ×